மனிதன் எனும் மிருகம்
சில சமயங்களில் வார்த்தைகளை விட மௌனத்திற்கு அதிக வலிமை உண்டு. அதுபோல சில நேரங்களில் எழுத்துக்களை விட புகைப்படங்கள் நம்மை அதிகமாக பாதிக்கின்றன. இந்தப் பதிவில் உள்ள புகைப்படங்களும் அந்த வகையை சேர்ந்தவை தான். எட்டு வயது சிறுவன், சந்தையில் ஒரு ரொட்டித்துண்டை திருடிவிட்டான் என்பதற்காக அவனுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை இது. மனிதத்தன்மைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட ஒரு சம்பவம் இது. ஒரே ஆறுதல்… நம் நாட்டில் அல்ல, இது ஈரான் நாட்டில் நடந்த அரக்கத்தனம். மிருகங்கள் கூட நேசிக்கும் தன்மை கொண்டவை. மனிதன் எனும் மிருகம் எப்போது இதை கற்றுக்கொள்ளப் போகிறான்? இந்த புகைப்படங்கள் பாதிக்காத மனிதன் இருக்க முடியாது. உங்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டது தானே?