குழந்தைகள் பொய் சொல்லாமல் தடுக்க சில யோசனைகள்..




1.       குழந்தையிடம் நீங்கள் உண்மையே பேச வேண்டும். அதன் முன்னிலையில் யாரிடமும் பொய் சொல்லாதீர்கள்.
2.       அதற்கு நீங்களே பொய் சொல்லக் கற்றுக் கொடுக்கக் கூடாது. வேண்டாத விருந்தாளிகள் யாராவது அப்பா இருக்காரா“னு கேக்கும்போது, இல்லைனு சொல்லு என்று உங்கள் குழந்தையை விட்டுச் சொல்லக் கூடாது. இது தவறு.
3.       உங்கள் குழந்தையைக் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்காதீர்கள். (அதன் பயமே அதற்குப் பொய் சொல்லத் தூண்டுமாம்).
4.       அதன் கற்பனை சக்தியை வளர்ப்பது நல்லதுதான். அதிலேயே அதிக கவனம் செலுத்தி உண்மைக்கும், கற்பனைக்கும் வேறுபாடு தெரியாமல் செய்துவிடாதீர்கள்.
5.       இதைச் செய்யாதே, அதைத் தொடாதே என்று பல கட்டுப்பாடுகளைக் குழந்தை மீது சுமத்தாதீர்கள். கூடியவரை குறைத்துக் கொள்ளுங்கள். (அதிகத் தடைகள் ஏற்பட்டால் அவற்றைக் கடைபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுப் பொய் சொல்ல நேரிடலாம்).
6.       குழந்தையிடம் திருப்பித் திருப்பிச் சாமர்த்தியமான கேள்விகளை கேட்காதீர்கள். அவற்றால் கலக்கமடைந்து பொய் சொல்ல ஆரம்பிக்கும். பிறகு அது தெரிந்தே பொய் சொல்ல இது வழிகாட்டும்.
7.       பொய் சொல்வதால் ஏற்படும் தீமைகள் பற்றி மிகைப்படுத்தி அதற்கு உபதேசம் செய்யாதீர்கள். சிறிய தவறுகள் நேரிட்டால் என்ன கெடுதல் வந்து விடுமோ என்று அது பயந்து பலவகையான மனக்குழப்பங்களுக்கு ஆளாக நேரிடும். மாறாக, உண்மையாக இருப்பதால் ஏற்படும் நன்மை பற்றி எடுத்துக் கூறுங்கள்.
8.       உண்மை பேசும்போது நீங்கள் அதற்காக உற்சாக மூட்டுங்கள். உண்மை பேசுவதைப் பலவகையிலும் ஆதரியுங்கள். தவறு செய்தபின் உண்மையை உங்களிடம் ஒளிக்காமல் சொல்லும் போது, செய்த தவறுக்காகக் கடிந்து கொள்ளாதீர்கள். உண்மை சொன்னதற்காகப் பாராட்டுங்கள். பிறகு இனிமேல் இப்படிச் செய்யாதே என்ற வார்த்தையே அதைத் திருத்தப் போதுமானது. தண்டனையால் பெற முயன்ற பலனை இம்முறையால் நிச்சயமாகப் பெறலாம்.
.

 இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்..

.

(குழந்தை வளர்ப்புக் கலை புத்தகத்திலிருந்து)
.
.

Comments

Unknown said…
அருமையான விஷயங்கள்...குழந்தைகளை அவர்களாகவே புரிந்து கொள்ளும்படி விட்டு விட்டால் நல்லது...இன்றைய காலகட்டத்தில் அவர்கள் பெரியவர்களுக்கு பல விஷயங்களின் முன்னோடியாக இருக்கிறார்கள் எனபது உண்மை!
//பொய் சொல்வதால் ஏற்படும் தீமைகள் பற்றி மிகைப்படுத்தி அதற்கு உபதேசம் செய்யாதீர்கள். சிறிய தவறுகள் நேரிட்டால் என்ன கெடுதல் வந்து விடுமோ என்று அது பயந்து பலவகையான மனக்குழப்பங்களுக்கு ஆளாக நேரிடும். மாறாக, உண்மையாக இருப்பதால் ஏற்படும் நன்மை பற்றி எடுத்துக் கூறுங்கள்.
//

உண்மை.. மிக நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.
K.s.s.Rajh said…
நல்ல ஆலோசனைகள் மேடம்
உண்மை சொன்னதற்காகப் பாராட்டுங்கள். பிறகு இனிமேல் இப்படிச் செய்யாதே என்ற வார்த்தையே அதைத் திருத்தப் போதுமானது. தண்டனையால் பெற முயன்ற பலனை இம்முறையால் நிச்சயமாகப் பெறலாம்.

