Posts

Showing posts from 2011

ஏண்டா இப்படி மானத்தை வாங்குறீங்க??

Image
காலேல அலுவலகத்துல வேலை பார்த்துகிட்டு இருந்தேன். திடீருனு என்னோட சீனியர் ஒருத்தர்,  போன் பேசிகிட்டே என் பக்கத்து நாற்காலில உக்காந்து, நெட்“ல கூகுள் இமேஜஸ் எடுங்கனு சொன்னாரு. நானும் சரினு எடுத்தேன். அதுல “National Flag of India “னு தேட சொன்னாரு. நானும் எதுக்கோ கேக்குறாரு“னு நெனச்சு புகைப்படத்த எடுத்தேன். அவர் அத பாத்துட்டு, போன்ல “சிகப்பு வெள்ளை பச்சை தான்“னு சொன்னாரு. சொல்லிட்டு என்னைப் பார்த்து “தேங்க்ஸ்“னு சொல்லி எழுந்தாரு. நா புரியாம “என்ன விஷயம் சார்“னு கேட்டேன். அவரோட பொண்ணு ஒன்றாம் வகுப்பு படிக்குதாம். அவங்க மிஸ் தேசியகொடி வரைய சொன்னாங்களாம். கொடியோட வண்ணம் என்னானு கேட்டுச்சாம். “மூணு கலர் என்னென்னனு தெரியும்.. ஆனா அதோட வரிசை மறந்துடுச்சு. பச்சை வெள்ளை சிகப்பா?? இல்ல சிகப்பு வெள்ளை பச்சையா“னு குழப்பமாய்டுச்சு. அதான் நெட்ல பாத்து சொன்னேன்“னு சொன்னாரு. என்ன சார், இதையெல்லாம் மறக்கலாமா“னு கேட்டா.. “நல்லா தெரிஞ்ச விஷயமே திடீருனு கேட்கும்போது மறந்துடுது.. என்ன செய்ய“னு கேனத்தனமா ஒரு சமாளிப்பு வேற.. இந்த மாதிரி ஆளுங்கள என்ன சொல்றதுனு தெரியல. கிரிக்கெட

வந்துட்டேன்.. வந்துட்டேன்...

Image
ஒரு வழியா நெட் பிரச்சனை சரியாகி திரும்ப வந்துட்டேன். நானும் எத்தனை தடவை தான் திரும்ப வந்துட்டேன்.. திரும்ப வந்துட்டேன்“னு சொல்றது??? நல்லா பதிவெழுதுறேன்னு திருஷ்டி படுது போல... (அட... காரி துப்புறத நிறுத்துங்க பாஸூ...) முதல்ல என் பழைய ப்ளாக் தொலைஞ்சு போய் புது ப்ளாக் ஆரம்பிச்சப்ப “ நா திரும்ப வந்துட்டேன் “னு சொன்னேன். அப்புறம் கொஞ்சம் உடம்பு சரியில்லாம போய் பதிவெழுதுறதுல இடைவெளி விட்டுட்டேன். அப்ப மறுபடியும் “ திரும்ப வந்துட்டேன்“ னு சொன்னேன். அதுக்கப்புறம் இப்ப இன்னொரு தடவை சொல்லிக்கிறேன்.. (ஆமா.. உனக்கு வேற வேலையில்ல...“னு நீங்க முனங்குறது தெரியுது..) ஒரு பிரபல.. (ஐய்யயோ.... வேணாம் வேணாம்..) நல்ல பதிவர்“னு பேர் எடுக்குறதுக்கு (ம்கும்..) எத்தன சோதனைய கடக்க வேண்டியதாயிருக்கு.. சரி சரி கடுப்பாகாதீங்க.. இதுனால நா சொல்ல வர்றது என்னனா... இனி மொக்கை பதிவுகள் வழக்கம்போல தொடரும்.. நீங்க கதறிக் கதறி அழுதாலும் பதிவுகள படிச்சுட்டு தான் போகணும் சொல்லிட்டேன். இனி வழக்கம்போல தொடரப் போகும் (மொக்கை) பதிவுகள்ல சந்திக்கிறேங்க.. . .

