ஜோக்ஸ் மாதிரி.. (சிரிப்பு வரலைனா நா பொறுப்பில்ல..)



இது ஒரு உப்புமா பதிவு.. பதிவெழுத நேரமில்லாதனால (வெட்டியா இருந்தாலும் நாங்க ரொம்ப பிசினு சீன் போடுவோம்ல) எங்கயோ கேள்விப்பட்ட ஜோக்ஸ பகிர்ந்துக்குறேன்.

(எங்க பக்கத்து வீட்டு பாட்டி மேல சத்தியமா இத யாரு எழுதுனதுனு தெரியாதுங்க. இங்க கிறுக்குனது நாங்குறதுனால கிறுக்கியது: இந்திரா“னு வரும். அப்புறம் யாரும் சண்டைக்கு வந்துடாதீங்க.. சொல்லிபுட்டேன்.)

********************************

பக்கத்து வீட்டுக்காரன் ஓசிப் பேப்பர் கேட்கறான்னு பேப்பரை நிறுத்துனது தப்பாப் போச்சு..

ஏன்?

இப்ப நியூஸ் கேட்டுட்டுத் தரேன்னு டிவிஐ ஓசி கேக்குறான்.

********************************

உங்க வீட்ல சமையல்காரனா வேலை செய்ய நா ஒத்துக்குறேன். ஆனா ஒரு கண்டிசன்.

என்ன கண்டிசன்? தயங்காம சொல்லு.

என்னையும் இங்கயே சாப்பிடுனு வற்புறுத்தக் கூடாது.

********************************

நண்பர் : உங்க மனைவி, யாருக்கு ஓட்டுப் போடுவாங்க?

கணவன் : நா யாருக்கு ஓட்டுப் போடுவேனோ.. அவருக்குத்தான்.

நண்பர் : நீங்க யாருக்கு ஓட்டுப் போடுவீங்க?

கணவன் : அதை இன்னும் என் மனைவி முடிவு செய்யலையே..

********************************

அம்மா : ரமேஷ், அப்பாவை கூப்பிடு.

ரமேஷ் : அப்பா அப்பா இங்க வா..

அம்மா : அப்பாவை இப்படிக் கூப்பிடக் கூடாது. மரியாதையா பேசணும். சரியா.

ரமேஷ் : அப்பா! மரியாதையா இங்க வா.

********************************

பார்வையாளன் : நேத்து நடந்த ஓவியக் கண்காட்சியில உங்க ஓவியம் தான் பாக்குற மாதிரி இருந்துச்சு.

ஓவியர் : ரொம்ப நன்றிங்க.

பார்வையாளன் : ஆமா.. மத்த ஓவியங்களைச் சுத்தி ஒரே கூட்டம். பாக்கவே முடியல.

********************************

அதிகாரி : ஏம்மா ஆபீசுக்கு லேட்டு?

ஸ்டாஃப் : மாடிப் படியில இறங்கும்போது உருண்டு கீழ விழுந்துட்டேன் சார்.

அதிகாரி : அப்ப சீக்கிரம் வந்திருக்கணுமே..

********************************

கரப்பான் பூச்சியை கொல்ல அந்துருண்டை வாங்கினியே.. என்னாச்சு?

அந்துருண்டையால குறி பாத்து அடிச்சுப் பாத்தேன். கரப்பான் பூச்சி பறந்து போயிடுச்சு.

********************************

சார் : வேலு.. ஏண்டா லேட்டா வர்ற?

வேலு : என் காசை தொலைச்சுட்டு தேடினேன் சார். அதுனால லேட்டாய்டுச்சு.

சார் : சரி.. பாலு நீ ஏண்டா லேட்டு?

பாலு : அந்தக் காசை என் காலடியில் மறைச்சு வச்சுகிட்டு இருந்தேன் சார். நகர முடியல. அதனால தான் லேட்டாய்டுச்சு.

********************************

மேடம் நீங்க எவ்வளவோ ஜோக்ஸ் சொல்றீங்க.. ஆனா ஜோக்ஸ் எதுவுமே சிரிக்கிற மாதிரி இல்லையே..

ஜோக்ஸ் எப்படி சார் சிரிக்கும்?? நாம தான் சிரிக்கணும்.

********************************

.

.

Comments

Speed Master said…
//கரப்பான் பூச்சியை கொல்ல அந்துருண்டை வாங்கினியே.. என்னாச்சு?

அந்துருண்டையால குறி பாத்து அடிச்சுப் பாத்தேன். கரப்பான் பூச்சி பறந்து போயிடுச்சு.

