The LunchBox - என் பார்வையில்..
உங்களைச் சுற்றி யார் யாரோ இருந்தாலும் ஏதோ ஒரு தனிமை உங்களை சூழ்வதுபோல யோசித்திருக்கிறீர்களா ? நம் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள , நம்மை நேசிக்க , நமக்கே நமக்கென யாருமே இல்லையென்ற சூன்யத்தை உணர்ந்திருக்கிறீர்களா ? சட்டென உங்களுக்காய் , உங்களைப் புரிந்துகொண்ட ஒரு நட்பு கிடைத்தால் சந்தோசப்படுவீர்கள் தானே! அப்படியெனில் The Lunchbox திரைப்படத்தின் இரு மையக் கதாப்பாத்திரங்களையும் நிச்சயம் உங்களால் புரிந்துகொள்ள முடியும். ஒரு பக்கம் , பணியிலிருந்து ஓய்வு பெறப்போகும் நாட்களை எண்ணிக்கொண்டு தனக ்கென தனிமையை உருவாக்கிக்கொண்டிருக்கும் Saajan கதாப்பாத்திரம். இன்னொரு புறம் , கணவனின் அன்பு கிடைக்காமல் சதா அடுப்பங்கறையிலேயே காலத்தைக் கழிக்கும் Ila கதாப்பாத்திரம். வெவ்வேறு உலகம் சார்ந்த இவர்களை இணைக்கும் இரண்டு விசயங்கள்.. ஒன்று தனிமை , மற்றொன்று Lunch box. தன் கணவனுக்கென அனுப்பிய மதிய சாப்பாடு தவறுதலாக இன்னொரு நபருக்கு கிடைப்பதில் ஆரம்பிக்கும் இவர்களது அறிமுகம் , பின் டிபன் பாக்சிஸ் வைத்து அனுப்பப்படும் நான்கு வரிக் கடிதத்தில் தொடர்கிறது. தன் கடந்த காலங்கள் , எதிர்பார்ப்புகள்.. என ஒருவருக்கொருவர்...