நாளை கண்டிப்பாக...


புல் மீது விழும்
பூவின் மௌனமாய்
உன் மீதெழும் காதல்
என்னுள்ளாய்..
***
உனது துப்பட்டாவில் பட்டு
சிதறிச் செல்வது
காற்று மற்றுமல்ல
என் காதலும் தான்.
***
கிறுக்கல்கள் கூட
காவியமாய்..
உளறல்கள் கூட
ரகசியமாய்..
எனக்கான ஓருலகம்
ஓவியமாய்.
***
நீளும் என் இரவுகள்
விடியாமல் விழிப்புடன்..
நாளும் உன் நினைவுகள்
முடியாமல் தவிப்புடன்..
***
எத்தனையோ விழுப்புண்கள்
தாங்கிக்கொள்ள முடிந்தது
தாங்க முடியாமல்
தவிக்கிறேன்.
உன் விழி்ப்புண் பட்டதை..
***
எனைக் கடக்கும்
உன் பார்வைக்கு,
ஏற்றதொரு அர்த்தத்தை
எப்போதும் தருவதில்லை
எந்த ஒரு அகராதியும்..
***
கடலையும் நிலவையும்
புதிதாய் ரசிக்கக்
கற்றுக்கொடுத்த நீ
காதலைத் தெரிவிக்க
கற்பிக்கவில்லையே..
***
இதோ..
கொடுக்கப்படாத
உனக்கான என் கடிதங்கள்,
இன்றும் என் அலமாரியில்..
தயக்கங்கள் என்ற பெயரில்.
***
வழக்கம்போல்
சொல்லிக்கொண்டேன்.
“நாளை கண்டிப்பாக”.

***

Comments

R.Gopi said…
மிக அருமையான காதல் கவிதை..

கூடவே லேசான சோகத்தை கூட சொன்னது....

எனக்கு மிகவும் பிடித்த வரிகள் இதோ :

//நீழும் என் இரவுகள்
விடியாமல் விழிப்புடன்..
நாளும் உன் நினைவுகள்
முடியாமல் தவிப்புடன்..
***
எத்தனையோ விழுப்புண்கள்
தாங்கிக்கொள்ள முடிந்தது
தாங்க முடியாமல்
தவிக்கிறேன்.
உன் விழி்ப்புண் பட்டதை//

நீழும் என்பது நீளும் என்ற சொல்லை போன்றதேவா?

//இதோ..
கொடுக்கப்படாத
உனக்கான என் கடிதங்கள்,
இன்றும் என் அலமாறியில்..
தயக்கங்கள் என்ற பெயரில்.//

இதில் அலமாறி என்றிருப்பது அலமாரி என்றிருக்க வேண்டும்....
கருத்துக்கு நன்றி.

சுட்டிக்காட்டிய பிழைகளை திருத்திவிட்டேன்.
சரிதானே கோபி??
கவிதை, அழகாய் இருக்கிறது!!
நீழும் என் இரவுகள்
விடியாமல் விழிப்புடன்..
நாளும் உன் நினைவுகள்
முடியாமல் தவிப்புடன்//

எனக்கு பிடித்த வரி இந்திரா.. நல்லாயிருக்கு..
காதல் வரிகள் அருமை இந்திரா..
தங்களை தொடர் பதிவு எழுத அழைத்துள்ளேன்...

http://verumpaye.blogspot.com/2010/09/blog-post.html
siva said…
usssssssssssssss..yaruppa anga...

entha kavaju tholla thangamduilada sammi...
siva said…
கவிதை, அழகாய் இருக்கிறது!!:

oh really...
siva said…
ada aandava engum PALA nakkerens FAMILY members erukkapanga...

neenga nadathunga..
rightu...
//நீளும் என் இரவுகள்
விடியாமல் விழிப்புடன்..
நாளும் உன் நினைவுகள்
முடியாமல் தவிப்புடன்..

எத்தனையோ விழுப்புண்கள்
தாங்கிக்கொள்ள முடிந்தது
தாங்க முடியாமல்
தவிக்கிறேன்.
உன் விழி்ப்புண் பட்டதை..//

ரொம்ப யதார்தமா எழுதிருக்கீங்க!
அழகான கவிதை ஆனால் சோகம் தான் கொஞ்சம் தூக்கலா இருக்கு.
vinu said…
intha kosu thollai thaanga mudiyalidaaaaaaaaaaaa saami
//புல் மீது விழும்
பூவின் மௌனமாய்
உன் மீதெழும் காதல்
என்னுள்ளாய்..//


அவ்ளோ மென்மைன்னு சொல்ல வர்றிங்களா?
//உனது துப்பட்டாவில் பட்டு
சிதறிச் செல்வது
காற்று மற்றுமல்ல
என் காதலும் தான்.//


எனக்கு தெரிஞ்சு எந்த ஆணும் துப்பட்டா போட்டத்தில்லையே!
//நீளும் என் இரவுகள்
விடியாமல் விழிப்புடன்..
நாளும் உன் நினைவுகள்
முடியாமல் தவிப்புடன்..//


