பதிவர் சந்திப்பும் களைகட்டிய பதிவுலகமும்..
(சந்திப்புல கலந்துகிட்டவங்க தான் அதுபற்றிய பதிவு போடணுமா என்ன? கலந்துக்கலைனாலும் நாங்களும் எழுதுவோம்ல..) ரொம்ப நாளைக்குப் பின் சமீபத்தில் பதிவுலகம் களைகட்டியது. இதற்கு முக்கிய காரணமாய் அமைந்தது சென்னை பதிவர் சந்திப்பு என்பதை யாராலும் மறுக்க முடியாது. போன வாரம் முழுக்க பதிவர்களுக்கிடையே இதுபற்றி எழுந்த சர்ச்சைகளும் சண்டைகளும் அனைவரும் அறிந்ததே.. இந்த வாக்குவாதங்கள்கூட, பதிவர் சந்திப்பு பற்றிய ஒரு வித எதிர்பார்ப்பைத் தூண்டிவிட்டது என்றே சொல்லலாம். என்னால் சென்னைப் பதிவர் சந்திப்பில் கலந்துகொள்ள முடியல. ஆனாலும் அதில் கலந்துகொண்டவர்கள் பகிர்ந்த பதிவுகளும் புகைப்படங்களும் சந்திப்பில் கலந்துகொள்ளாத குறையை நீக்கி நிறைவைத் தந்தது. முகம் தெரியாத, பதிவுகள் மூலமே பழகிய பல நண்பர்கள் ஒன்றாய் இணைவதற்கு இதுமாதிரியான சந்திப்புகள் பெரிதும் உதவுகிறது. விழா பற்றிய நிறை குறை விமர்சனங்கள் வரலாம்.. வராமலும் போகலாம். ஆனாலும் விழா சிறப்பாய் அமைய பாடுபட்டவர்களுக்கு முதலில் எனது பாராட்டுக்கள். சரி விஷயத்துக்கு வருவோம்.. கொஞ்ச நாளாவே பல பதிவர்கள் பதிவெழுதுறத குறைச்சிட்டாங்க.. நிறுத்திட்டாங்கனு கூட சொல்லலாம்....