புதைத்தாலும் வருவேன்..



சிவா காயத்ரியை உயிருக்கு உயிராக நேசித்தான். அவளும் அப்படிதான். ஒருவர் இல்லாமல் ஒருவர் வாழவே முடியாது என்ற எண்ணம் அவர்களுக்குள் ஆழமாக உருவானது. அவர்கள் காதல் நாளுக்கு நாள் வலுவாக, ஆழமாக, சுவாசமாக வளர்ந்துகொண்டே போனது..

சிவாவின் குடும்ப நிலை.. காயத்ரியின் படிப்பு..  இது தான் அவர்களுக்கு தடையாக இருந்தது. எவ்வளவு நாட்களானாலும் காத்திருக்க தயாராக இருந்தனர், மாறாத காதலுடன்.

திடீரென்று அவளுடைய அப்பாவுக்கு அவர்கள் காதல் தெரிய வந்தது. வழக்கமான அப்பா தான். அடி உதை மிரட்டல்.. வீட்டில் சிறை வைக்கப்பட்டாள். அவர்களால் சந்திக்கவே முடியவில்லை. சிவா வேறு வழியில்லாமல் அவள் அப்பாவிடம் அவளை பெண் கேட்டு வீட்டிற்கே போனான். சொந்த பந்தங்கள் சேர்ந்து அவனை விரட்டி விட்டது..

அன்று இரவு தொலைபேசியில் இருவரும் அழுதனர்.  மறுநாள் காலை வீட்டை விட்டு வெளியேறுவது என்று முடிவு செய்யப்பட்டது.  யாருக்கும் தெரியாமல் சிவா ரயில் நிலையம் வந்து அவளுக்காக காத்திருந்தான். நேரம் கடந்தது.. காயத்ரி வரவில்லை.
காத்திருந்தான்.. வரவே இல்லை.

குழம்பிய அவன் அவளுடைய வீட்டிற்கு சென்று பார்க்க முடிவு செய்து புறபட்டான். வழியில் அவன் நண்பர்கள் வழிமறுத்து அவள் கிளம்பும்போது தந்தை பார்த்துவிட்டதாகவும் அவளை அடித்ததாகவும், அதனால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறினார்.

அவன் அவனாக இல்லை.. ஓடினான். அவளது முகம் பார்க்க. அதற்குள் எல்லாம் முடிந்து விட்டது.  காயத்ரியை புதைத்து விட்டார்கள்.

அழுதான்.. அழுதான்.. அவனால் அதை மட்டும் தான் செய்ய முடிந்தது..

பல நேர தேற்றளுக்குப் பிறகு வீடு வந்தான்.. சில நாட்களுக்குப் பின் மொட்டை மாடியில் அமர்ந்து வானத்தையே வெறித்துப் பார்த்து கொண்டிருந்தான் சிவா. காயத்ரியின் நினைவில் இருந்து அவனால் மீள முடியவில்லை..

 "ஏன் என்னை தனிய விட்டு போன காயத்ரி? நான் என்ன தப்பு பணினேன்?" என்று அழுதான்.

அப்போது திடீரென்று தொலைபேசி சிணுங்கியது.. எடுத்து பார்த்தான். காயத்ரி என்று வந்தது.. சிவாவுக்கு ஒன்றுமே புரியவில்லை.

ஒருவேளை அவள் வீட்டிலிருந்து வேறு யாரவது அழைக்கலாம் என்று காதில் வைத்தான்.
"ஹலோ" என்றான்.

"சிவா, நான் காயத்ரி பேசுறேன்" என்று குரல் கேட்டது.
அவன் ஒரு நிமிடம் நடுங்கித்தான் போனான்.. உடல் சட்டென வியர்த்தது..
"
அதே குரல். இது என் காயத்ரி குரல் தான்.. ஆனால்.. ஆனால்.. எப்படி?" பதறினான்.. பயந்தான்.. அழைப்பை துண்டித்து விட்டான்..
தனக்கு ஏற்பட்டது கனவாக பிரமையாக கூட இருக்கலாம் என்று சமதானப்படுத்திகொண்டான். ஆனாலும் அழைப்பு தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது... ஒரு வழியாக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பேசினான்.

