Posts

Showing posts from June, 2012

அபிப்ராயங்கள் ≠ அனுபவங்கள்..

Image
நம்ம ஊர்ல ஒரு கெட்ட பழக்கம் உண்டு. ஏதாவது அறிவுரையோ அபிப்ராயத்தையோ சொல்ல ஆரம்பிச்சவுடனே, “உனக்கு இதப் பத்தி என்ன தெரியும்? அனுபவமில்லாம பேசாத“னு சொல்லி வாய அடச்சிடுவாங்க.   வாஸ்தவம் தான்.. ஆனா இது எல்லா விஷயத்துக்கும் பொருந்தாது. உதாரணத்துக்கு, பத்தாவது மாடிலருந்து கீழ குதிச்சா என்ன ஆகும்னு சொல்றதுக்கு, அப்படி குதிச்சுப் பார்த்த அனுபவம் இருக்கணும்னு அவசியம் இல்லையே.. சரி தானே? நா எழுதுன “ சந்தோசமா சரக்கடிங்க “ பதிவுலயும் இந்தக் கேள்வி வந்துச்சு.. குடிப்பழக்கத்துல இருக்குற கெடுதல்கள்பத்தி சொல்றதுக்கு குடிச்சுப் பார்த்திருக்கணும்னும், குடும்பக் கட்டுப்பாட்டு அலுவலகத்துல வேலை பார்க்குறதுக்கு குழந்தை பெத்திருக்கணும்னும் அவசியம் இல்லையே.. அனுபவப்பூர்வமா அறிவுரை சொல்றதுல நிறைய உபயோகம் இருக்கலாம். அதே மாதிரி ஒட்டுமொத்தமா அனுபவம் இருந்தா மட்டும்தான் ஒரு விஷயம் பற்றி பேசணும்னும் சொல்லிட முடியாது. கேள்வி ஞானம் மட்டுமே வச்சு சொல்லப்படுற அபிப்ராயங்களுக்கும் மதிப்பு இருக்கத்தான் செய்யும். “நானும் ரவுடிதான்.. நானும் ரவுடிதான்“னு விளம்பரம் பண்ற மாதிரி ஒருசிலர் வெட்டியா, கடனேனு கருத்து சொல்வாங்க

மனதிற்கும் உண்டோ ஓர் அரிதாரம்??

Image
வெறுப்பின் உச்சகட்டம் நம் பிரிவு.. பார்க்க மாட்டேன் என நானும் நினைக்கக்கூட மாட்டேன் என நீயும்..!! . அடக்கிவைத்த அத்தனை கோபங்களையும் கொட்டித் தீர்த்துவிட்டுக் கிளம்ப, அந்நொடிமுதல் ஆரம்பித்தது நாமில்லா நமது வாழ்க்கை. . சுதந்திரம் கிடைத்ததென.. கட்டுப்பாடுகள் இல்லையென.. கடிவாளங்கள் அறுந்ததென.. அடிமைத்தனம் முடிந்ததென.. போலியான சமாதானங்கள் நமக்குள்ளே!! . நிம்மதியாய் இருக்கிறோமென நமக்கு நாமே சொல்லிப் பழக்கினோம்.. மாற்றங்கள் நம் அலைபேசி எண்களிலும் மின்னஞ்சல் கடவுச்சொல்லிலும் புகுத்தினோம், அதுவே மனதிற்கும் என்ற நாடகமாய்..!! . வந்துபோகும் நினைவுகளையும் வலுக்கட்டாயமாய் தள்ளிவிட்டு கெட்ட கனவுகள் என்றும் கறுப்பு அத்தியாயம் என்றும் பொய்யாகப் பொய்யுரைத்தோம். . எல்லாம் சரிதான்.. ஆனாலும்.. நாம் பேசியமர்ந்த இடத்தைக் கடக்கும்போதும் உனக்குப் பிடித்த பாடல் காதில் விழும்போதும் உன் விருப்ப நாயகனைத் திரையில் பார்க்கும்போதும் உனக்குப் பிடித்த உணவை உண்ணும்போதும் ஏன்.... இந்த வரிகளை எழுதும்போதும் கூட.. சட்டென ஸ்தம்பித்து உண்டாகும் ஏனோ ஆழ்மனதில் ஒருவித வலி!! . இது தான்.. இப்படித் தான் என்று தேற்றிக்கொண்டு சக

ம(னி)தம்??!!