உப்புமா பதிவு.. (13.12.2011)

Image
தினமும் வகை வகையா சமைச்சிட்டு, ஏதாவதொரு நாள் சோம்பேறித்தனமாவோ.. இல்ல நேரமில்லாமலோ இருந்தா, அவசரத்துக்கு உப்புமா செஞ்சு சாப்பிடுவோம். அது மாதிரி பதிவெழுத நேரமில்லாதனால (ம்கும்..) அவசரத்துக்கு ஒரு உப்புமா பதிவு.. *********************** நா அருமையா (!!!) பதிவெழுதுறது எங்க ஆபீஸ்ல யாருக்கோ பிடிக்கல போல.. பத்து நாளா கணிணில கொஞ்சம் இன்டர்நெட் பிரச்சனை.. ப்ளாக்கோ.. ட்விட்டரோ.. அட.. மெயில் கூட பாக்க முடியல.. எல்லாமே போன்ல தான். வர்ற பின்னூட்டங்களுக்கு கூட ரிப்ளை பண்ண முடியல.. மத்த பளாக்குக்கும் கமெண்ட் போட முடியல. கடுப்பு கடுப்பா வருது.. இப்ப கூட திருட்டுத்தனமா வேற ஒருத்தரோட கணிணில தான் இந்தப் பதிவ எழுதுறேன்.. என்ன கொடுமை சார் இது???? ************************ ரெண்டு நாளுக்கு முன்னாடி மீசைக்காரனுக்குப் பிறந்தநாள். போன வருஷம் வாழ்த்து சொல்லிப் பதிவு போட்டேன். ஆனா இந்த வருஷம் முடியல. அதுக்கு ஓவரா சண்டை போட்டா. அப்புறம் வேற வழியில்லாம ஆசிர்வாதம் பண்ணி ஒரு நூறு ரூபாய் குடுத்தேன்.. (கால்ல விழுகுறேன்னு கூட கெஞ்சினா.. நா தான் வேணாம்னு சொல்லிட்டேன்.. ஹிஹிஹி..). முழு பதிவா போட முடியலனாலும் இந்த உப்புமா

மன்னிப்பு – கேட்போம் கொடுப்போம்..

Image
மன்னிப்பு – இந்த வார்த்தை, சொல்வதற்கு வேண்டுமானால் எளிதாக இருக்கலாம். ஆனால் அதைக் கேட்பதும் கொடுப்பதும், அவ்வளவு சுலபமில்லை. பெரிய பெரிய பிரச்சனைகளையும் சச்சரவுகளையும் கூட ஒரே நொடியில் முடிவுக்குக் கொண்டுவரும் திறமை இந்த வார்த்தைக்கு உண்டு. ஒருவர் இன்னொருவரை பாதிக்கின்ற விதத்தில் ஏதாவது தவறு செய்துவிட்டால், அத்தவறை உணர்ந்து, மனதார மன்னிப்புக் கேட்கும் செயல் உண்மையிலேயே பாராட்டத்தக்க ஒன்று. அதற்கும் அப்பாற்பட்டது, கேட்கப்படும் மன்னிப்பை ஏற்றுக்கொண்டு சகஜ நிலைக்குத் திரும்புவது. “மன்னிப்பு கேட்பவன் மனுஷன், மன்னிக்கத் தெரிந்தவன் பெரிய மனுஷன்“ என்று ஒரு வசனம் உண்டு. இன்றைய சூழலில் அப்படிப்பட்ட மனிதர்களோ பெரிய மனிதர்களோ காணக்கிடைப்பது அரிது. ஈகோ, பிடிவாதம், வாக்குவாதம், புரிதலின்மை போன்ற பல விஷயங்களால் மன்னிப்பு என்பதே மறைந்து வருகிறது. பலருக்கு, தான் செய்தது தவறென்று தெரிந்தும், அதை ஒப்புக்கொள்வதற்கு தன்மானம் இடம்பொடுப்பதில்லை. என்னதான் உயிர் நண்பனாக, உறவினராக, காதலன் / காதலியாக, கணவன் / மனைவியாக இருந்தாலும், வாக்குவாதங்களில் இருக்கும் ஆர்வம், தவறுகளை ஒத்துக்கொள்வதிலோ, ஏற்றுக்கொள்வதிலோ இர

செல்போன் பேச நடுரோடு சிறந்த இடமோ??? உதாரணப் புகைப்படம் இதோ..

