Posts

Miracle in Cell No.7 - என் பார்வையில்..

Image
குழந்தை எழுத்தாளர் (உமாநாத்) விழியன், மழலைக் கதைகளில் ஒரு முறை தன் பாரீஸ் அனுபவத்தை எழுதியிருந்தார். ஒரு இடத்தில் மரங்களுக்குப் பின்னாலிருந்து சூரியன் உதயமாகிக் கொண்டிருந்ததாம். உடனே அவர் தனக்குப் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த சிறுவனிடம், “இப்போது அந்த மரத்திலிருந்து சூரியன் முளைக்கும் பாரேன் ” என்று சொன்னாராம். அதேபோல் மரக்கூட்டத்திலிருந்து சூரியன் தோன்றவும் அவன் அதை உண்மையென ஆச்சர்யமாய் ரசித்துக்கொண்டிருந்தானாம். (அதற்குள் அவனுடைய அம்மா உண்மையை சொல்லி அக்கற்பனை உலகத்தில் கல்லெறிந்தது வேறு விஷயம்). பேபி ஷாலினி நடித்த படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, “ இப்ப எப்படி இருக்காங்க இந்த அக்கா?“ என்று கேட்ட பக்கத்து வீட்டு சிறுமிகளுக்கு, நாளிதழ்களையும் டிவி சேனல்களையும் மாற்றி மாற்றி தேடிப்பார்த்து கடைசியாய் நடிகை ஷாலினியாக நான் காட்டியபோது, ஒட்டு மொத்த கூட்டமும் “ஐயோ.. இவங்க அஜித் ஆன்ட்டி“ என்று கோரஸ் பாடிய ஸ்வாரஸ்யம் ரசிக்கத்தக்கது. குழந்தைகளுக்கான உலகில், குழந்தைகளாகவே நுழையும் திறமை பெற்ற பெரியவர்கள் அதிஷ்டசாலிகள். இந்தப் படமும் இரு குழந்தைகளுக்கு இடையிலான உலகம் பற்றிய கதைதான...

பல்புகள் பலவிதம்..

Image
உள்ளூர் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக வேலை பார்த்த நாட்கள் அவை. அங்க நேரடி ஒளிபரப்பெல்லாம் கிடையாதுங்குறது பெரும் ஆறுதல். மதியம் 12 : 30 மணி செய்திக்கு 10 : 30க்கு ஷூட்டிங் ஆரம்பிக்கும். சாயந்திரம் 7 : 00 மணி செய்திக்கு 4 : 30க்கு உள்ள இருக்கணும். சாயந்திர செய்தியையே நைட் 10 : 00 மணிக்கு மறுஒளிபரப்பு செய்வாங்க. கிரிக்கெட் செய்திகள் “இந்தியா வெற்றி“ “இந்தியா தோல்வி“னு ரெண்டு விதமா எங்களை வாசிக்க சொல்லி எடுத்து வச்சுக்குவாங்க. ரன் பற்றிய விபரங்கள் காட்சிகளுக்குப் பின்னணியா வாசிக்குறதால அதை மட்டும் 9.45க்கு அங்கயிருக்குற டெக்னீசியன் யாராவது பேசி ரெக்கார்ட் பண்ணிக்குவாங்க. அன்னைக்கு நல்ல மழை. மாலை செய்திகள்னு ஷூட்டிங் கிளம்பிகிட்டு இருந்தேன். TVS-50 ல போறதால 4 : 15க்கு வீட்லருந்து கிளம்பினேன். போகப் போக மழை ஜாஸ்தியானதால ஒரு கோவில்ல வண்டியை நிறுத்திட்டு வெய்ட் பண்ணினேன். அங்கயே மணி 4 : 30. அப்போ செல்போன் புழக்கத்துல இல்லாத சமயம். டைரக்டருக்கு தகவல் சொல்லியாகணும். தாமதமாகும் பட்சத்துல இரண்டு மணி நேரத்துக்கு முன்னாடியே சொல்லணும்னு கண்டிசன். வர்றவரைக்கும் இன்னொரு வாசிப்பாளரோட பகு...

Kon-Tiki - என் பார்வையில்..

