மரணவலி தரும் உன் மௌனம்..
என் ஆன்மாவை ஆணிவேரோடு பிடுங்கி அழகு பார்த்திடும் உன் ஆணவத்தில் என் அனைத்து ஆரம்பங்களும் அடங்கித்தான் போயின.. . தனிமையெனும் தீவில் துன்புறுத்தியும் தொல்லைபடுத்தியும் தற்காலிகமான தற்கொலைக்குத் தூண்டும் உன் நினைவுகள்.. . நாட்கள் நிறைந்த நொடிகளும் வருடம் நிறைந்த நிமிடங்களுமாய் நகராது நோகடிக்கிறது நாசூக்காய்.. . உன்னை நினைத்தே நுரைத்துக் கிடக்கிறது என் நுரையீரல்.. . நினைவுகளை தானமாகத் தந்துவிட்டு நிதானமாய்க் கொன்று கொண்டிருக்கிறாய்.. . என் கட்டுக்கடங்காத பிரியங்களைக் கலைத்தும் தொலைத்தும் விளையாடும் உனக்கு கண்கள் மட்டுமா கருணையும் இல்லை. . மண்புழுவாய்த் துடிக்கும் என் மனதினுள் மயானம் அமைத்து மறவாமல் அடிக்கிறாய் உன் மௌனச் சவுக்கால்.. . பட்டும் படாமலுமான உன் பார்வை நகத்தினால் படுகாயப்படுத்துகிறாய் பாழாய்ப்போன என் இதயத்தை. . நிர்வாணமாய்த் திரியும் என் நிம்மதிகளுக்கும் நார் நாராய்க் கிழிந்த என் காதலுக்கும் நீண்ட துணை உன்னாலான என் ரணங்கள் தான். . பத்திரமாய் பத்திரப்படுத்துகிறேன் நீ தந்த வலிகளை. ஆறாத
Comments
நன்றாக உள்ளது.. தொடர வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
tamilmanam 2
கதை சொல்லுவீங்களா மாட்டீங்களா பாஸ்...//
அதுவும் இதே மாதிரி மொக்கையா தான் இருக்கும். பரவாயில்லையா?
அருமை அருமை//
தொடர்ந்து ஆதரவு குடுக்குறதுக்கு நன்றிங்க.
(நண்பேன்ங்க.. :) )
வணக்கம்
நன்றாக உள்ளது.. தொடர வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-//
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க
சிறப்பான படைப்பு! நன்றி!//
நன்றிங்க.
nice//
நன்றிங்க..
நன்று. வாழ்த்துக்கள்.//
நன்றிங்க.
அட.... காலையிலேயே ஒரு கலக்கல் கவிதை...//
நன்றிங்க மணி
ரொம்ப நாள் கழிச்சு பின்னூட்டம் போட்டதுக்கும் :)
tamilmanam 2//
நன்றிங்க
அழகான கவிதை...!!!
தொடர வாழ்த்துக்கள் ...!!!