//
பார்வையாளன் : நேத்து நடந்த ஓவியக் கண்காட்சியில உங்க ஓவியம் தான் பாக்குற மாதிரி இருந்துச்சு.

ஓவியர் : ரொம்ப நன்றிங்க.

பார்வையாளன் : ஆமா.. மத்த ஓவியங்களைச் சுத்தி ஒரே கூட்டம். பாக்கவே முடியல


சூப்பர்
karthikkumar said…
மேடம் நீங்க எவ்வளவோ ஜோக்ஸ் சொல்றீங்க.. ஆனா ஜோக்ஸ் எதுவுமே சிரிக்கிற மாதிரி இல்லையே..

ஜோக்ஸ் எப்படி சார் சிரிக்கும்?? நாம தான் சிரிக்கணும்////

இது நீங்க எங்களுக்கு சொல்ற பதில்தானே....:)
karthikkumar said…
இங்க கிறுக்குனது நாங்குறதுனால கிறுக்கியது: இந்திரா“னு வரும். அப்புறம் யாரும் சண்டைக்கு வந்துடாதீங்க.. ///

சண்டை இல்லாம எப்படிங்க யாராச்சும் ரெண்டு பேர் அடிச்சிக்கிட்டாதானே பாக்குறவங்களுக்கு நேரம் போகும்....
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
என்ன ஒரு வில்லத்தனம்?


இப்பவே கண்ணக் கட்டுதே.........
ஓ... இதுதான் ஜோக்கா???

சும்மா ஜோக்கு பண்ணாதீங்க...ஹிஹிஹி
// karthikkumar said...
இங்க கிறுக்குனது நாங்குறதுனால கிறுக்கியது: இந்திரா“னு வரும். அப்புறம் யாரும் சண்டைக்கு வந்துடாதீங்க.. ///

சண்டை இல்லாம எப்படிங்க யாராச்சும் ரெண்டு பேர் அடிச்சிக்கிட்டாதானே பாக்குறவங்களுக்கு நேரம் போகும்...///

ஏன் பங்கு இப்படி ஒரு கொலவெறி...பார்த்துப்பு அப்புறம் கொலகேசுல உள்ள போயிடப்போற நான் ஜாமீன் எடுக்க வரமாட்டேன்...ஹிஹிஹி
///மாணவன் said...
ஓ... இதுதான் ஜோக்கா???

சும்மா ஜோக்கு பண்ணாதீங்க...ஹிஹிஹி///

Ctrl +C, Ctrl+ V.

ரிப்பீட்டு...........
///(எங்க பக்கத்து வீட்டு பாட்டி மேல சத்தியமா இத யாரு எழுதுனதுனு தெரியாதுங்க. இங்க கிறுக்குனது நாங்குறதுனால கிறுக்கியது: இந்திரா“னு வரும். அப்புறம் யாரும் சண்டைக்கு வந்துடாதீங்க.. சொல்லிபுட்டேன்.)///

ம்ம்ம்... அந்த பயம் இருக்கட்டும்........ஹிஹிஹி
karthikkumar said…
மாணவன் said...
// karthikkumar said...
இங்க கிறுக்குனது நாங்குறதுனால கிறுக்கியது: இந்திரா“னு வரும். அப்புறம் யாரும் சண்டைக்கு வந்துடாதீங்க.. ///

சண்டை இல்லாம எப்படிங்க யாராச்சும் ரெண்டு பேர் அடிச்சிக்கிட்டாதானே பாக்குறவங்களுக்கு நேரம் போகும்...///

ஏன் பங்கு இப்படி ஒரு கொலவெறி...பார்த்துப்பு அப்புறம் கொலகேசுல உள்ள போயிடப்போற நான் ஜாமீன் எடுக்க வரமாட்டேன்...ஹிஹிஹி///

யோவ்! சண்டைய வேடிக்க பாக்குறவன் எதுக்கு கொலகேசுல உள்ள போகணும் ஹி ஹி ஹி...
//ஜோக்ஸ் எப்படி சார் சிரிக்கும்?? நாம தான் சிரிக்கணும்.//



ஹா ஹா ஹா ஹா ஹா.....
சிரிச்சிட்டேன்...
சரி. இப்ப நான் என்ன செய்ய(தம்பி மாதவன் ஸ்டைல் )
ஜோக்கு சொல்றேன்னு மேல ஒரு படம் போட்டு இப்படி பயமுறுத்துனா யாரு சிரிப்பாங்க....:-))
//யோவ்! சண்டைய வேடிக்க பாக்குறவன் எதுக்கு கொலகேசுல உள்ள போகணும் ஹி ஹி ஹி.//

