Posts

Showing posts from February, 2010

படித்ததில் ரசித்தது

Image
எனக்கு தெரியும் நீ விரும்புவது என்னை அல்ல என் கவிதைகளை என்று. ஆனால் உனக்குத் தெரியுமா? உன்னை விரும்புவது என் கவிதைகள் அல்ல நான் தான் என்று.. தபால்காரனுக்குக் கூட என் மீது இறக்கம் இருக்கிறது. எவர் வீட்டுக் கடிதத்தையாவது என் வீட்டில் போட்டு தற்காலிக மகிழ்ச்சியாவது தருகிறான். நீ தான் இரக்கமில்லாமலே இருக்கிறாய். எனக்கு வரவேண்டிய கடிதத்தை இன்னும் எழுதத் தொடங்காமல். எழுது எழுது.. எனக்கொரு கடிதம் எழுது.. என்னை நேசிக்கிறாய் என்றல்ல. நீ வேறு எவரையும் நேசிக்கவில்லை என்று. ---- வைரமுத்து

உருகுகிறேன்

Image
உன் பார்வை மின்சாரத்தால் என் பனித்துளி இதயம் உருகுகிறது.. உடைந்தொடும் துளிகளில் கூட புரியவில்லையா.. என் காதல் உனக்கு?

உன் காதல்

Image
எனக்கான உன் ஒற்றைத் துளி நீர் உன்னையும் அறியாமல் உணர்த்தி விட்டுப் போனது என் மீதான உன் காதலை..

ஏன் தெரிவதில்லை?

Image
"அப்படியா?" என்ற உன் ஒற்றை வார்த்தை நீட்டுகின்றன என் பேச்சுக்களின் அளவை.. சிறுபிள்ளையாய் நான் விவரிப்பதை சொல்லாமல் ரசிக்கும் தருணங்களில் எனக்கேன் தெரிவதில்லை?? ஏற்கனவே நீ அறிந்தவை தான் என்று..

உனது கோபங்கள்

Image
உன் கோபத்தின் மௌனங்களும் என் செல்லமான சமாதானங்களும் அவ்வப்போது உறுதி செய்கின்றன நம் காதலின் வலுவை..

சுவாசம்

Image
உயிர் வாழ சுவாசம் அவசியமாம்.. எங்கேயிருந்தாலும் உடனே வா. நான் சுவாசிக்க வேண்டும்.

உனது பிரிவு

Image
உன் நினைவுகளின் பாரம் தாளாமல் புதைந்து போகிறேன். மண்ணுக்குள் அல்ல என் மனதுக்குள். எல்லோருக்கும் இதயம் துடிக்கிறது.. எனக்கோ துடியாய்த் துடிக்கிறது உன் பிரிவால். நீ இறந்து விட்டாயாம்.. சொல்கிறார்கள். பாவம் அவர்களுக்கு என்ன தெரியும்? முன்கூட்டியே எழுந்து என்னை எழுப்புபவள் நீ முன்கூட்டியே ஞாபகம் வைத்து என்னை வாழ்த்துபவள் நீ முன்கூட்டியே நேரத்திற்கு வந்து என்னைத் திட்டுபவள் நீ முன்கூட்டியே வேலைகளை முடித்து எனக்கு உதவுபவள் நீ இப்போது முன்கூட்டியே மண்சாய்ந்து எனக்கு வழிகாட்டுபவள் நீ. நடந்து சென்ற பாதைகளையும் பேசிச்சென்ற வார்த்தைகளையும் கொடுத்துப் போன நினைவுச் சின்னங்களையும் பார்த்துக் கடந்த கடைசி பார்வைகளையும் வைத்துக் கொண்டு எத்தனை நிமிடங்கள் தான் என்னால் வாழ முடியும்? ஜனனம் உனக்கானதா தெரியவில்லை இதோ என் மரணம்.. உனக்காக. ஏமாற்றாமல் ஏற்றுக்கொள்.

வலி

Image
மௌனமாய்ப் பார்க்கிறேன்.. உடைந்த உள்ளத்துடன். என்னவள் என்னெதிரில் அழுகிறாள்.. தன் அவனை நினைத்து.

உணர்ந்துகொண்டேன்

Image
கலைந்துவிட்ட கனவுகளிலும் கலைந்திடாத கற்பனைகளோடு.. விடிந்துவிட்ட இரவுகளிலும் விழித்திடாத இருட்டுக்களோடு.. உனக்காகக் காத்திருந்த போது தான் உணர்ந்து கொண்டேன்.. தென்றலும் சுடும் என்ற உண்மையை..

ஆரம்பம்

Image
பதிவுலகில் காலடி எடுத்து வைக்கிறேன்.. சக பதிவாளர்கள் ஆலோசனைகளையும் ஆதரவுகளையும் கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையில்.. . . .