ஒரு நிமிடம்.. கவிதை (படித்ததில் பிடித்தது)




“ஒரு நிமிஷம் இருடா“ என
ஓடைக்குள் சென்ற அப்பா
விடிந்துதான் வந்து சேர்ந்தார்
வாந்தி நாற்றத்தோடும்
வீழ்ந்து கிடந்ததன் வலிகளோடும்

“ஒரு நிமிஷம் பார்த்துக்க“ என்று சொல்லி
புதருக்குள் ஒளிந்த
பக்கத்து கொல்லைக்காரி
அந்தி சாய்கையில் தான் வந்து சேர்ந்தாள்
கலைந்த தலையோடும்
கொஞ்சம் கதகதப்போடும்.

“ஒரு நிமிஷம் காட்டுடா“ என்ற
பள்ளித்தொழி
பின்பு
பிடுங்கிக் கொண்ட மெயின் ஷீட்டை
பேப்பர் கட்டும்வரை
கொடுக்கவே இல்லை
அரசாங்கத் தேர்வு ஒன்றில்.

“ஒன் மினிட் ப்ளீஸ்“ என்று
பேனா வாங்கிய
பேண்ட் ஆசாமி
இப்போதும்
புரட்டிக் கொண்டிருக்க வேண்டும்
சன்டே ஹிண்டுவில்
ஆப்பர்ச்சூனிட்டி பக்கங்களை.

“ஒரு நிமிஷம் ப்ளீஸ்“ என்று
வாங்கிய பக்கத்து இருக்கைக்காரர்
இந்த நிறுத்தத்தில்தான் இறங்கியிருப்பார்
திருப்பிக் கொடுக்காத தினசரியோடு.

ஒரு நிமிடத்திற்கு யாரேனும்
அறுபது நொடியென்றால்
நம்பவே முடிவதில்லை இப்போது.

ஒரு நிமிடத்தை
ஒரு நிமிடமாய்
இருக்கவிட்டதில்லை
எப்போதும் நாம்.

------------

(“பட்டாம்பூச்சிகளின் சாபம்“ புத்தகத்திலிருந்து..)

.

.

Comments

வணக்கம் சகோ

ஒரு நிமிஷம்.....
ஒரு நிமிசத்தில் வந்திட்டேன்

ஒரு நிமிடம் என்பது வழக்கு மொழியாகி போனதோ...??
Oru Nimisathukkul etthanai nodikal olinthu irukku endru yaarukkum theriyathu....
vinu said…
////பள்ளித்தொழி////

he he he he
Marc said…
மிக அருமையான சுவாரசியமான பதிவு வாழ்த்துகள்
Unknown said…
ONE MIN..PLS I COME BACK LATER..:)
Unknown said…
கைபேசியில் பேசும்போது "ஒரு நிமிஷம்" என்று சொல்லி விடுவது சுலபம்தான். அந்த ஒரு நிமிடத்திற்கு ஒரு ரூபாய் வரை வாங்கும் நெட் ஒர்க் கள் இருக்கின்றனவே!
ஒன் நிமிட்...!
சாரி...!

ஒன் மினிட்...!
ஒரு நிமிடம்...!
ఒక్క నిమిషంలో....!
एक मिनिट...!
One Second...!
இயல்பாக நடக்கிற - நடக்கக் கூடாத செயல்கள் - ஒரு மணித்துளி எனக் கேட்கும் போது ......... மறுக்க வேண்டும். சிந்தனை நன்று - நல்வாழ்த்துகள் இந்திரா - நட்புடன் சீனா
ஒரு நிமிஷ தவணை வாங்குபவர்களைப் பற்றி யோசிக்க வைக்கிறது....புத்தகம் பெயர் போட்டிருக்கிறீர்கள்...யார் எழுதியது என்று சொல்லவில்லையே....
Unknown said…
ஒரு நிமிஷம் அவகாசம் கேட்பவரின் நடைத்தையும் அதை கொடுப்பவரின் நிலையும் இக்கவி மிக்க நன்று...
//ஸ்ரீராம். said...

ஒரு நிமிஷ தவணை வாங்குபவர்களைப் பற்றி யோசிக்க வைக்கிறது....புத்தகம் பெயர் போட்டிருக்கிறீர்கள்...யார் எழுதியது என்று சொல்லவில்லையே....//


புத்தகம் இரவல் வாங்கியிருந்தேன். எழுதியவரை கவனிக்க மறந்துட்டேன். ஆனால் தெரிந்தவுடன் கண்டிப்பாக கூறுகிறேன்.
ஒரு நிமிஷம் எனை பல மணி நேரம் சிந்திக்க வைத்தது அருமை .
தங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன்.
பார்க்க:
http://www.tamilvaasi.com/2012/03/blog-post.html
கருத்துக்களைப் பகிர்ந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்..

Popular posts from this blog

மரணவலி தரும் உன் மௌனம்..

நீ அழையாத என் கைபேசி..

பெண்களைக் கவர சில டிப்ஸ்