இப்பல்லாம் கொலைபண்றவங்களவிட்டுட்டு வேடிக்கை பார்க்குறவங்களதான் முதல்ல புடிக்கிறாங்களாம்...உனக்கு தெரியாதா பங்கு....பார்த்து உஷாரா இருந்துக்க சொல்லிபுட்டேன்...ஹிஹி
karthikkumar said…
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
சரி. இப்ப நான் என்ன செய்ய(தம்பி மாதவன் ஸ்டைல் ///

ஆபீஸ்ல வேலைய பாருங்க ஹி ஹி (திருப்பூர் கார்த்திக்குமார் ஸ்டைல்)
R.Gopi said…
ஹலோ....

தலைப்புல ஜோக்ஸ் மாதிரின்னு சொல்லி இருக்கீங்களே!!!

பதிவு பூரா தேடியும் ஒரு மாதிரி கூட கிடைக்கலியே!!!
மாணவன் said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
சரி. இப்ப நான் என்ன செய்ய(தம்பி மாதவன் ஸ்டைல் )///

ஆணியே புடுங்க வேணாம் (வடிவேலு ஸ்டைல்) ஹிஹி//


mmmmm
// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
சரி. இப்ப நான் என்ன செய்ய(தம்பி மாதவன் ஸ்டைல் )///

ஆணியே புடுங்க வேணாம் (வடிவேலு ஸ்டைல்) ஹிஹி
karthikkumar said…
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
dubakoor karthikkumar///

கமென்ட் கூட காபியா? "ரமேஷ் டுபாகூர் சத்தியமா" இனிமேல் இதான் உங்க பேரு ஹி ஹி ...
"karthikkumar டுபாகூர் சத்தியமா" இனிமேல் இதான் உங்க பேரு ஹி ஹி ...
karthikkumar said…
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
"karthikkumar டுபாகூர் சத்தியமா" இனிமேல் இதான் உங்க பேரு ஹி ஹி //

ஐயா சாமி முடியல. விட்ருங்க....
// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
"karthikkumar டுபாகூர் சத்தியமா" இனிமேல் இதான் உங்க பேரு ஹி ஹி ...

karthikkumar said...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
dubakoor karthikkumar///

கமென்ட் கூட காபியா? "ரமேஷ் டுபாகூர் சத்தியமா" இனிமேல் இதான் உங்க பேரு ஹி ஹி ..///

என்ன வெளையாட்டு இது சின்னப்புள்ளத்தனமா படுவா பிச்சுபுடுவேன் பிச்சு........ஹிஹி
logu.. said…
\\(வெட்டியா இருந்தாலும் நாங்க ரொம்ப பிசினு சீன் போடுவோம்ல)\\

Neenga romba bc nu sonnalum vetti velaithan seiveenganu nallave therium.
//(எங்க பக்கத்து வீட்டு பாட்டி மேல சத்தியமா இத யாரு எழுதுனதுனு தெரியாதுங்க. இங்க கிறுக்குனது நாங்குறதுனால கிறுக்கியது: இந்திரா“னு வரும். அப்புறம் யாரும் சண்டைக்கு வந்துடாதீங்க.. சொல்லிபுட்டேன்.)
//

நீங்க அந்த சம்பவத்த மறக்கவே மாட்டீங்களா.???

அப்பரம் ஜோக்ஸ்க்கு ஹி ஹீ.. சிரிச்சன்...
ஏண்டா...! சாமி...! என்னை இந்த பதிவ படிக்கவச்சே...!
ஜோக் நல்லா இருக்குன்னு
சொல்றவங்களை எல்லாம்
கெட்ட வார்த்தையில திட்டுவாங்க
போல..

சரி.. இதுக்குகெல்லாமா நான்
பயப்படுவேன்.. உண்மையை சொல்லிடுறேன்..

ரமேஷ் எனக்கு போன் பண்ணி..
" இந்திரா பிளாக்ல ஜோக் நல்லா
இருக்கு.. போயி படிங்கன்னு சொன்னார்ப்பா.. "

ஹி., ஹி.., ஹி..
Lakshmi said…
இங்க வந்து கொஞ்சம் கிசு, கிச்சு மூட்டி விடுங்களேன், அப்பவாவது சிரிப்பு வர்தான்னு பாக்கலாம்,
எனக்கு வெங்கட் சொன்னார்பா...ஜோக் நல்லா இருக்குனு சொன்னார்
Ramani said…
சிரித்துக்கொண்டேதான் நன்று என சொல்லுகிறேன்
வாழ்த்துக்கள்
// இது ஒரு உப்புமா பதிவு.. //

சூர்யவம்சம் படத்துல தேவயாணி செய்வாங்களே... அந்த மாதிரியா...

