Posts

Showing posts from August, 2011

இன்டர்வியூ-வில் கேட்கப்படும் கேள்விகள் – ஒரு அலசல்

Image
வேலைநிமித்தமா ஏதாவது இன்டர்வியூவுக்குப் போகும்போது, வழக்கமா நம்மளோட Resume கொண்டு போவோம். அதை மட்டும் பார்த்துட்டு நமக்கு யாரும் வேலை தரப்போறது கிடையாது. அதையும் தாண்டி பல கேள்விகள் நம்மகிட்ட கேட்பாங்க. அதுக்கு நாம எப்படி பதில் சொல்றோம்குறத பொறுத்து, நம்மளோட திறமை, மனஉறுதி“னு பல விசயங்கள தீர்மானிப்பாங்க. வழவழ“னு பதில் சொல்லாம, சுருக்கமாவும் தீர்க்கமாவும் நம்மளோட பதில் இருக்கணும்னு அவங்க எதிர்பார்ப்பாங்க. அப்படி இன்டர் வியூ போகும்போது என்ன மாதிரியான கேள்விகள் பொதுவா கேட்கப்படும்னு அலசலாம் வாங்க.. 1. உங்களைப் பற்றிய விபரம் கூறுங்கள்? இந்தக் கேள்வி, உங்களைப் பற்றிய சுய விபரம் சம்பந்தப்பட்டதா இருக்கும். அதாவது உங்களோட பேரு, இடம், கல்வித் தகுதி, தொழில்நுட்பத் தகுதி பற்றி நீங்களே தொகுத்து சொல்லணும். (அதுக்காக உங்க வரலாறு முழுக்க சொல்லி போர் அடிச்சிடாதீங்க..) 2. உங்களைப் பற்றி சிறு விளக்கம் கூறுங்கள்? இதுவும் முதல் கேள்வியும் ஒரே மாதிரியா தோணலாம். ஆனா இது உங்க சுய விபரம் பற்றி அல்ல, உங்கள் குணநலன் பற்றியது. அதாவது நீங்க எப்படிப்பட்டவர்னு சுருக்கமா சொல

வயிற்றினுள் ஒரு இதயம்..

Image
உருவானது உறுதியானதும் துவங்கிவிட்டது .. உன்மீதான என் கற்பனைகள் . உடலைக் கருவாக்கி , உதிரத்தை உணவாக்கி உன்னை உலகிற்கும் , உலகை உனக்கும் அறிமுகப்படுத்தத் தயாராகிக் கொண்டிருந்தேன் . உனது பேரிலிருந்து , பெரும் எதிர்காலம் வரை விரிவடைந்தது எனது சிந்தனைகள் .. உன் ஒவ்வொரு அசைவினையும் அனுபவிக்க ஆயத்தமானேன் .. உணவு முதல் உறக்கம் வரை உனக்கேற்றதைப் பழகிக்கொண்டேன் . உனக்கான பொருட்களை சேகரிப்பதே என் முழு வேலையாகிப் போனது .. இனிய இசையும் எனது உரையாடல்களையும் எப்போதும் உனக்குப் பரிசளித்தேன் . கால்களின் வீக்கம் குறைய பார்லி காஞ்சி குடி - பாட்டி சொன்னாள் சூடு தணிக்க விளக்கெண்ணை தடவு - அம்மா சொன்னாள் குடல் சுற்றாமல் இருக்க உறங்கும் பயிற்சிகொள் - அக்கா சொன்னாள் குனிந்து நிமிர வீட்டுப்பணி செய் - அத்தை சொன்னாள் இவற்றோடு நடை பயிற்சியும் செய் - தோழி சொன்னாள் மாத்திரைகளை தவறாமல் சாப்பிடு - இது மருத்துவர். அனைத்தும் செய்தேன் உன் ஜனனம் சுகப்பட .. குமட்டல்களும் மயக்கங்களும் சகித்துக்கொண்டேன் - உன் வளர்ச்சிக்காக . நிறைமாத வளையல்களின் ஓசை உனக்குக் கேட்டது போலும் .. உன் ப

திக்.. திக்.. (இதயம் பலவீனமாயிருப்பவர்கள் இந்தக் கதையை படிக்க வேண்டாம்..)

Image
சிவா காயத்ரியை உயிருக்கு உயிராக நேசித்தான் . அவளும் அப்படிதான் . ஒருவர் இல்லாமல் ஒருவர் வாழவே முடியாது என்ற எண்ணம் அவர்களுக்குள் ஆழமாக உருவானது . அவர்கள் காதல் நாளுக்கு நாள் வலுவாக , ஆழமாக , சுவாசமாக வளர்ந்துகொண்டே போனது .. சிவாவின் குடும்ப நிலை .. காயத்ரியின் படிப்பு ..   இது தான் அவர்களுக்கு தடையாக இருந்தது . எவ்வளவு நாட்களானாலும் காத்திருக்க தயாராக இருந்தனர் ,   மாறாத காதலுடன் . திடீரென்று அவளுடைய அப்பாவுக்கு அவர்கள் காதல் தெரிய வந்தது . வழக்கமான அப்பா தான் . அடி உதை மிரட்டல் .. வீட்டில் சிறை வைக்கப்பட்டாள் . அவர்களால் சந்திக்கவே முடியவில்லை . வேறு வழியில்லாமல் அவள் அப்பாவிடம் அவளை பெண் கேட்டு சிவா வீட்டிற்கே போனான் . சொந்த பந்தங்கள் சேர்ந்து அவனை விரட்டி விட்டது .. அன்று இரவு தொலைபேசியில் இருவரும் அழுதனர் .   மறுநாள் காலை வீட்டை விட்டு வெளியேறுவது என்று முடிவு செய்தனர் . யாருக்கும் தெரியாமல் சிவா ரயில் நிலையம் வந்து அவளுக்காக காத்திருந்தான் . நேரம் கடந்தது .. காயத்ரி வரவில்லை . காத்திருந்தான் .. வரவே இல்லை . குழம்பிய அவன் அவளுடைய வீட்டிற்கு சென