Posts

Showing posts from October, 2011

மொக்கை இலவசம்.. (படிச்சு நொந்தது)..

Image
பொறுக்கி :- மாப்பு வாழ்க்கையே புடிக்க மாட்டேங்குதுடா கிறுக்கன் :- அடேய் வாழ்க்கை உன்னை என்ன பண்ணுனது ? பொ:- இல்லடா , நான் 3 வருஷமா , உயிருக்கு உயிரா காதலிச்ச பொண்ணு என்னை புடிக்கலைனு சொல்லிட்டா ' டா கிறு:- உயிருக்கு உயிரா ' னா எப்படி ? நீ உங்க வீட்டுல ஒரு கரப்பான் பூச்சிய சாகடிச்சா , அவ அவங்க வீட்டுல எலியை சாகடிப்பாலா ? பொ:- முடியலடா..உன்கிட்ட வந்து சொன்னேன் பாரு.. கிறு:- சரி சரி … லூஸ்ல வுடு.. இத்தனை நாள் உன்னை லவ் பண்ணுனவ இன்னைக்கு ஏன் வேண்டாம் ' னு சொன்னா.. பொ:- இன்னைக்கு சொல்ல ' ல டா முந்தா நேற்றே சொல்லிட்டா.. கிறு:- இதோடா , எனக்கே வா ? பொ:- சாரிடா , லூஸு கிட்ட பேசுனா லூஸாவாங்க இல்ல ? அது மாதிரி தான் இதுவும்.. கிறு:- அப்போ என்னை லூஸு ' னு சொல்லுற ? பொ:- அப்படி லூஸை கேவல படுத்துற அளவுக்கு நான் ஒன்னும் முடிச்சவுக்கி இல்லை … கிறு:- அப்போ முடிச்சி போடுறவனு சொல்லுறியா ? பொ:- உன்கிட்ட தெரியாமா சொல்லிட்டேன் ….. லெட் பீ சீரிய்ஸ் டா … கிறு:- சரி சரி மொபைல் கொஞ்சம் கொடு ஒரு கால் பண்

உயரதிகாரிகிட்ட “டீ“ போட சொன்னது தப்பா??? அவ்வ்வ்வ்வ்...

Image
பொதுவா எல்லா ஆபீஸ்லயும் வருகை பதிவேடு ( Attendance Register) இருக்கும். காலேல வந்ததும் எல்லாரும் அதுல கையெழுத்து போட்றது வழக்கமா நடக்கும்.. தனியார் அலுவலகத்துல எப்படியோ தெரியாது. ஆனா இந்த அரசாங்க அலுவலகத்துல, சில அப்பாடக்கர்கள் பண்ற அழும்பு இருக்கே.. தாங்க முடியாது. என்னோட அலுவலகத்துல அந்த பதிவேடு, அலுவலக உதவியாளர் பொறுப்புல இருக்கும். தினமும் எல்லாரும் கையெழுத்து போட்டு முடிச்சதும் தலைமைப் பொறுப்புல இருக்குற அதிகாரி கிட்ட ஒப்படைக்கணும். அப்புறம் அவர் செக் பண்ணிட்டு இறுதிக் கையெழுத்து போடணும். இதுல பர்மிஷன் போட்றவங்க, அரை நாள் அல்லது முழு நாள் லீவ் போட்றவங்கனு தனிப் பட்டியலும் சேர்ந்து போகும். இதுல என்ன விஷயம்னா.. வாசலுக்குப் பக்கத்துலயே ஒரு டேபிள்ல அந்த ரெஜிஸ்டர் வச்சிருப்போம். அத தாண்டி தான் எல்லாரும் உள்ள போகணும். ஆனாலும் சில அப்பாடக்கர்ஸ் அதுல கையெழுத்து போடாம போய் சீட்ல உக்காந்துடுவாங்க. அவங்கள தேடிப் போய் அந்த உதவியாளர் கையெழுத்து வாங்கணும். அதுலயும் யாருக்காகவோ வேலை செய்யிற மாதிரி ரொம்ம்ம்ப சலிச்சுக்குட்டு கையெழுத்துப் போடுவாங்க. ( இத நோட் பண்

“முடியாது“ என்று சொல்லிப் பழகுங்கள்..

Image
தலைப்புல இருக்குற “முடியாது“ங்குற வார்த்தை, தன்னம்பிக்கைய குறைக்குறது தொடர்பானதுனு நீங்க நெனச்சா அது தப்பு. இன்னைக்கு அன்றாட வாழ்க்கைல நண்பர்கள், காதலர்கள், சொந்தக்காரவுங்க, அடுத்த வீட்டுக்காரங்க, ரோட்ல நடக்குற யாரோ சிலர்“னு நிறைய பேரை தினம் தினம் சந்திச்சுகிட்டு இருக்கோம். இவங்களுக்குள்ள ஏதாவது ஒரு சந்தர்ப்பத்துல ஒருத்தரை ஒருத்தர் சார்ந்திருக்க வேண்டிய அல்லது ஏதாவது ஒரு உதவியை எதிர்பார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். அப்படிப்பட்ட நேரங்கள்ல தன்னால் அவங்களோட எதிர்பார்ப்ப நிறைவேத்த முடியாதுனு நிச்சயமா தோணுறபட்சத்துல “முடியாது“னு வெளிப்படையா சொல்லிடணும். (தலைப்புக்கு வந்துட்டேனா??) ஒரு சிலர் இருக்காங்க, வெளிப்படையா சொன்னா சம்மந்தப்பட்டவங்க தப்பா நெனச்சுக்குவாங்கனு கவுரவம் பாத்துகிட்டே, பண்ணிட்றேன், பார்க்கலாம், கொஞ்சம் டைம் ஆகும், முயற்சி செய்யிறேன்“னு இழுத்தடிச்சுகிட்டே இருப்பாங்க. அப்புறமா கொஞ்ச நாள் கழிச்சு எவ்வளவோ முயற்சி செஞ்சேன், முடியல“னு அசட்டுத்தனமா சொல்லுவாங்க. இத முதல்லயே சொல்லிருந்தா, அவங்க வேற யார் மூலமாவாவது அந்த காரியத்தை செஞ்சு முடிச்