Posts

Showing posts with the label நட்பு

நான், நீங்கள், அவர்கள்..!

Image
குஷி திரைப்படம் வெளியான தருணம் அது. தொலைக்காட்சியில் அவ்வப்போது ஒளிபரப்பும் காட்சிகள் ஸ்வாரஸ்யமாய் இருக்கும். ஒரு சாயந்திர வேலையில் அம்மா , அப்பா , மாமா சகிதம் வரவேற்பறையில் பார்த்துக்கொண்டிருந்த காட்சி அது. விஜய் தொலைபேசியில் தன் அம்மாவிடம் ‘ ஐ லவ் யூ ’ சொல்லிக்கொண்டிருப்பார். நான் வெகு சாதாரணமாய் மாமாவின் பக்கம் திரும்பி “ விஜய் மாதிரி நீங்க உங்க அம்மாகிட்ட ஐ லவ் யூ சொல்லியிருக்கீங்களா மாமா ?“ என்றேன். அதற்கு அவர் என்ன பதில் சொல்லியிருப்பார் என்று இப்போதும் எனக்கு நினைவில்லை. மாற ாக அடுப்படியில் பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்த பாட்டியின் (மாமாவின் அம்மா) அழுகைச் சத்தம் அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது. என்ன ஏதேன எங்களுக்குப் புரியும் முன்னமே விருவிருவென வெளியே வந்தவள் “ எத்தாத்தன்டி வார்த்தை சொன்னா கேட்டியா ? இதையெல்லாம் கேட்டுகிட்டு நா உயிரோட இருக்கணுமா ?” என்று கத்த ஆரம்பித்தாள். நான் திரும்பவும் அதையே சொன்னேன். ” ஐ லவ் யூ சொல்லியிருக்கீங்களானு தானே கேட்டேன். வேற என்ன தப்பா கேட்டேன் ?“. மறுபடியும் ஆங்காரமாய் கத்த ஆரம்பித்தவளை அன்று முழுவதும் ஆளாளுக்கு சமாதானம் செய்து கொண்டிருந்த...

“அவனும் அவளும்“..

Image
“அவனும் அவளும்“ என்று ஆரம்பிக்கும்போதே கள்ளப்பார்வையும் காதலோ என்ற கேள்வியுமாய் அசட்டுச் சிரிப்புடன் ஆர்வமாய் பிரகாசிக்கிறாய்..! அருகருகே நடந்து செல்பவர்களை உற்று நோக்கி கலிகாலம் என்று காரி உமிழ்கிறாய்..! பயண நெரிசலில்கூட பக்கத்திலமர்வது பாவமென்று குறுக்கிக்கொள்கிறாய் உனக்கான யதார்த்தங்களை..! ரத்தமும் சதையுமான மனிதர்கள் என்பதைத்தாண்டி ஆணென்றும் பெண்ணென்றும் பாகுபடுத்திப் பாழாக்குகிறாய்..! தனித்துவமென்றும் தனிமைப்படுத்தலென்றும் தற்பெருமைபேசியே தள்ளிவைத்துப் பழக்குகிறாய்..! பலருடன் படுத்தெழுந்தாலும் “ஆண்“ என்ற ஜம்பத்தையும் நினைத்தாலே நடத்தை தவறிய “பெண்“ என்ற சமாளிப்பையும் கேட்டுக் கேட்டுப் பழகிய உனக்கு என்றுமே புரிவதில்லை பால் வேறுபாடில்லா தோழமையின் உறுதிப்பாடு..! கழுத்துக்குக் கீழே குறிவைக்கும் உனக்கு கண்கள் மட்டும் பார்க்கும் நட்பின் நிலைப்பாடு என்றுமே புரிதலுக்கு உட்படாத புதிர்தான்..! இச்சைக் குப்பைகள் குமிந்துகிடக்கும் உனக்கு என்றுமே பிடிபடப்போவதில்லை.. தாய்ப்பாலுக்கும் காமத்துப்பாலுக்குமான வித்தியாசங்கள்..!! . .

மனிதனும் சுய விருப்பமும்..!

வாழ்க்கை.. லட்சியம்.. என்பதைத் தாண்டி, அபத்தமான ஆசைகளும் மனிதனின் அடிமனதில் இருக்கக்கூடும். பொது இடங்களில் காதலர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் செய்யும் சில்மிஷங்கள் போல...! தனக்குப் பயன்படுகிறதோ இல்லையோ.. சில பொருட்களை எடுத்துவைத்துக்கொள்ளுதல் ( Kleptomania ) போல.. ஆசைகள் மற்றும் அதனை நிறைவேற்றிக்கொள்ள மனிதனின் முயற்சிகளைப் பற்றியும் சமீபத்தில் நண்பருடன் வாதம் நடந்தது. இயலும் எனில், தன் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள ஒருவனுக்கு சுதந்திரம் உண்டு. அது அல்பத்தனமான ஆசையாக இருப்பினும்.. என்று அவர் கூறினார். எதிலுமே சுய கட்டுப்பாடு வேண்டும். முடியும் என்பதற்காக முட்டாள்தனமானதையும் முயன்று பார்க்கக்கூடாது. ஒரு முறை தற்கொலை செய்துபார்த்தால் என்ன? என்று கூட ஆசை ஏற்படலாம். தன்னால் இயலும் என்பதற்காக அதை முயற்சித்துப் பார்ப்பது மடத்தனம் என்று நான் கூறினேன். அவனுடைய ஆசை அதுவெனில் விளைவுகளையும் அவன் தான் அனுபவிக்க வேண்டும். இது முட்டாள்தனம் அல்ல. இது ஒருவகையான “அறிந்துகொள்ளும் தன்மை“. ஒரு சிலருக்கு சில விஷயங்களில் ஒருவகை ஈர்ப்பு அல்லது த்ரில் தேவைப்படுகிறது. அதன்காரணமாக முயற்சி செய்கிறார்கள் ...

நட்போ..! காதலோ..!

Image
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள , எல்லைகள் கடந்து எதிர்த்துப்பேச , சலுகையில்லாது சண்டைகள் போட , விருப்பம் குறித்து வாதம் செய்ய , குறையிருப்பின் சுட்டிக்காட்ட , நிறையிருப்பின் தட்டிக்கொடுக்க , தளர்ந்துபோயின் தேற்றிவிட , கேள்விகளுக்கான பதில்சொல்ல , பதிலுக்குமோர் கேள்வியெழுப்ப , தேடலின்போது துணையாய் நிற்க.. என எப்போதும் எதிர்பார்க்கப்படுகிறது.. முகமூடியணியாத ஓர் நட்பு..! நம்மிடமோ.. நம்மால் பிறரிடமோ..!! . காமம் பிரதானமில்லை எனும்போது நட்போ..! காதலோ..! எதுவாகவோ இருந்துவிட்டுப் போகட்டும். என் உலகம் உனக்கானதுடன் பொருந்திப்போகிறது என்பதே எனக்குப் போதுமானது..! . .