Image
நண்பர் ஒருவரின் வலைப்பூவில் சமூக அக்கறையுள்ள பதிவொன்றை எழுதியிருந்தார் (அப்படித்தான் நினைத்தேன்). ஸ்வாரஸ்யமாகவும் விழிப்புணர்வுத் தகவலாகவும் இருந்ததால் படிக்க ஆரம்பித்தேன். எல்லாமே நன்றாகத் தான் இருந்தது. ஆனால் கடைசியில் அவர் சொன்ன தகவல்.. மொத்தப் பதிவின் யதார்த்தத்தையும் கெடுத்துவிட்டது. அவர் தன்னுடைய மதம் பற்றிய பெருமையுடன் பதிவை முடித்திருந்தார். பதிவில் குறிப்பிட்டிருந்த தகவல்களுக்கும் அவருடைய முடிவுரைக்கும் யாதொரு தொடர்பும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அப்பதிவை படித்த போது நான் கொண்டிருந்த ஆர்வம், அதை படித்து முடித்தபின் அதிருப்தியையே கொண்டுவந்தது. அவருடைய பதிவில் “சத்யமேவ ஜெயதே“ நிகழ்ச்சி பற்றி கூறியிருந்தார். அமீர்கான் பற்றி விமர்சனம் செய்திருந்தார். மருத்துவத் துறை மற்றும் பிற துறைகளை முன்வைத்து அலசும் அமீர், அந்நிகழ்ச்சியில் திரைப்படத் துறையைப் பற்றியும் விமர்சிக்கலாமே என்ற கேள்வியை முன்வைத்தார். தன்னுடைய துறை சார்ந்த அவலங்களையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்து, அதிலுள்ள களைகளை அகற்ற முனையலாமே என்றும் எழுதியிருந்தார். மேலும் தவறுகளை சுட்டிக்காட்டும் நிகழ்ச்சிக்குழுவினர்,

ஆதிக்க மனப்பான்மை (Superiority Complex)..

Image
(கழுகு வலைதளத்தில் வெளியான என்னுடைய பதிவு..) நான் செய்வது தான் சரி, என்னுடைய வார்த்தை தான் கடைநிலையாக இருக்க வேண்டும், மற்றவர்கள் எனக்கு அடங்கித் தான் போக வேண்டும், என்னை யாரும் குற்றம் சொல்வது எனக்குப் பிடிக்காது, நான் எப்போதும் அடுத்தவரை குறை சொல்லிக்கொண்டே குற்றம் சுமத்திக்கொண்டே இருப்பேன் என்ற மனோநிலை உங்களுக்குள் இருக்கிறதா? ஒருமுறைக்கு பலமுறை இது சரியா என உள்மனதைக் கேளுங்கள். உங்கள் திறமையின் அடிப்படையில் செயல்களின் அடிப்படையில், அதன் விளைவுகளின் அடிப்படையில் அனைத்தும் சரியாகவே இருந்தால் நீங்கள் பாராட்டத்தக்கவர்.  ஆனால் துரதிருஷ்டவசமாக பெரும்பாலோனோர் அப்படி இருப்பதில்லை. இப்படித்தான் எனில் நீங்கள் மற்றவரை ஆதிக்கம் செலுத்தியே காலத்தைக் கழிப்பவர், மற்றவரை மதிக்கத் தெரியாதவர்.. இன்னும் சொல்லப்போனால் பெரும்பாலானவர்களால் வெறுக்கப்படுபவர் நீங்கள். சுப்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ் என்னும் தன்னை பற்றிய இயல்புக்கு மீறிய கூடுதல் மதிப்பீடு - ஆண் பெண் என்ற பாகுபாடில்லாமல் இருதரப்பினருக்கும் இந்தக் குணம் இருக்க வாய்ப்புண்டு. ஊடுருவிப் பார்க்கும்போது இது தாழ்வு மனப்பான்மையின்