// பார்வையாளன் //


அந்தப்பதிவர் ஓவியக்கண்காட்சிக்கு கூட போவாரா..?
Balaji saravana said…
எங்க ஜோக்?! எங்க ஜோக்?!

//சிரிப்பு போலிஸ், மாணவன், கார்த்திக் குமார் may say

யோவ், நாங்களே 8 மணி நேரமா தேடிக்கிட்டு இருக்கோம் நீ இப்போ வந்திட்டு எங்க எங்கன்னு கேக்குற! கெடச்சா சொல்லி அனுப்புறோம் அப்புறம் வா! ;)
வெங்கட் said...

ஜோக் நல்லா இருக்குன்னு
சொல்றவங்களை எல்லாம்
கெட்ட வார்த்தையில திட்டுவாங்க
போல..

சரி.. இதுக்குகெல்லாமா நான்
பயப்படுவேன்.. உண்மையை சொல்லிடுறேன்..

ரமேஷ் எனக்கு போன் பண்ணி..
" இந்திரா பிளாக்ல ஜோக் நல்லா
இருக்கு.. போயி படிங்கன்னு சொன்னார்ப்பா.. "

ஹி., ஹி.., ஹி..//

என்னை எதுக்கு நம்புறீங்க. நீங்க கூடத்தான் நல்லா ப்ளாக் எழுதுறீங்கன்னு எல்லோருக்கும் சொல்றேன். எவனாவது என்னை நம்புறானா?
ஆமா.. அந்த படத்தில இருக்கற கொழந்த சிரிப்ப அடக்குதா.. இல்ல பயப்படுதா..

இல்ல பயமுறுத்துதா..?

ரொம்ப அரட்டுதுங்க..
//உங்க வீட்ல சமையல்காரனா வேலை செய்ய நா ஒத்துக்குறேன். ஆனா ஒரு கண்டிசன்.
என்ன கண்டிசன்? தயங்காம சொல்லு.
என்னையும் இங்கயே சாப்பிடுனு வற்புறுத்தக் கூடாது//

சிபி செந்தில் குமாருக்கு போட்டியா ஒரு சிங்கம் களம் இறங்கிடுச்சிடோய்ய்ய்ய்ய்ய்
ஜோக் சிரிக்குதோ இல்லையோ நாங்க சிரிச்சிட்டோம்... ஹி..ஹி..
சிரிப்பு வந்திச்சு ஆனா வரல்ல
kalai said…
ha......... ha.......... crichutom jokes nalla eruku
Riyas said…
எல்லாம் செம காமெடி...
நல்ல வேள ஜோக்ஸ்னு சொல்லிட்டீங்க, நானும் சிரிச்சுட்டேன்!
//////அருண் பிரசாத் said...
எனக்கு வெங்கட் சொன்னார்பா...ஜோக் நல்லா இருக்குனு சொன்னார்/////

எனக்கு யாருமே சொல்லல, அதுனால நானே சொல்லிக்கிறேன், ஜோக் நல்லாருக்குங்கோ!
/////இது ஒரு உப்புமா பதிவு.. /////

நானும் அரைமணிநேரமா தேடிக்கிட்டு இருக்கேன், உப்புமா எங்கே?
அனைத்து நகைச்சுவைகளும் நன்றாக இருந்தது..(சத்தியமாக)..வாழ்த்துக்கள்!!!
அரசன் said…
சோக்கு நல்லா இருக்குங்க
jayakumar said…
really good work...pls visit my blog also ...halo...naanum madurai thaanga...www.kmr-wellwishers.blogspot.com
கவிதை காதலன் said...

//உங்க வீட்ல சமையல்காரனா வேலை செய்ய நா ஒத்துக்குறேன். ஆனா ஒரு கண்டிசன்.
என்ன கண்டிசன்? தயங்காம சொல்லு.
என்னையும் இங்கயே சாப்பிடுனு வற்புறுத்தக் கூடாது//

சிபி செந்தில் குமாருக்கு போட்டியா ஒரு சிங்கம் களம் இறங்கிடுச்சிடோய்ய்ய்ய்ய்ய்


ayyayyoo அய்யய்யோ

Popular posts from this blog

மரணவலி தரும் உன் மௌனம்..

நீ அழையாத என் கைபேசி..

பெண்களைக் கவர சில டிப்ஸ்