Image
காலேல Staff Busக்கு வெய்ட் பண்ணிகிட்டு இருந்தேன். அப்ப, நடு ரோட்ல ஒருத்தர் வண்டில போய்கிட்டு இருந்தார்.. திடீருனு போன் வந்துச்சு போல.. அப்படியே வண்டிய நிறுத்திட்டு போன் பேசினார்.. பின்  எந்த ரியாக்சனும் இல்லாம கிளம்பிட்டாரு. (இடம்: மதுரை டிஸ்ட்ரிக்ட் கோர்ட் எதிரில், ட்ராபிக் போலீஸ் கண்முன் தான்) இவரோட கடமை உணர்ச்சிய எப்படி பாராட்றதுனே தெரிலங்க.. . (குறிப்பு : ரெண்டு பக்கமும் வாகனங்கள் போய்கிட்டும் வந்துகிட்டும் இருக்கு.. அந்த கேஸ் வண்டி அவரை கடக்கும்போது எடுத்த புகைப்படம்.. அதுனால வண்டி நிக்குற மாதிரி தெரியும். படத்துல, அவரை தவிர எல்லா வாகனங்களுமே ஓடிகிட்டு இருக்கு) . .

சில கறுப்பு வெள்ளை புகைப்படங்கள்..

Image
 

ச்சாட்டிங்கில் வலைவிரிக்கும் ஆண்களின் டெக்னிக்குகள் - ஒரு அலசல்..

Image
இன்னைக்கு இணைய நட்புங்குற விஷயம் நடைமுறைல சகஜமாய்டுச்சு. ஆண் பெண் பேதமில்லாம, இணையம் மூலமாவே, (முகம் பார்க்காம கூட) மாசக் கணக்கா பேசி ஒருத்தருக்கொருத்தர் நட்ப வளத்துகிட்டு வறாங்க. இதுல நல்ல விஷயங்கள விட, எதிர்மறையான விஷயங்கள் நிறையவே இருக்குனு சொல்லலாம். இன்னைக்கு சூழ்நிலைல, இணைய நட்புங்குறத தாண்டி, காதல், காமம்னு அடுத்தடுத்த பரிணாமத்துக்கு கொண்டுவந்துடுச்சு. இதுல பகுத்தறிவோட, பிரிச்சுப்பாக்குற பக்குவம் இருக்குறவங்க தப்பிச்சுக்குறாங்க. பல ஆர்வக்கோளாறுகள் இதுலயே மூழ்கி வாழ்க்கைய கெடுத்துக்குறாங்க. பேஸ்புக், ஆர்குட், ட்விட்டர்னு நெறைய நெறைய இணையதளங்கள் மூலமா நமக்குப் புதுப் புது நட்புகள் கிடைக்குது. தற்செயலா, எந்த உள்நோக்கமும் இல்லாம, நட்பின் அடிப்படைல மட்டும் பழகுறவங்க சிலர் இருந்தாலும், தங்களுடைய வக்கிர புத்திக்காக, ஆண்கள் / பெண்கள் யாராவது சிக்க மாட்டாங்களானு வலை விரிக்கிறவங்களும் இருக்காங்க. அப்படி புதுசா அறிமுகமாகுற ஆண் பெண் மத்தியில நடக்குற ச்சாட்டிங்குல, சம்மந்தப்பட்ட ஆண் எப்படியெல்லாம் சாமர்த்தியமா பேச

150 மொக்கை போட்டாச்சு… (ஏதோ என்னால முடிஞ்ச இம்சை..)

Image
இது என்னோட 151வது பதிவு.. இதுவரைக்கும் எழுதுன 150 மொக்கை பதிவுகளையும் பொறுமையா படிச்சுகிட்டு (!!!!) வந்த நண்பர்களுக்கும் தோழிகளுக்கும் என் நன்றி... நன்றி.. நன்றி.. இனி வருங்காலத்தில் எழுதப்போற கடஞ்செடுத்த பல மொக்கைகளையும் (ஏதோ என்னால முடிஞ்ச இம்சைய குடுக்கணும்ல..) தைரியமாப் படிக்கப் போகிறவர்களுக்கு என் அனுதாபம் கலந்த நன்றிகள்.. ம்ம்ம்ம்ம்... ஸ்டார்ட் மியூசிக்.. . .