Posts

Showing posts from February, 2011

நின்னைச் சரணடைந்தேன் (1)

Image
எழுந்ததிலிருந்தே உள்ளுக்குள் பதற்றமாகவே இருந்தான் சித்தார்த். அன்று தான் ரமேஷிற்குத் திருமணம். முதல் நாளே வரச்சொல்லி நண்பனிடமிருந்து அழைப்பு.. ஆனாலும் போக மனமில்லாது தங்கிவிட்டான். காரணம் சாஹித்யா. ரமேஷின் தங்கை. ஒரு காலத்தில் சித்தார்த்தின் காதலி. என்னதான் சித்தார்த்தின் காதலை ஏற்க மறுத்திருந்தாலும் மானசீகமாக மனைவியாக நினைக்கப்பட்டவள். கிட்டத்தட்ட நான்கு வருடங்களாகி விட்டது. சாஹித்யாவின் திருமணத்திற்கு கூட ரமேஷ் அழைத்திருந்தான். தன் காதலியின் திருமணத்தைப் பார்க்கும் தைரியம் யாருக்கு தான் இருக்கும்?? ஏதோ சாக்குகள் சொல்லி வரமறுத்துவிட்டான். காலத்தைக் கட்டுப்படுத்தும் வலிமை சித்தார்த்தின் கரங்களுக்கு எப்போதும் இருந்ததில்லை. ஆரம்ப நாட்களில் சாஹித்யாவின் நினைவலைகளில் மூழ்கி மீளமுடியாமல் தவித்து, சுயநினைவின்றி அலைந்து, வேறு வழியின்றி சூழ்நிலையின் பிடியில் சிக்கிக்கொண்டான். இதோ காயத்ரியின் கழுத்தில் புதிதாய் இவனது மாங்கல்யம், அம்மாவின் கடைசி ஆசை என்பதால் மறுக்க முடியவில்லை. “என்னங்க..“ ஏதோ யோசனையில் இருந்தவனை காயத்ரியின் குரல் கலைத்தது. என்ன, என்பதுபோல

ராசிப்பொண்ணுக்கு ஒரு வாழ்த்து..

Image
இப்படி வாழ்த்துப் பதிவு போட்றதுலயும் ஒரு வசதி இருக்குங்க.. பின்னூட்டம் போட்றவங்களுக்கு சிரமமே இருக்காது. தங்களோட கருத்துனு தனியா சொல்றதுக்கு எதுவும் இருக்காது.. மிஞ்சிப்போனா ரெண்டு வரில ஏதாவது வாசகம், இல்லேனா வெறுமனே “வாழ்த்துக்கள்“, ” பிறந்தநாள் வாழ்த்துக்கள் “ னு மட்டும் போடலாம் .. அதுவும் கூட முந்தின பின்னூட்டத்துல இருந்து Copy பண்ணி paste பண்ணிடலாம்.. சரிதானே???? (அதாவது தயவு செஞ்சு வாழ்த்திடுங்க ப்ளீஸ்..னு சொல்ல வரேன். ஏன்னு, பதிவப் படிச்சா உங்களுக்கே புரியும்.) சரி விஷயத்துக்கு வரேன்... எனக்கு ரெண்டு தங்கைனு ஏற்கனவே சொல்லிருக்கேன். (எப்ப“னு கேட்டு பல்பு குடுக்காதீங்க.. முந்தின ஏதோ ஒரு பதிவுல சொல்லிருக்கேங்க.) அதுல ரெண்டாவது தங்கைக்கு, அதாவது எங்க வீட்டு கடைக்குட்டிக்கு, வர்ற ஞாயித்துக் கிழமை (27.02.2011) பிறந்தநாள். (அதுக்கென்ன இப்ப“னு கேட்டும் பல்பு குடுத்துடாதீங்க). அவளுக்கு வாழ்த்து சொல்லுங்க.. தயவு செஞ்சு சொல்லிடுங்க ப்ளீஸ்.. “எனக்குப் பிறந்தநாள் வாழ்த்து சொல்லி பதிவு போடு“னு திரும்ப திரும்ப போன் பண்ணி அவளே கேட்டுகிட்டதால இத நா சொல்லல.. (

சில்ல்ல்லுனு ஒரு பதிவு...

Image
பனிகாலம் முடிஞ்சு வெயில் காலம் தொடங்கியாச்சு... வெயிலுக்கு இதமா ஒரு பதிவு போடணும்ல.. இங்க இருக்குற ஜூஸ், ஐஸ்க்ரீம்ல யாருக்கு எது வேணுமோ எடுத்துக்கங்க.. எதுவுமே வேணாம்னா கடைசியா இருக்குற தண்ணியவாவது (அட.. ஐஸ் வாட்டர்யா..) எடுத்துக்கங்க..

விற்கப்படும் அரசாங்க வேலைகள்..

