Posts

Showing posts from June, 2011

காகத்தின் விடுமுறைக்காக..

Image
காகம் வடை தூக்கிச் சென்றதாம்.. கதை கேட்டபடி சாதம் உண்டேன்.. ஒரு நாளில்.. கிறுக்கலாக வரைந்த படத்தில் கருமை கொடுத்து காகம் என்றேன்.. இன்னொரு நாளில்.. தொலைந்த பொருள் எங்கே ? எனக் கேட்டவரிடம் “ காக்கா தூக்கிட்டுப் போய்டுச்சு “ என்று அழகு காட்டினேன்.. மற்றொரு நாளில்.. காகம் கரைந்தால் விருந்தாளிகள் வருவார்களாம்.. கொணரும் தின்பண்டத்திற்காக எதிர்நோக்கி இருந்தேன்.. மேலும் ஒரு நாளில்.. இறந்துபோன தாத்தா மாறுவேடத்தில் வருவாரென அப்பா கூறியதை நம்பி ஓட்டின் மீது படையல் வைத்தேன்.. வேறொரு நாளில்.. பட்டாசுக்கு பயந்து பறந்தோடும் காகங்களை வேடிக்கையாய்ப் பார்த்தேன்.. பிரிதொரு நாளில்.. மின்சாரக் கம்பத்தில் மடிந்த ஒன்றைச் சுற்றி மற்றவை கரைந்தபோது வெறுமையாய்ப் பார்த்தேன்.. சுடுதலாக ஒரு நாளில்.. வாட்டிய பசியும் வறண்டு போன இதயமுமாய் அண்டைவீட்டு சுவற்றில் வைக்கப்பட்ட பித்ருக்களின் உணவருகே காத்திருக்கிறேன் காகத்தின் விடுமுறைக்காக.. இன்றெனும் ஒரு நாளில்.. . .

கேட்டதில் ரசித்தது..

Image
படம்: உன்னுடன் இசை: தேவா பாடல்: கோபமா என் மேல் கோபமா குரல்: ஹரிஹரன் கோபமா என் மேல் கோபமா பேசம்மா ஒரு மொழி பேசம்மா என் பாலைவனத்தில் உந்தன் பார்வை ஆறு வந்து பாய்ந்திடுமா உன் ஊடல் தீர்வதற்குள் எந்தன் ஜீவன் மெல்ல ஓய்ந்திடுமா உள் உயிரே உருகுதம்மா...ஆ... (கோபமா) உன் பார்வை வடிக்கின்ற பாலொளியில் என் வானம் விடியுமடி உன் பாதம் படிகின்ற சிறு துகளில் என் ஆவி துடிக்குதடி கோபமா என் மேல் கோபமா என் மார்பு கீரடி பெண்ணே அதில் உன் முகம் தோன்றிடும் கண்ணே (2) கண்கள் சாமரம் வீசிடுமா இல்லை காயத்தில் கத்தி வீசிடுமா (கோபமா) நான் கண்களைத் தொலைத்துப் பிறந்திருந்தால் இந்தக் காதல் துயரமில்லை நீ இன்னொ

என் காதலே..

Image
உயிர் வாழ சுவாசம் அவசியமாம் .. எங்கிருந்தாலும் உடனே வா .. நான் சுவாசிக்க வேண்டும் !! உன் கோபத்தின் மௌனங்களும் என் செல்லமான சமாதானங்களும் அவ்வபோது உறுதி செய்கின்றன ... நம் காதலின் வலுவை . . " அப்படியா ?" என்ற உன் ஒற்றை வார்த்தை நீட்டுகின்றன என் பேச்சுக்களின் அளவை .. சிறுபிள்ளையாய் நான் விவரிப்பதை சொல்லாமல் ரசிக்கும் தருணங்களில் எனக்கேன் தெரிவதில்லை ? ஏற்கனவே நீ அறிந்தவை தான் என்று ? ??? எனது தோள்கள் உன் காதுகளுடன் ரகசியம் பேச வேண்டுமாம் .. சற்றே சாய்ந்துகொள்ளேன் .. உலகமே என் கைக்குள் அடங்கியது .. என் உள்ளங்கையில் உனது ரேகைகள் ... . .