எங்க புத்திசாலித்தனத்த பார்த்து கண்ணு வைக்காதீங்க..
வர வர இந்த செல்போன் தொல்லை தாங்க முடியிறதில்ல. ஏதாவது முக்கியமான வேலை பார்த்துகிட்டிருக்கும் போதோ, இல்ல நல்லா கண் அசந்து தூங்கிகிட்டிருக்கும்போதோ தான் எவனாவது போன் செஞ்சு கழுத்தறுப்பான். அட்டெண்ட் பண்ணாம இருக்கவும் முடியாது, வேலையிருக்கு அப்புறம் பண்ணுங்கனு சொல்லவும் முடியாது. அப்படி சொன்னா உடனே அவங்களுக்கு முனைப்பு வந்திடும்ல. நேத்து கடைத்தெருவுக்கு டூவீலர்ல, மீசைக்காரனோட போய்கிட்டிருக்கும்போது என் சொந்தக்காரர் கிட்டயிருந்து தொலைபேசி அழைப்பு வந்துச்சு. திரும்ப திரும்ப கால் பண்ணினதால ஏதோ அவசரம் போலனு, வேற வழியில்லாம ஓரமா வண்டிய நிறுத்தி அட்டெண்ட் பண்ணேன். மனுஷன் அப்ப தான...