Image
அரசாங்கப் பணி தொடர்பா எனக்கொரு இன்டர்வியூ வந்திருந்துச்சு. மொத்தம் ஐந்து பணியிடங்களுக்கு அறிவிச்சிருந்தாங்க. நானும் அப்ளிகேஷன் அனுப்பியிருந்தேன். போன வாரம் அதுக்கான ஹால் டிக்கெட் வந்திருந்தது. அதில் மூணு தேர்வுகள் திங்கட்கிழமையும், மீதி இரண்டு பணியிடங்களுக்கான நேரடி இன்டர்வியூ செவ்வாய்க் கிழமையும் இருப்பதாக சொல்லியிருந்தாங்க. நானும் போன திங்கட்கிழமை (அலுவலகத்துக்கு லீவு போட்டுட்டுப் போய்) அந்தத் தேர்வை எழுதினேன். தனித்தனியான மூணு எக்ஸாம் வச்சிருந்தாங்க. மறுநாள் மீதி இரண்டு பணியிடங்களுக்கான நேரடி இன்டர்வியூவும் நடத்தப்பட்டது. ஒரிஜினல் சர்டிபிகேட் சரிபார்த்து, வேலை சம்பந்தமா சில கேள்விகளும் கேட்டாங்க. ஒருவழியாக இரண்டையும் முடிச்சிட்டு வெளிய வரும்போது முந்தின நாள் (திங்கட்கிழமை) எழுதிய தேர்வுக்கான ரிசல்ட் அன்னைக்கு சாயந்திரம் 5 மணிக்கு இணையத்தில் வெளியிடப்படுதுனும் அதுல செலக்ட் ஆகுறவங்க மறுநாள் (புதன் கிழமை) காலை 10 மணிக்கு இன்டர்வியூவில் கலந்து கொள்ளனும்னும் சொன்னாங்க. நானும் சாயந்திரம் 5 மணில இருந்து இன்டர்நெட்ல பாத்தேன். 7.45க்கு தான் ரிசல்ட் வந்துச

கிறுக்கல்களுக்கு வயது ஒன்று

Image
போன வருஷம் இதே நாள் தான் என்னோட இந்த முதல் பதிவ எழுதினேன். அப்புறம் என்னென்னவோ கிறுக்க ஆரம்பிச்சு இன்னையோட ஒரு வருஷம் ஆய்டுச்சு. வலையுலகம் மூலம் எனக்குக் கிடைத்த நண்பர்களுக்கும் அவர்களின் நட்புக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்து என்னோட கிறுக்கல்களுக்கு வருகை தரும், தரப்போகும் நண்பர்களுக்கும் நன்றிகள். உங்கள் வாழ்த்துக்களும் ஆதரவுகளும் குட்டுக்களும் திட்டுக்களும் மென்மேலும் தொடர எதிர்நோக்கியபடி... நன்றிகளுடன்... ----------- இந்திரா . .

காதல் ஸ்பெஷல்...

Image
கைகளில் அழகுபடுத்திய மருதாணியுடன் புத்தகம் படித்துக்கொண்டிருந்தேன்.. கைபேசியில் பேசிக்கொண்டே எனைக் கடந்தபோது வெகுநேரம் முன்வந்து தொந்தரவு செய்த என் ஒற்றை முடியை காதோரம் ஒதுக்கி விட்டுச் சென்றாயே.. அந்த நொடியில்.. அருகமர்ந்து பேசியபடியே உன் தோள் சாய்ந்து தூங்கியிருந்தேன்.. ஏதும் சொல்லாமல் என் பக்கமாய் உன் தலையை சாய்த்துக்கொண்டாயே.. அந்த நொடியில்.. நானே செய்ததாகச் சொல்லி உன்னிடம் நீட்டிய பலகாரத்தை மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் “சூப்பரா இருக்குப்பா“னு சொல்லி சமாளித்தாயே.. அந்த நொடியில்.. பேருந்துப் பயணத்தின் கூட்டத்தினிடையே என்னை உற்று நோக்கிய யாரோ ஒருவனை எரித்துவிடுவதாய் பார்வை வீசினாயே.. அந்த நொடியில்.. ஒவ்வொரு முறையும் எனக்கான பிறந்தநாளை மறந்துவிட்டு, கோபித்துக்கொண்ட என்னை சமாதானம் செய்ய ஏதேதோ கோமாளித்தனங்கள் செய்வாயே.. அந்த நொடியில்.. புதிதாய் வாங்கிய பேனாவை எழுதிப்பார்க்க ஆசைப்பட்டு ஏதோ கிறுக்கினாய்.. என்னவென்பதை எடுத்துப் பார்க்க என் பெயர் இருந்ததே.... அந்த நொடியில்.. அழைபேசியில் வரும் கணிணி குரலை “சொல்லுடா செல்லம்“ என அழைத்து