மரணவலி தரும் உன் மௌனம்..
என் ஆன்மாவை ஆணிவேரோடு பிடுங்கி அழகு பார்த்திடும் உன் ஆணவத்தில் என் அனைத்து ஆரம்பங்களும் அடங்கித்தான் போயின.. . தனிமையெனும் தீவில் துன்புறுத்தியும் தொல்லைபடுத்தியும் தற்காலிகமான தற்கொலைக்குத் தூண்டும் உன் நினைவுகள்.. . நாட்கள் நிறைந்த நொடிகளும் வருடம் நிறைந்த நிமிடங்களுமாய் நகராது நோகடிக்கிறது நாசூக்காய்.. . உன்னை நினைத்தே நுரைத்துக் கிடக்கிறது என் நுரையீரல்.. . நினைவுகளை தானமாகத் தந்துவிட்டு நிதானமாய்க் கொன்று கொண்டிருக்கிறாய்.. . என் கட்டுக்கடங்காத பிரியங்களைக் கலைத்தும் தொலைத்தும் விளையாடும் உனக்கு கண்கள் மட்டுமா கருணையும் இல்லை. . மண்புழுவாய்த் துடிக்கும் என் மனதினுள் மயானம் அமைத்து மறவாமல் அடிக்கிறாய் உன் மௌனச் சவுக்கால்.. . பட்டும் படாமலுமான உன் பார்வை நகத்தினால் படுகாயப்படுத்துகிறாய் பாழாய்ப்போன என் இதயத்தை. . நிர்வாணமாய்த் திரியும் என் நிம்மதிகளுக்கும் நார் நாராய்க் கிழிந்த என் காதலுக்கும் நீண்ட துணை உன்னாலான என் ரணங்கள் தான். . பத்திரமாய் பத்திரப்படுத்துகிறேன் நீ தந்த வலிகளை. ஆறாத
Comments
பகிர்வுக்கு பாராட்டுக்கள்.
நண்பர்களுக்கும் சக பதிவர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
பாதுகாப்பு படங்கள் அருமை... பார்த்த படங்கள் என்றாலும்.... மீண்டும் பார்க்க, சிரிப்பை வரவழைத்தது...
பொங்கல் நல்வாழ்த்துக்கள் இந்திரா.
"முன்ஜாக்கிரதை முனுசாமியா" இருக்காங்களே...!
ஹா...! ஹா...! ஹா...!
தைத் திங்கள் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்...!
இனிய பொங்கள் வாழ்த்துக்கள் தோழி :)
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
அன்புடன் அழைக்கிறேன் :
"பாராட்டுங்க! பாராட்டப்படுவீங்க!"
:)
கடைசி புகைப்படம்...
சமயோஜித அறிவுக்கு
சான்று மட்டுமல்ல...
தன்னலம் பேணா
தந்தையின் பாசக்கவிதை..!
பகிர்விற்கு நன்றி சகோ.
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
அருமை
http://rajanscorner.wordpress.com/