சிவா: "காயத்ரி.."
காயத்ரி: "சிவா, எப்படி இருக்கீங்க? உங்கள பாக்காம தவிசு போய்டேன் பா.."
சிவா: "நீ........ நீ இறந்துட்டனு சொன்னங்க.. ஆனா ...." குரலில் பயம் தெரிந்தது.. "புதைச்ச இடத்துக்கு கூட நான் வந்து பாத்தேனே... பின்ன எப்படி..."
காயத்ரி: "புதைச்சா என்ன நான் எங்க இருந்தாலும் உங்க காயத்ரி தான். என்னால உங்க கூட பேசாம இருக்கவே முடியாது.. செத்தாலும் கூட.."
சிவா: "?????"
திடீரென ஒரு குரல் கேட்கிறது...
அது....
அது...

ஏர்டெல்..
எங்களுடைய டவர் எங்கும் இருக்கும்...
டின் டி டி டின் டின்….
முறைக்காதிங்க...
ஏதோ என்னால முடிஞ்ச மொக்கை.
ஏப்ரல் பூல் .
.
.

Comments

அய்யய்யோ........
ரொம்ப பயமா இருக்கு.......















ஏமாந்திங்களா :))
Mythees said…
நான் பயந்துடேன்
My days(Gops) said…
ஆண்டவா..... புதைத்தாலும் வருவேன் தலைப்பை பார்த்துட்டு ஏதோ ஒன்னு இருக்கும்'னு வந்தா இங்க ஏப்ரல் பூல் தான் இருக்கு.. அய்யோடா..... இருந்தாலும் இது பெரிய மொக்கை தான் :)
//சை.கொ.ப ...

அய்யய்யோ........
ரொம்ப பயமா இருக்கு.......

ஏமாந்திங்களா :))//


நன் எமாறமாட்டேனாக்கும்.


//mythees...
நான் பயந்துடேன்//

பயந்திங்களா?
இல்ல ஏமாந்திங்களா??



//my day gops..

ஆண்டவா..... புதைத்தாலும் வருவேன் தலைப்பை பார்த்துட்டு ஏதோ ஒன்னு இருக்கும்'னு வந்தா இங்க ஏப்ரல் பூல் தான் இருக்கு.. அய்யோடா..... இருந்தாலும் இது பெரிய மொக்கை தான் :)//

நன்றி..
முடியலை........
எங்களைப்பார்த்தா உங்களுக்கு பாவமா இல்லையா?
//கவிதைகாதலன் ..

முடியலை........
எங்களைப்பார்த்தா உங்களுக்கு பாவமா இல்லையா?//


அவ்வளவு மொக்கையாவா இருக்கு??
///திடீரென ஒரு குரல் கேட்கிறது...
ஏர்டெல்..
எங்களுடைய டவர் எங்கும் இருக்கும்...
டின் டி டி டின் டின்….
முறைக்காதிங்க...
ஏதோ என்னால முடிஞ்ச மொக்கை.
ஏப்ரல் பூல் .///


ஆஹா , இவுக நம்ம க்ரூப் தான் , அசத்துங்க
பாலன் said…
அதுதான் ஏப்ரல் ஒன்னாம் தேதி போய்ட்டுதே... அதன்பிறகும் இப்படியா ஏமாத்துவாங்க ??
நான் அப்பவே நெனச்சேன் இது அதுதான்ன்னு. நாங்க உசாராயிட்டோமுல்ல..

Popular posts from this blog

மரணவலி தரும் உன் மௌனம்..

நீ அழையாத என் கைபேசி..

பெண்களைக் கவர சில டிப்ஸ்