Posts

Showing posts with the label முகநூல்

ஆங்கோர் காதல்..!

Image
வெகுநேரப் பேச்சிற்குப்பின் கிளம்பிச்செல்ல எத்தனிக்கிறேன்.. விரல்கள் கோர்த்தபடி விட்டகல மறுக்கிறாய்..! விருட்சமாய் வளர்ந்திருப்பினும் வேரூன்றித் துளிர் விடுகிறது ஆங்கோர் காதல்..!! .   விரல்கள் பிணைத்துக்கொள்வதைப் போல அவ்வளவு எளிதாக இருப்பதில்லை... பிணைத்த விரல்களிலிருந்து விடுவித்துச் செல்வது..!! .

நட்போ..! காதலோ..!

Image
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள , எல்லைகள் கடந்து எதிர்த்துப்பேச , சலுகையில்லாது சண்டைகள் போட , விருப்பம் குறித்து வாதம் செய்ய , குறையிருப்பின் சுட்டிக்காட்ட , நிறையிருப்பின் தட்டிக்கொடுக்க , தளர்ந்துபோயின் தேற்றிவிட , கேள்விகளுக்கான பதில்சொல்ல , பதிலுக்குமோர் கேள்வியெழுப்ப , தேடலின்போது துணையாய் நிற்க.. என எப்போதும் எதிர்பார்க்கப்படுகிறது.. முகமூடியணியாத ஓர் நட்பு..! நம்மிடமோ.. நம்மால் பிறரிடமோ..!! . காமம் பிரதானமில்லை எனும்போது நட்போ..! காதலோ..! எதுவாகவோ இருந்துவிட்டுப் போகட்டும். என் உலகம் உனக்கானதுடன் பொருந்திப்போகிறது என்பதே எனக்குப் போதுமானது..! . .