மின்சாரம் எப்படி உருவாகிறது – ஒரு அறிவியல் தகவல்.. (வீட்ல தான் கரெண்ட் இல்ல.. பதிவுலயாவது இருக்கட்டுமே..)



படத்துக்கும் பதிவுக்கும் சம்பந்தமில்லீங்கோ...
நமது முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் விளக்குகளையே பயன்படுத்தி ஒளி பெற்று வந்தார்கள். பட்டனைத் தட்டியதும் பல்பு எரியக்கூடிய மின்சாரம் அப்போது கிடையாது. இப்போதோ ஏராளமான வடிவங்களில் மின்சார விளக்குகள் நமது வாழ்க்கையில் பயன்படுகின்றன. தொழிற்காலைகளில் பயன்படுத்தும் இயந்திரங்கள் எல்லாமே மின்சாரத்தினால் இயக்கப்படுகின்றன. நாம் அடிக்கடி பயன்படுத்துகிற ரயில், விமானம், தண்ணீர் இறைக்கும் மோட்டார் போன்ற முக்கியமானவை எல்லாமே மின்சாரத்தின் பயனால் உருவானவையே. மனித குலமான நமக்கு மின்சாரம் ஒரு வரப்பிரசாதமாகும்.
மின்சாரத்தை உண்டாக்கும் இயந்திரத்தை டைனமோஅல்லது “ஜெனரேட்டர்என்று கூறுகிறார்கள். இதில் பெரியதும், சக்தி வாய்ந்ததுமான காந்தம் உள்ளது. இந்த காந்த்த்தை “புலக் காந்தம்“ (Field Magnet) என்று வழங்குகிறார்கள். புலக் காந்த்த்தின் இரண்டு உலோக வளையங்களால் இணைக்கப்பட்டிருக்கும். இந்த வளையங்கள் வெளியேயுள்ள கார்பன் துண்டு ஒன்றைத் தொட்டுக் கொண்டிருக்கும்.
டைனமோவில் உண்டாக்கப்படும் மின்சாரத்தை எடுத்துச் செல்லும் கம்பிகள் கார்பன் துண்டுடன் இணைக்கப்பட்டிருக்கும். முன்னரே கூறியபடி செம்புக் கம்பிகளால் செய்யப்பட்ட நீளமான, சதுர வடிவிலான கம்பி, காந்த்த்தின் இரண்டு முனைகளுக்கு இடையிலே சுழலும்போது மின் காந்த்த் தூண்டல் (Electro Magnetic Induction) ஏற்பட்டு இதன் காரணமாக மின்சாரம் உற்பத்தியாகிறது. இப்படி உற்பத்தியாகும் மின்சாரம், உலோக வளையங்களைத் தொட்டுக் கொண்டிருக்கும் கார்பன் துண்டு வழியாக மின்சாரக் கம்பிகளில் பாய்கிறது. இந்தக் கம்பிகளை நமது வீடுகள் அல்லது தொழிற்சாலைகள் வரையிலும் இணைத்துக் கொண்டு நாம் மின்சாரம் பெறுகிறோம்..
டைனமோவில் செம்புக் கம்பிச் சுருளை சுழலச் செய்ய இரண்டு முறைகள் உள்ளன. முதல் முறையின்படி ஆறுகளின் நடுவே அணைகளைக் கட்டி தண்ணீரைத் தேக்கி, தோக்கிய தண்ணீரை மிகவும் உயரமான இடத்திலிருந்து கீழே விழச் செய்கிறார்கள். இந்த நீர் டர்பைன் பிளேடுகளில் விழுந்து, டர்பைன் சுற்றி, இதன் மூலம் டைனமோவின் கம்பிச்சுருள் சுழலுகிறது. இதன் விளைவாக மின்சாரம் உண்டாகிறது. இந்த முறையில் செயல்படும் மையங்களை நீர் மின் நிலையங்கள் என்று அழைக்கிறார்கள்.
இரண்டாவது முறையின் படி நிலக்கரியை எரித்து நீரைக் கொதிக்க வைத்து, கிடைக்கும் நீராவியைக் கொண்டு டர்பைன் சுழலுகிறது. இதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் நிலையங்களை அனல் மின்நிலையங்கள் என்று வழங்குகிறார்கள். இந்த இரண்டுவகையான முறைகள் தவிர அணுசக்தியைப் பயன்படுத்தியும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தவகையான நிலையங்களை அணுமின்நிலையங்கள் என்று கூறுகிறார்கள.
அதெல்லாம் சரி.. மின்சார தட்டுப்பாட்டை எப்படி சரிசெய்யுறதுனு யாராவது பதிவு போட்டீங்கன்னா சொல்லுங்க..
.
.

Comments

என் அறிவுக்கண்ணைத் திறந்ததற்கு நன்றி!

:-)
இதையெல்லாம் நாங்க பள்ளிகூடத்திலேயே படிச்சிட்டோம்...!

நீங்க.... உங்க ப்ளாக் தலைப்புல "நான் இந்திரா இம்சிக்கிறேன்"ன்னு போட்டதுக்கு இப்பத்தான் அர்த்தம் புரியுது...!

அவ்வவ்....வ்வ்வ்வ்....
இதைதான் சொல்வாங்க தி கிரேட் எஸ்கேப்.

(மனசாட்சி உறங்காது - இன்னைக்கு தப்பிக்கலாம் விடமாட்டோம்ல சேர்த்து வைத்து கும்முவோம்)
SURYAJEEVA said…
காற்றாலை, அணைக் கட்டி நீர் மூலம் மின்சாரம் தயாரிக்கும் டைனமோ மற்றும் சூரிய வெப்பத்தை கடத்தி மின்சாரம் ஆக்குதல் ஆகியவை விடு பட்டு இருக்கிறது
கூடங்குளம் அணு உலை பற்றி ஒன்றுமே சொல்லாமல் ஜெ மாதிரி நழுவிட்டீங்களே!
Unknown said…
சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் பெறும் முறை பல நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது. ராக்கெட் போன்ற விண்கலங்களுக்கு தேவையான மின்சாரத்தை சூரிய ஒளியிலிருந்து பெறுகிறார்கள்.
இதற்கு அரசு மாணியம் கூட தருகிறார்கள்.(முழுதாகக் கிடைக்குமா என்பது வேறு விஷையம்)
busybee4u said…
ஜெர்மன் ஒர் உணவு விடுதி 15நிமிடம் ஸைக்லிங் பன்னுன இலவச உணவு. அது மாதிரி எல்லா நிருவனத்திலும் ஒரு ஸைக்லிங் ஜனரெடர் வைது 30 நிமிடம் ஒருவர் ஒடினால் ஒர் நாள் மின்சரம் தயாரிக்கலாம். மின் சிகனம் உடல் ஆரொக்யம் 2 இலவசம்.

http://busybee4u.blogspot.com/

Popular posts from this blog

மரணவலி தரும் உன் மௌனம்..

நீ அழையாத என் கைபேசி..

பெண்களைக் கவர சில டிப்ஸ்