Posts

Showing posts with the label புலம்பல்

பண்டிகை நாட்களில் பட்டிமன்ற நிகழ்ச்சிகள் தேவையா..??

Image
இந்த தலைப்புல தான் இன்னும் டிவில பட்டிமன்றம் வரலைனு நெனைக்கிறேன். அதை தவிர மற்ற எல்லா தலைப்புலயும் ஒரு பட்டிமன்றம் வச்சிட்றாங்க. “நடுவர் அவர்களே“.....னு ஆரம்பிச்சு ஒரு மணிநேரம் மாறி மாறிப் பேசுவாங்க.. ஆனா என்ன பேசுறாங்க? எதுக்கு பேசுறாங்கனு தான் தெரில. சன் டிவி“னா சாலமன் பாப்பையா டீம், கலைஞர் டிவினா (இப்ப) லியோனி டீம், ஜெயா டிவினா திருஞானசம்பந்தம் அப்புறம் சுகிசிவம்.. இப்டி கான்ட்ராக்ட் போட்டு நிகழ்ச்சி நடத்துறாங்க.. இதுல என்ன வேடிக்கைனா, பட்டிமன்றங்களோ விவாதங்களோ காரசாரமான வாக்குவாதங்கள் நடக்குறதே இல்ல. நகைச்சுவைங்குற பேர்ல ஏதேதோ மொக்கை போட்றது ஃபேஷனாப் போய்டுச்சு. விஜய் டிவி“ல கொஞ்ச நாள் “நீயா நானா“ நல்லா போய்கிட்டு இருந்துச்சு. இப்ப அதுலயும் மொக்கை டாபிக் பேச ஆரம்பிச்சுட்டாங்க. (ஒரு தடவை கல்யாண மாலை நிகழ்ச்சில கவனிச்சேன்.. நடிகர் பாண்டியராஜன் நடுவரா வந்து பட்டிமன்றம் நடத்தினார்.... கொடுமைடா..) எங்க வீட்ல சாலமன் பாப்பையா பட்டிமன்றம்னா மிஸ் பண்ணாம பாப்பாங்க. (அவரு ஏய்.. ஏய்“னு மாடு விரட்டுற ஸ்டைலே தனி தான்..). அதுலயும் ராஜாவோட பேச்சு டாப்“புனு ...

உயரதிகாரிகிட்ட “டீ“ போட சொன்னது தப்பா??? அவ்வ்வ்வ்வ்...

Image
பொதுவா எல்லா ஆபீஸ்லயும் வருகை பதிவேடு ( Attendance Register) இருக்கும். காலேல வந்ததும் எல்லாரும் அதுல கையெழுத்து போட்றது வழக்கமா நடக்கும்.. தனியார் அலுவலகத்துல எப்படியோ தெரியாது. ஆனா இந்த அரசாங்க அலுவலகத்துல, சில அப்பாடக்கர்கள் பண்ற அழும்பு இருக்கே.. தாங்க முடியாது. என்னோட அலுவலகத்துல அந்த பதிவேடு, அலுவலக உதவியாளர் பொறுப்புல இருக்கும். தினமும் எல்லாரும் கையெழுத்து போட்டு முடிச்சதும் தலைமைப் பொறுப்புல இருக்குற அதிகாரி கிட்ட ஒப்படைக்கணும். அப்புறம் அவர் செக் பண்ணிட்டு இறுதிக் கையெழுத்து போடணும். இதுல பர்மிஷன் போட்றவங்க, அரை நாள் அல்லது முழு நாள் லீவ் போட்றவங்கனு தனிப் பட்டியலும் சேர்ந்து போகும். இதுல என்ன விஷயம்னா.. வாசலுக்குப் பக்கத்துலயே ஒரு டேபிள்ல அந்த ரெஜிஸ்டர் வச்சிருப்போம். அத தாண்டி தான் எல்லாரும் உள்ள போகணும். ஆனாலும் சில அப்பாடக்கர்ஸ் அதுல கையெழுத்து போடாம போய் சீட்ல உக்காந்துடுவாங்க. அவங்கள தேடிப் போய் அந்த உதவியாளர் கையெழுத்து வாங்கணும். அதுலயும் யாருக்காகவோ வேலை செய்யிற மாதிரி ரொம்ம்ம்ப சலிச்சுக்குட்டு கையெழுத்துப் போடுவாங்க. ( இத நோட் பண்...

கடுப்பேத்துறதுக்குனே கல்யாணம் பண்ணிக்கிறாய்ங்க...