Image
“ கடலுக்குள் ஒரு சாகசப் பயணம் “ இந்த ஒற்றை வரியினுள் உயிர் பிழைப்பதற்கான விளிம்பு நிலை சந்தர்ப்பங்கள் எத்தனை அடங்கியிருக்கிறது!! கடற்கரையில் அலைகளை வேடிக்கை பார்த்து சிலிர்க்கும் அதே நேரம் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.. காற்றால் மட்டுமே இயங்கும் மரத்தாலான படகு , சுற்றிலும் சுறாக்களும் திமிங்கலங்களும் உங்களை விழுங்கக் காத்திருக்கின்றன. கொஞ்சம் உணவு , சில நண்பர்கள் , அதோடு சுமார் 4000 மைல்களை கடந்தாக வேண்டும் என்ற வைராக்கியம் மட்டும் கைவசம் இருக்கிறது. இது தான் Kon-Tiki . பிரபஞ்சத்தி ற்கு அடுத்ததாக ஆச்சர்யங்கள் நிறைந்ததெனில் அது கடல் தான். இன்னும் இன்னும் என எத்தனை தேடினாலும் ஏதாவது கிடைத்துக்கொண்டே இருக்கும். அதுபோன்றதொரு சாகசப் பயணத்திற்கு நம்மை இழுத்துச் செல்கிறது திரைப்படம். “ Cast away”, “Life of Pi ” திரைப்படங்கள்போல் வழி தவறி கடலுக்குள் மாட்டிக்கொள்வதாக அல்லாமல் , திட்டமிட்டே ஒரு ஆராய்ச்சிக்கென தன் குடும்பத்தைப் பிரிந்து மேற்கொள்ளும் பயணத்தின் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு ஸ்வாரஸ்யங்கள். படகின் அடிப்பகுதி கொஞ்சங்கொஞ்சமாய் கரைந்துகொண்டே வருவதாய் கூறும்போது , இவர்கள் சீக்கிரம்...

Extremely Loud & Incredibly Close - என் பார்வையில்..

Image
தந்தையின் மரணத் தருவாயினுடைய கடைசி நொடிகளை தெரிந்தே தவறவிடுவதன் குற்ற உணர்ச்சி , ஒரு சிறுவனை எந்த அளவிற்கு பாதிக்கிறது என்பது தான் “Extremely Loud & Incredibly Close”. படம் முழுக்க பேசிக்கொண்டே இருக்கும் ஒரு கதாப்பாத்திரம்.. கேட்கப் பொறுமையிருந்தால் நிச்சயம் அவன் பேசுவதன் வலி நமக்குப் புரியும். ட்வின் டவர் வீழ்ந்த 9/11 சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட திரைக்கதை. ஒரு விபத்தை வெறும் செய்தியாக மட்டுமே வேடிக்கை பார்ப்பவர்களுக்கு , அதே விபத்தில் தனக்கே தனக்கான ஏதோ ஒன்றை இ ழந்து தவிக்கும் முகம் தெரியாத யாரோ ஒருவருடைய இழப்பை புரிய வைக்க முயற்சித்திருக்கின்றனர். தந்தையின் மரணத்திற்குப் பின் தற்செயலாய் கைக்குக் கிடைக்கும் சாவியை வைத்துக்கொண்டு அதன் மூலத்தை தேடிப் புறப்படும் சிறுவன் , ஒவ்வொரு காட்சியிலும் எதையாவது பார்த்து மிரண்டு ஓடும்போது சில நேரம் நம்மையும் பிரதிபலித்துச் செல்கிறான். Tom Hanks, Sandra Bullock வழக்கம்போலவே கதாப்பாத்திரம் உணர்ந்த நடிப்பு. வாய்பேச முடியாத தாத்தா க்ளாசிக் படைப்பு. அறிமுகமில்லாத சாவியின் உரிமையாளரிடம் தன் தவறுக்கான பாவமன்னிப்பு கேட்டு அழும...

விட்டுச் சென்ற ஏதோ ஒன்று..

Image
அழத் திராணியற்று அலமாறிக்குள் திணிக்கப்பட்டுக் கிடக்கும் அவ்வார்த்தைகள் சொல்வதற்கு எதையோ மிச்சம் வைத்திருக்கின்றன. கொத்தித் திங்கும் நினைவுப் பருந்திற்கு ஓடி ஒளியும் ரண மாமிசங்கள். தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கும் அழைப்பான்களை அறுத்தெறிந்து மெளனத்தின் பேரிரைச்சலுக்குள் புதைந்துகொண்டே.. சதா புகைந்துகொண்டே இருக்கிறது தீர்ந்துவிட்ட சொற்களின் குளிர்ச்சி. அடித்து அடித்தே தோலுரித்த சாட்டையாய் தழும்புகளை அடையாளப்படுத்திப் போகின்றன அப் பிரியங்கள். விட்டுச்சென்ற ஏதோ ஒன்று விழுங்கிக் கொண்டிருக்கிறது எல்லாவற்றையும். .