அருமையான பகிர்வு. பாராட்டுக்கள்..
.
Unknown said…
அனைத்தும் உண்மை
பயன் உள்ள பதிவு அருமை
COOL said…
தேவையான ஆலோசனைகள்.

குழந்தைகள் தின வாழ்த்துக்கள்...
குழந்தைகள் பல பலக்கத்தை பெற்றோரிடமிருந்து தான் கற்றுக்கொள்கின்றன...

பகிர்வுக்கு நன்றி... சகோ...

குழந்தைகள் தின வாழ்த்துகள்.
ஆலோசனைகள் அத்தனையும் அருமை சகோதரி...
பகிர்வுக்கு நன்றிகள் பல..


குழந்தைகள் தின வாழ்த்துகள்.
baleno said…
குழந்தைகள் தினம் வருவதற்கான முன்னேற்பாடாக பயனுள்ள பதிவு.
குழந்தைகளுக்கான ஆலோசனை மிகஅருமை.....
எல்லாம் சரி!, பெரியவர்கள்....சமுதாயத்தில் மதிப்பு மிக்கோர் கூசாமல் பொய் சொல்கிறார்களே!
அவர்களைத் திருத்த ஏதாவது வழியிருந்தால் சொல்லுங்கள். அனுப்ப ஒரு பட்டியலே உள்ளது.
குழந்தையர் தினமன்று குழந்தைக்காய் பெற்றோருக்கு அறிவுரைகள் கலக்கல் நன்றிகள்...!!!
எளிமையான ஆயினும் சக்திமிக்க ஆலோசனைகள்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
”டூ - காய்” அல்ல
“சேத்தி - பழம்” இப்போ OK யா
vgk


குழந்தைகள் தினத்திற்கு ஏற்ற அருமையான பதிவு.

//உண்மை சொன்னதற்காகப் பாராட்டுங்கள். பிறகு இனிமேல் இப்படிச் செய்யாதே என்ற வார்த்தையே அதைத் திருத்தப் போதுமானது. தண்டனையால் பெற முயன்ற பலனை இம்முறையால் நிச்சயமாகப் பெறலாம்.//

அருமையான பகிர்வு. பாராட்டுக்கள்..
.
vimalanperali said…
வாஸ்தவமான பேச்சு....
நல்ல அறிவுரைகளுக்கு நன்றி
ஹேமா said…
இந்திரா...உண்மையில் நல்லதொரு செய்திகொண்ட பதிவு !
தவறு செய்தபின் உண்மையை உங்களிடம் ஒளிக்காமல் சொல்லும் போது, செய்த தவறுக்காகக் கடிந்து கொள்ளாதீர்கள். உண்மை சொன்னதற்காகப் பாராட்டுங்கள். பிறகு இனிமேல் இப்படிச் செய்யாதே என்ற வார்த்தையே அதைத் திருத்தப் போதுமானது. தண்டனையால் பெற முயன்ற பலனை இம்முறையால் நிச்சயமாகப் பெறலாம்.

-அருமையான வரிகள். குழந்தைகள் தினத்தில் நல்ல விஷயத்தைச் சொன்ன உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நல்லதொரு குழந்தைகளுக்கான மன இயல் ஆய்வு பதிவு.. பகிர்வுக்கு நன்றி.
PUTHIYATHENRAL said…
குழந்தைகள் தன தாய், தகப்பனிடம் இருந்தும், நண்பர்களிடம் இருந்துமே நிறைய விசயங்களை கற்று கொள்கின்றனர். குழந்தைகளுக்கு நல்ல பெற்றோராக நாம் இருக்க வேண்டும் அதே நேரம் நல்ல நண்பர்களை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
PUTHIYATHENRAL said…
குழந்தைகள் தன தாய், தகப்பனிடம் இருந்தும், நண்பர்களிடம் இருந்துமே நிறைய விசயங்களை கற்று கொள்கின்றனர். குழந்தைகளுக்கு நல்ல பெற்றோராக நாம் இருக்க வேண்டும் அதே நேரம் நல்ல நண்பர்களை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
உண்மை பேசும்போது கிடைக்கிற நிம்மதிக்காகவே உண்மை பேசலாம்..
நல்ல பதிவு.
அப்பா வீட்டுல இல்லன்னு சொல்லு.
....
அங்கிள்.... அப்பா வீட்டுல இல்லன்னு சொல்ல சொன்னாங்க.
கருத்துக்களைப் பகிர்ந்த பகிரப்போகும் நண்பர்களுக்கும் நன்றிகள்..

Popular posts from this blog

மரணவலி தரும் உன் மௌனம்..

நீ அழையாத என் கைபேசி..

பெண்களைக் கவர சில டிப்ஸ்