ரியலி அமேசிங்!
//கிறுக்கல்கள் கூட
காவியமாய்..//


உங்க ப்ளாக்கை சொல்றிங்களா?
//எத்தனையோ விழுப்புண்கள்
தாங்கிக்கொள்ள முடிந்தது
தாங்க முடியாமல்
தவிக்கிறேன்.
உன் விழி்ப்புண் பட்டதை..//


உன் விழி்ப்புண் பட்டதை

இதுல சொற்குற்றம் இருக்குன்னு நினைக்கிறேன், வேற வார்த்தை பயன்படுத்தியிருக்கனும், சரி விடுங்க, கவிதையில் எதுக்கு லாஜிக்!
//எனைக் கடக்கும்
உன் பார்வைக்கு,
ஏற்றதொரு அர்த்தத்தை
எப்போதும் தருவதில்லை
எந்த ஒரு அகராதியும்..//

நல்லா பார்த்திங்களா? குமரி முத்து கண்ணா இருக்கப்போவுது!

சும்மா லுலுலாயிக்கு, டென்ஷன் ஆகி மானிட்டரை உடைச்சிராதிங்க!, அப்புறம் நீங்க தான் வாங்கி வைக்கனும்!
//கடலையும் நிலவையும்//


வேர்கடலையா?
வழக்கம்போல்
சொல்லிக்கொண்டேன்.
“நாளை கண்டிப்பாக”.//


இதே போல் கவிதை எழுத வேண்டுமா?
நாடு தாங்குமா?
//இதோ..
கொடுக்கப்படாத
உனக்கான என் கடிதங்கள்,
இன்றும் என் அலமாரியில்..
தயக்கங்கள் என்ற பெயரில்.//


எழுத்து பிழையெல்லாம் சகஜம் தான், இதுக்கே தயங்குனா எப்படி?
இதோ..
கொடுக்கப்படாத
உனக்கான என் கடிதங்கள்,
இன்றும் என் அலமாரியில்..///

இது வேலைக்காகாது
வால்பையன் said..////


எச்சூமி , குட ஈவிங் நல்லா இருக்கிங்களா வால்ஸ் , ஒன்னும் இல்லை சும்மா ஒரு நலம் விசாரிப்பு
எனைக் கடக்கும்
உன் பார்வைக்கு,
ஏற்றதொரு அர்த்தத்தை///

உப்படி பாத்து கிட்டே இருந்த அப்புறம் உங்க கடிதம் உங்க அலமாரில தான் இருக்கும் ,

நல்ல கவிதை
இந்த வரி நல்லாயிருக்கு... இல்ல.. அந்த வரி தான் நல்லாயிருக்கு...

அப்படீன்னு சொல்லமுடியாதபடி எல்லாமே நல்லாயிருக்கு...
Chitra said…
கடலையும் நிலவையும்
புதிதாய் ரசிக்கக்
கற்றுக்கொடுத்த நீ
காதலைத் தெரிவிக்க
கற்பிக்கவில்லையே..

....lovely!
சூப்பர்! விழுப்புண் - விழிப்புண் சூப்பரோ சூப்பர்!!!
siva said…
acutally..enaku kavithai pidikathu...
siva said…
-
கற்றுக்கொடுத்த நீ
காதலைத் தெரிவிக்க
கற்பிக்கவில்லையே...?

:((((
1st say.... Sorry to late....!

////புல் மீது விழும்..... பூவின் மௌனமாய்../////
மிகவும் மென்மையான...
கற்பனையின் உச்சத்தில் உருவான அழகு வரிகள்...
***
///உனது துப்பட்டாவில் பட்டு.... சிதறிச் செல்வது...
காற்று மற்றுமல்ல.... என் காதலும் தான்.////
it's nice...
***
////கிறுக்கல்கள் கூட... காவியமாய்..
உளறல்கள் கூட... ரகசியமாய்..////
நல்ல வரிகள்...
***
///நீளும் என் இரவுகள்...
விடியாமல் விழிப்புடன்..////
காதலின் வலியோ....!
***
///எத்தனையோ விழுப்புண்கள்
தவிக்கிறேன். உன் விழி்ப்புண்////
இக்கவிதையிலே மிகச் சிறந்த... அழகான... அருமையான வரி இது...
நிஜமாய்... இந்த விழுப்புண்... விழிப்புண்... அருமை...
***
///இதோ.. கொடுக்கப்படாத உனக்கான என் கடிதங்கள்,
இன்றும் என் அலமாரியில்.. தயக்கங்கள் என்ற பெயரில்.////

மிக அற்புதம்...
நண்பி இந்திரா... நீண்ட நாட்களுக்குப் பிறகு ஓர் நற்கவிதை....

நட்புடன்.. .
காஞ்சி முரளி....
HariShankar said…
எனக்கு இந்த வரிகள் / வார்த்தைகள் எல்லாம் சொல்லி பேசுறே அளவுக்கு திறமை வளரலங்க.. ஆனா படிச்சேன், ரொம்ப நல்ல இருக்கு (என் கற்பனையில்) .. அருமை .. :)

Popular posts from this blog

மரணவலி தரும் உன் மௌனம்..

நீ அழையாத என் கைபேசி..

பெண்களைக் கவர சில டிப்ஸ்