தூரங்கள் எனும் தொலைவுகள்..

மன அழுத்தம் கொடுக்கும் வேலைப்பளு.. உறவினர்கள்.. பண்டிகைகள்.. டென்சன்கள்.. கமிட்மென்ட்கள்.. என எல்லாவற்றையும் கொஞ்சம் ஒதுக்கிவைத்துவிட்டு, எதைப் பற்றியும் யோசிக்காமல், நினைத்த மாத்திரத்தில் மேற்கொள்ளும் பயணங்கள் எத்தனை பேருக்கு வாய்க்கும்? போய்ச் சேருகிற இடம் பற்றி எந்தவொரு கவலையுமின்றி, சாலைகளையும் மரங்களையும் அந்தந்த இடத்திற்கான இயற்கை சூழலையும் மட்டுமே ரசித்து அனுபவிக்கவென just like that கிளம்புவதென்பது, குறிப்பாய் மொபைல்களே இல்லாத ஒரு பயணம் சாத்தியப்படுமா நமக்கு?!! its absolutely not possible.
ஒருவேளை, கையில் பணமில்லாத சமயம் இம்மாதிரியான பயணங்கள் நமக்கு வாய்க்கலாம். ஏதோ ஒரு விரக்தியில் எங்கேயாவது சற்று நடந்துவிட்டு வரலாமென கிளம்பும் தருணங்கள், யோசிக்க ஆயிரமிருந்தும் எதையுமே யோசிக்கவிடாத ஒரு வெற்றிடத்தை நமக்காக ஏற்படுத்தித் தருகின்றன. எப்படி இவ்வளவு தூரம் நடந்துவந்தோம்? அந்த மாடிப்படி வளைவை எப்போது கடந்தோம்? என்பது கூட ஞாபகமில்லாத அளவிற்கான வெறுமைகள் பெரும்பாலும் நம்மைக் கடத்திச் செல்கின்றன.
எதையுமே யோசிக்காமல், அந்நேர மனமாறுதலுக்காக மட்டுமேயென சிம்மக்கல் தொடங்கி  மாட்டுத்தாவணி வரை நடந்தே சென்ற நாட்கள் இருக்கின்றன. ஆனால் வழி நெடுக எதை ரசித்தேன் என்று யோசித்தால் விடை பூஜ்ஜியம் தான். திண்டுக்கல் மலைக்கோட்டை உச்சியில் மேகங்களை வேடிக்கை பார்க்கவென நான் தேர்ந்தெடுத்த பாறையும், திருச்சி வழியிலிருக்கும் சிவன்கோவில் மண்டபத் தூணில் கன்னம் வைத்து உணர்ந்த அந்த ஜில் தன்மையும் இன்னமும் அப்படியே தான் இருக்கின்றன. ஆயுளுக்கும் நினைத்துச் சிலிர்க்கும் அம்மாதிரியான தருணங்களை, மீண்டும் சந்திப்பதற்கு வெகுநேரமாகிவிடப் போவதில்லைதான். ஆனால் பட்டாம்பூச்சியிலிருந்து மீண்டும் கூட்டுப்புழுவாக மாறும் இவ்வியந்திரத்தனம் அதற்கான நேரங்களை எப்போதும் திருப்பித் தருவதில்லை.
நினைத்த மாத்திரத்தில் நனையும் மழையும், நினைத்த மாத்திரத்தில் நமக்கே நமக்கென சந்தோசமாய் கிளம்பும் பயணங்களும் வரம்.

.

Comments

நினைத்தவுடன் புறப்படுகின்ற பயணங்கள் அரிதாகிவிட்டது எனக்கும்! அது ஓர் சுகமான அனுபவம்! சிறந்த பகிர்வு! நன்றி!
நினைத்தவுடன் புறப்படுகின்ற பயணங்கள் அரிதாகிவிட்டது எனக்கும்! அது ஓர் சுகமான அனுபவம்! சிறந்த பகிர்வு! நன்றி!

Popular posts from this blog

மரணவலி தரும் உன் மௌனம்..

நீ அழையாத என் கைபேசி..

பெண்களைக் கவர சில டிப்ஸ்