The Fault in our Stars - என் பார்வையில்..

Image
ஒன்றிலிருந்து பத்துக்குள் நமக்கு ஏற்படும் வலிகளை அளவிடச் சொன்னால் நாம் என்ன செய்வோம் ? அதிகபட்சமாய் ஒன்பது வரைக்கும் காட்டுவோம் தானே ? ( எப்போதாவது பத்தையும்). அந்தக் கடைசி பத்தாவது எண்ணை நாம் சேமித்து வைத்துக்கொண்டே இருப்போம். அதாவது பத்துக்கு பதிலாய் ஒன்பது என்றே குறிப்பிட்டுக் கொண்டிருப்போம். அந்த மன தைரியம் தான் ”The Fault in our Stars ” திரைப்படத்தின் அடித்தளம். மரணத்துடன் போராடிக்கொண்டிருக்கும் வெவ்வேறு விதமான புற்றுநோயாளிகளுடைய உணர்வுகளை ஒரு வயலின் இசை போல உணரச் செய்திருக ்கிறார்கள். அந்த மெல்லிய காதல் , நட்பு , தன்னம்பிக்கை , போராட்டம் அனைத்துமே பார்ப்பவர்களையும் தொற்றிக்கொள்கின்றன. “I willed myself to imagine a world without us... and what a worthless world that would be. ” ( நம்மை இழக்கும் இந்த உலகம் எவ்வளவு பயனற்றதாகிறது!) ” You put the thing that does the killing right between your teeth.. but you never give it the power to kill you.” ( உன்னை கொல்லும் விஷயத்தை மிக நெருக்கமாக வைத்துக்கொள் , ஆனால் உன்னைக் கொன்றுவிடுவதற்கான வாய்ப்பை அதற்கு வழங்கிடாதே!) “The world i...

The LunchBox - என் பார்வையில்..

Image
உங்களைச் சுற்றி யார் யாரோ இருந்தாலும் ஏதோ ஒரு தனிமை உங்களை சூழ்வதுபோல யோசித்திருக்கிறீர்களா ? நம் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள , நம்மை நேசிக்க , நமக்கே நமக்கென யாருமே இல்லையென்ற சூன்யத்தை உணர்ந்திருக்கிறீர்களா ? சட்டென உங்களுக்காய் , உங்களைப் புரிந்துகொண்ட ஒரு நட்பு கிடைத்தால் சந்தோசப்படுவீர்கள் தானே! அப்படியெனில் The Lunchbox திரைப்படத்தின் இரு மையக் கதாப்பாத்திரங்களையும் நிச்சயம் உங்களால் புரிந்துகொள்ள முடியும். ஒரு பக்கம் , பணியிலிருந்து ஓய்வு பெறப்போகும் நாட்களை எண்ணிக்கொண்டு தனக ்கென தனிமையை உருவாக்கிக்கொண்டிருக்கும் Saajan கதாப்பாத்திரம். இன்னொரு புறம் , கணவனின் அன்பு கிடைக்காமல் சதா அடுப்பங்கறையிலேயே காலத்தைக் கழிக்கும் Ila கதாப்பாத்திரம். வெவ்வேறு உலகம் சார்ந்த இவர்களை இணைக்கும் இரண்டு விசயங்கள்.. ஒன்று தனிமை , மற்றொன்று Lunch box. தன் கணவனுக்கென அனுப்பிய மதிய சாப்பாடு தவறுதலாக இன்னொரு நபருக்கு கிடைப்பதில் ஆரம்பிக்கும் இவர்களது அறிமுகம் , பின் டிபன் பாக்சிஸ் வைத்து அனுப்பப்படும் நான்கு வரிக் கடிதத்தில் தொடர்கிறது. தன் கடந்த காலங்கள் , எதிர்பார்ப்புகள்.. என ஒருவருக்கொருவர்...