அணுவைத் துளைத்து..
அணுமின் நிலையம் என்பது என்ன ? அதில் என்னென்ன ஆபத்துக்கள் இருக்கின்றன.. கதிர்வீச்சு.. புரோட்டான்.. நியூட்ரான்.. இன்னும் நிறைய நிறைய தகவல்கள் அடங்கிய நாவல் இது. அறிவியல் ரீதியாய் ஃபார்முலா சொல்லி குழப்பாம , முடிந்தவரைக்கும் புரியிற மாதிரி விளக்கியிருக்கிறார் செய்யாறு தி.தா.நாராயணன் . ( அப்படியுமே சில தகவல்களை உள்வாங்க , திரும்பத் திரும்ப படிக்க வேண்டியதாயிற்று. என்ன பண்றது ?? நமக்கு அந்த அளவுக்கு தான் அறிவு..) வெறுமனே தனிமங்கள் , திரவங்கள்னு சொற்பொழிவு செய்து மொக்கை போடாம , கதைக்களம் ஒரு அணுமின் நிலையம் , அதன் ஊழியர்கள் , நடுவே ஒரு மெல்லிய காதல் , சில கொலைகள் , கடத்தல்கள் , சில மர்மங்கள் , நிறைய அறிவியல் , போலீஸ் , இறுதியாய் ஒரு வில்லன்..னு ஸ்வாரஸ்யமாய் கொண்டுசென்ற விதம் யதார்த்தம். மர்ம நாவல்கள்ல கடைசி வரைக்கும் யார்மேல சந்தேகம் வரலையோ அவங்க தான் வில்லன் “ னு காலங்காலமா கடைபிடிச்சுகிட்டு வரும் விதிகள் நமக்கு அத்துப்படியாதலால் , அப்பாவியான கதாப்பாத்திரத்தின் மீது தான் நமக்கு முதலில் சந்தேகம் வருது.. அது கடைசியில் ஊர்ஜிதமாகவும் ஆகுது. (முடிவில் புரோட்டான் கொண்...