மரணவலி தரும் உன் மௌனம்..
என் ஆன்மாவை ஆணிவேரோடு பிடுங்கி அழகு பார்த்திடும் உன் ஆணவத்தில் என் அனைத்து ஆரம்பங்களும் அடங்கித்தான் போயின.. . தனிமையெனும் தீவில் துன்புறுத்தியும் தொல்லைபடுத்தியும் தற்காலிகமான தற்கொலைக்குத் தூண்டும் உன் நினைவுகள்.. . நாட்கள் நிறைந்த நொடிகளும் வருடம் நிறைந்த நிமிடங்களுமாய் நகராது நோகடிக்கிறது நாசூக்காய்.. . உன்னை நினைத்தே நுரைத்துக் கிடக்கிறது என் நுரையீரல்.. . நினைவுகளை தானமாகத் தந்துவிட்டு நிதானமாய்க் கொன்று கொண்டிருக்கிறாய்.. . என் கட்டுக்கடங்காத பிரியங்களைக் கலைத்தும் தொலைத்தும் விளையாடும் உனக்கு கண்கள் மட்டுமா கருணையும் இல்லை. . மண்புழுவாய்த் துடிக்கும் என் மனதினுள் மயானம் அமைத்து மறவாமல் அடிக்கிறாய் உன் மௌனச் சவுக்கால்.. . பட்டும் படாமலுமான உன் பார்வை நகத்தினால் படுகாயப்படுத்துகிறாய் பாழாய்ப்போன என் இதயத்தை. . நிர்வாணமாய்த் திரியும் என் நிம்மதிகளுக்கும் நார் நாராய்க் கிழிந்த என் காதலுக்கும் நீண்ட துணை உன்னாலான என் ரணங்கள் தான். . பத்திரமாய் பத்திரப்படுத்துகிறேன் நீ தந்த வலிகளை. ஆறாத
Comments
அழகு இந்திராஅழகு
இனிய இம்சைகள்
ஸ்வாமி ஸூசாந்தா
உங்களுடைய வார்த்தை தெரிவுகள் அருமை
kavithai..
kavithai...
தலைப்பிற்கேற்ற வரிகள்
tm2
மிகவும் ரசித்தேன்...
வாழ்த்துக்கள்!
பிரக்ஞைகள் இல்லாத பிரியங்களும்
ப்ரம்மாண்டம் நிறைந்த தனிமைகளும்
பழக்கமாய்ப் பக்கம்வர,
வலிக்காதொரு வலி மட்டும்
விலகிநின்று வேடிக்கை காட்டுகிறது!!//
பிரமிப்பூட்டிப்போகும் வரிகள்
ஆயுதங்களுக்கென்று தனியாக வலிமை இல்லை
அதைக் கையாளுபவன் பொறுத்தே அதன் வலிமை
வார்த்தைகளும் அப்படித்தானே என்பதை
சொல்லாமல் சொல்லிப்போகும் கவிதை
மனம் கவர்ந்தது.தொடர வாழ்த்துக்கள்
பிரக்ஞைகள் இல்லாத பிரியங்களும்
ப்ரம்மாண்டம் நிறைந்த தனிமைகளும்
பழக்கமாய்ப் பக்கம்வர,
வலிக்காதொரு வலி மட்டும்
விலகிநின்று வேடிக்கை காட்டுகிறது!!////
எல்லா வரிகளுமே அருமை...
குறிப்பாக..
மேற்குறிப்பிட்ட வரிகள்...
இது
இந்திராவின் வரிகள்...
வாழ்த்துக்கள்...
எனக்கொரு சந்தேகம்...
எனக்கொரு உண்ம தெரிஞ்சாகோணம்...
அது எப்படியிருக்கும்?
”வலிக்காதொரு வலி”....
ரசித்தேன்
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/7.htmll) சென்று பார்க்கவும்...
நன்றி...
Vazthukkal...
saringa...
வலிக்காதொரு வலி.....
andh வலி eppadiyirukkum medam...
Please explain
-சேது
-சேது
-சேது
-சேது
//swami sushantha //
//பால கணேஷ் //
//இராஜராஜேஸ்வரி //
//Rajeswaran Jeyaraman //
//Satish Sangavi//
//ஆர்.வி. ராஜி //
//திண்டுக்கல் தனபாலன் //
//காஞ்சி முரளி //
//sethu ram //
நண்பர்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்..
http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_3.html
உங்களை அங்கு கண்டு மகிழ்ந்து நிறைவாக வாழ்த்து சொல்லி வந்தேன்