ஒரு பயணம்.. ஒவ்வொரு அனுபவம்..
வெகு நேரக் காத்திருத்தலுக்குப் பின் ஒரு வழியாகப் பேருந்து வந்தது. தோளில் மாட்டியிருந்த பை, பழங்கள் வாங்கி அடைத்திருந்ததால் சற்று கனக்கவே, ஒரு கையால் வாகாகத் தாங்கிப் பிடித்துக்கொண்டு பேருந்தில் ஏற எட்டு வைத்தேன். என்னைப் போலவே கால்கடுக்கக் காத்திருந்தவர்களின் எண்ணிக்கையை அப்போதுதான் பார்க்க முடிந்தது. படியை நோக்கி சர சரவெனக் கூட்டம் மொய்க்க, ஒருவாராக உள்சென்றுவிட்டேன். அந்தக் கூட்டத்தில் உட்கார இடம் தேடுவது மடத்தனமெனத் தோன்றவே, நிற்பதற்கு ஏதுவான இடம் தேடி, நகர்ந்து நகர்ந்து, பிடித்து நிற்க வசதியான இடத்தில் கால்களை ஊன்றி நின்றுகொண்டதும் பெருமூச்சொன்று வந்துபோனது. இரண்டு நிறுத்தங்கள் தாண்டி எனக்கருகே அமர்ந்திருந்த ஒரு பெண்மணி, இறங்க வேண்டி எழுந்திரிக்க, “அப்பாடா“ என்ற நிம்மதி என் முகத்தில்.. காலியான இருக்கையில் அமர போட்டி போட்டவர்கள் மத்தியில், இருக்கைக்கு வெகு அருகே நின்றிருந்த நான் வெற்றி பெற்றேன். வெகுநேரம் பேருந்துக்கு காத்திருந்த சலிப்பும் தோள்பையின் கணமும் கொஞ்சம் குறையத்தொடங்கிய நேரம், என்னருகே ஒரு பெண்மணி நின்றிருந்தாள். நான் நின்ற அதே இடத்தில் ஒரு குழந்தையை கையில் வைத்...