“மனம்“ - என் பார்வையில்..

மறுஜென்மம் அப்டினு ஏதாவது இருக்குதா? அப்டி இருந்தா திரும்ப பிறக்குறவங்க அதே உருவத்தோட பிறப்பாங்களா? குறிப்பா போன ஜென்ம ஞாபகங்கள் திரும்ப வருமா? முந்தைய ஜென்மத்துல தாங்கள் யாரை நேசிச்சாங்களோ அவங்களை இந்த ஜென்மத்துலயும் அடையாளங்காண முடியுமா? அப்பாவை கண்டுபிடிச்சாச்சு.. அப்டினா அம்மாவும் கிடைப்பாங்கனு தேட ஆரம்பிச்சா சித்ததப்பா, மாமா, தாத்தானு வரிசையா எல்லாரையும் கண்டுபிடிச்சுடலாமா?? இந்த மாதிரியான அறிவியல் கேள்விகளையெல்லாம் ஓரமா ஒதுக்கி வச்சுட்டு படம் பார்க்க உக்கார்ந்தா போதும்.. “மனம்“ உணர்ச்சிகளின் ஒட்டு மொத்த குவியல்னு சர்டிபிகேட் குடுக்கலாம்.
நாகேஷ்வர்ராவ், நாகர்ஜூனா, நாகசைத்தன்யா மூவரும் நாகசைத்தன்யா, நாகர்ஜூனா, நாகேஷ்வர்ராவ் என்ற வரிசையில் நடித்திருக்கும் திரைக்கதை. ஆரம்பத்துலருந்து பார்க்கலேனா குழப்பம் தெளியிறதுக்குள்ள படம் முடிஞ்சிடும்.
தன் பெற்றோரான நாகசைத்தன்யா மற்றும் சமந்தாவின் மரணத்திற்குப் பின் நாகர்ஜூனா ரொம்ப வருடம் கழித்து அவர்களை அதே உருவில் இளைஞர்களாக காண்கிறார். இருவரையும் காதலர்களாக சேர்த்துவைக்க முயற்சி செய்து, கடைசியில் அவர்களுக்கே முன்ஜென்ம ஞாபகம் வந்து கட்டிப்பிடிச்சு கதை முடியுது.
இன்னொரு பக்கம், தன் பெற்றோரான நாகர்ஜூனா மற்றும் ஷ்ரேயாவின் மரணத்திற்குப் பின், வயதான காலத்தில் மீண்டும் அதே உருவில் அவர்களை காண்கிறார் நாகேஷ்வர்ராவ். பின் இயல்பாகவே காதல் ஏற்பட்டு கட்டிப்பிடிச்சு கதை முடியுது. நடுவுல அவங்களுடைய ப்ளாஷ்பேக் கதைக்கு கொஞ்ச நேரம் கதை போயிட்டு வருது.
குடும்பக் கதைங்குறதால அதாவது நாகேஷ்வரோட “குடும்ப“ கதைங்குறதால ஒரு பாட்டுல அமலாவும் கடைசிக் காட்சில ஸ்லோமோஷன்ல சைத்தன்யாவின் தம்பியும் அகிலும் வந்துட்டுப் போறாங்க.
இதுல பாராட்ட வேண்டிய விஷயம்னா க்யூட் நாகர்ஜூனா மற்றும் கேமராமேனும் தான். ரெண்டு விஷயமுமே மனசைக் கொள்ளையடிச்சுகிட்டு போயிடுது. சைதன்யாவைவிட இளமையா இருக்கிறார் மனுஷன். ப்ப்ப்பா..
ஷ்ரேயாவை கூட டாக்டர் கதாப்பாத்திரத்தில் கொஞ்சம் ரசிக்க முடியுது. ஆனா இந்த சமந்தாபுள்ளைய எப்படிபார்த்தாலும் கதாப்பாத்திரத்தோடு ஒட்ட மாட்டேங்குது. அதுலயும் முன்ஜென்ம ஞாபகம் வந்து தன் குழந்தையான நாகர்ஜூனாவை பார்த்து அழும்போது ம்ஹூம்.. ஸாரி சமந்தா.
நாகேஷ்வர் பிறக்குறதுக்கு முந்தைய காலகட்டத்துல நாகர்ஜுனாவுக்கு ஷ்ரேயாவுக்கும் கல்யாணம் நடக்குற ப்ளாஷ்பேக் காட்சி. ஹீரோவை பார்த்ததும் அம்மணி உணர்ச்சிவசப்பட்டு சபைலயே கட்டிப்பிடிச்சு படுத்துடுறாங்க. படுத்துகிட்டே தாலி கட்டுறார் ஹீரோ. 1920ல இது எந்த அளவுக்கு சாத்தியம்னு தெரியல.
எந்த சீரியஸ் அழுவாச்சியும் இல்லாம, நடந்து போகிற போக்கில் திரைக்கதை அமைத்திருப்பது க்ளாசிக்.
மனசை கொஞ்சம் ரிலாக்ஸ் செஞ்சுக்கலாம்னு படங்களைப் பட்டியல் போட்டா கட்டாயம் “மனம்“ இடம்பெறும்.
.

Comments

வணக்கம்
தகவலுக்கு நன்றி... அருமையாக சொல்லியுள்ளீர்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Popular posts from this blog

மரணவலி தரும் உன் மௌனம்..

நீ அழையாத என் கைபேசி..

பெண்களைக் கவர சில டிப்ஸ்