Posts

Showing posts from January, 2014

கோலி சோடா - என் பார்வையில்..

Image
“கோலி சோடா“வுக்கு பதிலா “அடையாளம்“னு பேர் வச்சிருக்கலாம். ஒரு மனுஷனுக்கு அடையாளம், அங்கீகாரம் எவ்வளவு முக்கியம்னு சொல்ல முயற்சி பண்ணியிருக்காங்க. விட்டேத்தியா திரியிற நாலு பசங்க, சுயமா மெஸ் ஆரம்பிச்சு, வில்லனோட ஆட்களை அடித்து, பிரிக்கப்பட்டு வேறவேற ஊர்ல திரிஞ்சு, திரும்பவும் சேர்ந்து, மறுபடியும் வில்லனை எதிர்கொண்டு ஜெயிச்சு, தங்கள் மெஸ்ஸை மீண்டும் ஆரம்பிப்பதுதான் கதை. நிஜ வாழ்க்கைல இதெல்லாம் சாத்தியமா“ங்குற கேள்வியெல்லாம் ஓரம்கட்டிவச்சுட்டு படம் பார்த்தா, கண்டிப்பா பாராட்ட வேண்டிய முயற்சி தான். பசங்க படத்துல வர்ற பசங்களா இவங்க? அரும்பு மீசையும், பொண்ணுங்க முன்னாடி கெத்து காட்டுறதும், கண்கள்ல மிறட்சியும் வெறியும்..னு அசத்தியிருக்காங்க. “தொலைச்ச இடத்துல தான் தேடணும்“ போன்ற நறுக் வசனங்கள் நிமிர வைக்கின்றன. ஒல்லியாய் வரும் பெண் தோழி மனதில் நிற்கிறார். பாண்டியை போலீஸ் ஜீப்பில் ஏற்றியபின், காயங்களுடன் பச்சை தாவணியைப் பார்த்து மெல்லிசாக சிரிக்கும்போது.. அழகு. “ ATM ன்னா அழுகுன டொமேட்டோ தானே?“ “நானும் அழுவேங்க.. ஆனா யாருக்கும் தெரியாது“ எனும்போதெல்லாம், பக்கடா பாண்டியைப் போலவே நம

தலைப்புகளில்லா கட்டுரைகள்..!

Image
“என்ன கட்டுரை யோசிச்சு வச்சிருக்க?“ கேட்ட சத்யாவிடம் வெறுமையாய் உதடு பிதுக்கினேன். “எவ்வளவு யோசிச்சாலும் தலைப்பே கிடைக்க மாட்டீங்குது“ கவலையாய் பதில் சொன்னேன். “வீட்லயே உக்காந்திருந்தா சரிவராது. கொஞ்சம் நடந்துட்டு வரலாம் வா“ என்றாள். எனக்கும் சரியெனப்படவே கிளம்பினோம். விடிந்தால் கட்டுரைப்போட்டி. பரிசு வாங்கவில்லையெனினும் நல்ல கட்டுரையென்று தோழமைக்குள் பேர் வாங்குமளவுக்காவது எழுதி விடுவதுண்டு. இம்முறை அதுவுமில்லை. இரவுக்குள் கட்டாயம் யோசித்திட வேண்டும். இல்லையெனில் மானம் போய்விடும். இருவருமாய் ஏதேதோ பேசிக்கொண்டு நடந்தாலும் மனம் மட்டும் கட்டுரைக்கான தேடலையே சுற்றிச்சுற்றி வந்தது. “ஏய்.. என்ன யோசனை? எழுத முடியலனா விட்டுத்தள்ளு. அதுக்கு ஏன் பேய் பிடிச்சது மாதிரி நடந்து வர்ற?“ என்றவளிடம் “எழுதிடுவேன். பேசாம வா“ என்றேன். “குழந்தைத் தொழிலாளர்..“ “பாலியல்..“ “திருநங்கைகள்..“ “தலைமுறை இடைவெளி..“ மனதினுள் உருப்போட்டுக்கொண்டே வந்த சிந்தனையை சட்டென ஒரு குவியலுக்குள் நிறுத்தியது அக்காட்சி. பேருந்து நிலையத்திலிருந்து ஒரு பெண், இடுப்பில் குழந்தையுடன் கையில் பெரிய பையுடன் இறங

மரம்.. பறவை.. நான்.. நீங்கள்..!

Image
ஏதாவது கதை சொல்லேன் எனும்போதெல்லாம் ஏனோ உடன்வந்தமர்கிறது இயல்பு தொலைத்த பெருங்கதையொன்று.. எனக்கான கதைகளில் வழக்கமாய் அதனதன் இயல்பிலிருக்கவே முனைகின்றன அத்தனையும்.. மரம் மரமாக.. பறவை பறவையாக.. நான் நானாக.. பின் நீங்களும்.. என இயல்பிலிருப்பதாய் ஒரு கதை சொல்லத் துவங்குகிறேன் நான்..! .