Image
போன வாரம், ராசிப்பொண்ணு க்கு விருந்து குடுத்தோம். மீசைக்காரனு ம் நானும் தான் சமையல். மட்டன், சிக்கன், மீன்“னு எல்லாமே சமைச்சிருந்தோம். (நம்புங்க.. நா நல்லா சமைப்பேன்..). அரட்டை அடிச்சுகிட்டே சமைச்சதுனால, சமையல் முடிய மதியம் 3.30 ஆய்டுச்சு. எல்லாருக்கும் நல்ல பசி. ஒரு வழியா சாப்பிட உக்காந்தாங்க. சமைச்சதை எல்லாம் டைனிங் டேபிள்ல எடுத்துவச்சுகிட்டு இருந்தோம். கடைசியா மீன் குழம்ப வேற பாத்திரத்துல மாத்திகட்டு இருந்தேன். பாத்திரம் வெயிட்டா இருந்ததால, குழம்புல இருந்த மீனை எல்லாம் முதல்ல கரண்டில எடுத்து மாத்திட்டு, அப்புறம் குழம்ப அதுல ஊத்திகிட்டு இருந்தேன். பசி தாங்க முடியாம உள்ள வந்த ராசிப்பொண்ணு அத பாத்துட்டு “என்னடி பண்ற?“னு கேட்டா. உடனே நா ரெண்டு பாத்திரங்களையும் காட்டி “இது மீனு, இது புளி குழம்பு, ரெண்டையும் ஒண்ணா ஊத்துனா மீன் குழம்பாயிடும்“னு சொன்னேன். “ஓ அப்படியா? சரி சீக்கிரம் கொண்டு வா, எனக்குப் பசிக்குது“னு சொல்லிட்டு எந்த ரியாக்சனும் குடுக்காம போயிட்டா. (உருப்ட்ட மாதிரி தான்..) ******************************************* என் மொபைல்ல சார்ஜ் சுத்தமா...

அரிதாரக் கடவுள்கள்..

Image
நேத்து கே.டிவில ஏதோ ஒரு சாமி படம் போட்டான். ரோஜா அதுல கடவுளாவும் பக்தையாவும் நடிச்சிருந்தாங்க. அதென்னவோ தெரியல.. சினிமாவுல வர்ற கடவுள் மட்டும் ஏன் தான் இப்படி மொக்கையா வருதுகளோ தெரியல. அதாவது நா ரோஜாவ சொல்லல.. அவங்க போட்ருந்த வேஷத்த சொல்றேன். மத்த மொழிகள்ல எப்டியோ.. இந்தத் தமிழ் சினிமாவுல வர்ற கடவுள்கள் எல்லாம் பயங்கர காமெடியா இருக்குதுங்க. தலைல பெரிய்ய்ய்ய கிரீடம், கலர் கலரா முகத்துல பெயிண்ட் அடிச்சிருப்பாங்க. (அழகா இருக்குற மூஞ்சியையும் அசிங்கப்படுத்திக்கிறது), கழுத்துல எழுமிச்சம்பழ மாலை.. கையில சூலம், அயர்ன் பண்ணின பட்டுப் புடவை.. கண்ண அடிக்கடி உருட்டி உருட்டி பாத்துகிட்டு.. முக்கியமா ராமநாரயணன் படம்னா சொல்லவே வேணாம். அந்த வேஷம் போட்டவங்க ஆட்றது மட்டுமில்லாம அவங்களோட சூலம், வேப்ப மரம்னு எல்லாமே டான்ஸ் ஆடும். கொடுமைடா சாமி. அப்புறம் இந்த மாதிரி படங்கள்ல கண்டிப்பா ஒரு அப்பாவி பொண்ணு ஹீரோயினா இருக்கும். ஏதாவதொரு டம்மி பீசு ஹீரோவா இருப்பான். அந்தப் பொண்ண தவிர மத்த எல்ல்ல்ல்லாருமே கெட்டவங்களா இருப்பாங்க. ஒரு மந்திரவாதி வில்லனா இருப்பான். அவனோட கெட்அப் பத்தி சொல்லவே வேணாம். கழுத்துல...

இன்னைக்கு யார் மூஞ்சில முழிச்சேனோ..

Image
எப்பவும் பஸ்க்கு கரெக்ட்டா அஞ்சு ரூபாய் சில்லரை எடுத்து வச்சுக்குவேன். (கண்டக்டர் கிட்ட திட்டு வாங்க முடிலப்பா..). இன்னைக்குனு பாத்து சில்லரை இல்லாம ஒரு இருபது ரூபாயும் ஒரு நூறு ரூபாயும் பர்ஸ்ல இருந்துச்சு. சரினு இருபது ரூபாய கைல எடுத்துகிட்டு நூறு ரூபாய பர்ஸ்ல வச்சு ஹேண்ட் பேக்ல போட்டுகிட்டேன். ஸ்டாப்புக்கு வந்து பக்கத்துல இருக்குற கடைல சில்லரை கேட்டேன். (காலங்காத்தால வந்து சில்லரை கேட்டா எதுக்கு தான் இப்டி முறைக்கிறாய்ங்களோ தெரில..) இல்லைனு சொல்லிட்டான். வேற வழியில்லாம பத்து ரூபாய்க்கு டாப்-அப் கார்ட் வாங்கினேன். (மிஸ்டு கால் குடுக்குறதுக்கு எதுக்கு டாப்-அப் பண்ணனும்னு கேக்காதீங்க.). மீதி ரெண்டு அஞ்சு ரூபாய் குடுத்தான். வாங்கிட்டு பஸ் ஏறினேன். என் நேரங்காலம், கொஞ்சம் லேட்டாய்டுச்சு.. ஆபீஸ் பஸ்ஸ விட்டுட்டேன். (அந்த டிரைவர் வாட்ச் நாசமாப்போக..) ஸ்டாஃப் பஸ் போய்டுச்சுனா, டவுன் பஸ்ல போய் ஆபீஸ் கேம்ப்பஸ்ல 20 நிமிசம் நடக்கணும். டவுன் பஸ்க்கு டிக்கெட் 4.50, அதுனால பேக்ல இருக்குற நூறு ரூபாய மாத்த தேவையில்ல, கைல தான் அஞ்சு ரூபாய் இருக்குதேனு நெனச்சு நம்ம்ம்ம்பி ஏறினேன். டிக்கெட் எடுத்தத...