Posts

Showing posts with the label கண்ணோட்டம்

தூக்கம் – ஒரு பார்வை

Image
இப்போதைக்கு இருக்கும் சூழலைப் பார்த்தால், இருபத்திநான்குமணிநேர மின்வெட்டை அமுல்படுத்தினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. இந்த இம்சைக்கு நடுவே தூக்கம் என்பதே கஷ்டமான விஷயமாய்டுச்சு. நம்மகிட்ட யாராவது வந்து, “நல்லாத் தூங்கினேன்“னு சொன்னா, நாம சொன்னவனை பொறாமையாகப் பார்க்கிறோம். அந்த தூக்கத்தைப் பற்றி, நான் படித்த ஒரு சில தகவல்களை இங்கே பகிர்ந்துக்குறேன். சாதாரணமாய் தூக்கம் இரண்டு வகைப்படும். ஒன்று டீப் ஸ்லீப் ( Deep Sleep)   எனப்படும் Orthodox Sleep.   மற்றொன்று ( Dreaming Sleep ) ட்ரீமிங் ஸ்லீப் எனப்படும் பாரடாக்ஸியல் ஸ்லீப் ( Paradoxial Sleep) . இந்த பாரடாக்ஸ் எனப்படும் நிலையில், உள்மனம் அரைகுறை விழிப்பு நிலையில் இருக்கும். கண் மூடி இருந்தாலும், உள்ளுக்குள் அங்கும் இங்கும் நகர்ந்து கொண்டேயிருக்கும். இதைத்தான் REP (Rapid eye movement)   என்பார்கள். ஆர்தடாக்ஸ் தூக்கம் NREP (Non rapid eye movement) எனப்படும் . நமது மொத்த தூக்கத்தில் 20 சதவிகித்த்தை பாரடாக்ஸ் ஸ்லீப்பும் 80 சதவிகித தூக்கத்தை ஆர்தடாக்ஸும் பங்கு போட்டுக் கொள்கின்றன. தூக்க நிலையில் இரண்டும் மாறி மாற...

பெண்ணுரிமை வாழ்க..! ஆண்கள் ஒழிக..!!

Image
பெண்ணுரிமையைப் பாதுகாப்போம். பெண்களுக்கு உரிமை கிடைக்கப் போராடுவோம். வாருங்கள் பெண்களே.. நமக்கு முதல் எதிரி ஆண்கள் தான். ஆண்களை எதிர்த்துப் போராடுவோம். பெண்ணுரிமை வாழ்க! ஆண்கள் ஒழிக! ஆண்கள் ஒழிக!! இன்னைக்கு இதுதான் பெண்ணுரிமைக்காக போராடும் பெரும்பாலான இயக்கங்களின் கோஷமா இருக்குது. பெண்ணுரிமைனாலே அது ஆண்களுக்கு எதிரானதுங்குற விளக்கம் தான் கொடுக்கப்படுது. இந்தவகையான தவறான புரிதல் தான் ஆணுக்கும் பெண்ணுக்குமான கருத்துவேறுபாட்டையும் அதிகார மனப்பான்மையையும் அதிகரிக்குது. அதாவது சமுதாயத்துல பெண்களின் உரிமைகளுக்காக போராடனுமேயொழிய, ஆண்களை எதிரியா நெனச்சுப் போராடுறதுல தான் அடிப்படைத் தவறே இருக்கு. ஆண்களுக்கு சாதகமா பேசுறதுக்காக சொல்லவரல.. எனக்குத் தெரிஞ்சவரைக்கும் பெண்களை சக மனுஷியா நடத்துற, அவர்களோட உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்குற ஆண்களும் இருக்கத்தான் செய்யுறாங்க. அதே சமயம் பொண்ணுங்கனாலே தாழ்ந்துதான் இருக்கணும்னு சொல்லிச் சொல்லியே அவங்கள அடிமைப்படுத்துற பெண்களும் சமூகத்துல இருக்குறாங்க. இங்க பெண்ணுரிமைப் போராட்டம்குறது யாரை எதிர்த்துங்குறதுல இல்ல. எந்த அடிப்படைலங்குறதுல தான் இருக...

”The Day My God Died“ - குழந்தைகளுக்குக் காத்திருக்கும் பாலியல் தொழில் - ஒரு ஷாக் ரிப்போர்ட்

Image
அவன்.. உங்களுக்கு நன்கு பரிச்சயப்பட்டவனாக இருக்கலாம். உங்கள் நம்பிக்கைக்குரியவனாக, நவநாகரீகமானவனாகவும் இருக்கலாம். உங்கள் குழந்தைகளுக்கு பொம்மைகளும், சாக்லேட்களும் அடிக்கடி வாங்கிக்கொடுத்து நன்கு விளையாடிக்கொண்டிருக்கலாம். யாருக்குத் தெரியும்... அவனே கூட, ஒரு அசிங்கமான செயலை உங்கள் குழந்தைகளிடம் நிகழ்த்தும் தருணத்திற்காக காத்துக்கொண்டிருக்கலாம். ‘The Day My God Died ’ – இது பாலியல் தொடர்பான ஒரு டாக்குமென்டரி ரிப்போர்ட் (NDTV- ல் ஒளிபரப்பப்பட்டது). மும்பை பகுதிகளில் பாலியல் தொழில் நடக்கும் இடங்களுக்கு, Spy Camera கொண்டுசெல்லப்பட்டு படமெடுத்து காட்சியாக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கோப்பின்படி, பாலியல் தொழிலில் அதிகம் சிறுமிகள் தான் ஈடுபடுத்தப்படுகின்றனர், குறிப்பாக ஏழு முதல் பதின்மூன்று வயதுள்ளவர்கள் என்ற அதிர்ச்சியான தகவல் சொல்லப்படுகிறது. ஏற்கனவே இதுபற்றிய செய்திகள் நம் காதுகளை எட்டியிருப்பினும், சம்மந்தப்பட்ட காட்சிகளை நேரடியாகப் பார்க்கும்போது வேதனையளிக்கிறது. (ஒரு சிறுமியை எருமைமாடு மாதிரி ஒருவன் தூக்கி அணைத்து முத்தமிடும் காட்சி, சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு ஒப்பனை செய்து அங்குமிங்...

அபிப்ராயங்கள் ≠ அனுபவங்கள்..

Image
நம்ம ஊர்ல ஒரு கெட்ட பழக்கம் உண்டு. ஏதாவது அறிவுரையோ அபிப்ராயத்தையோ சொல்ல ஆரம்பிச்சவுடனே, “உனக்கு இதப் பத்தி என்ன தெரியும்? அனுபவமில்லாம பேசாத“னு சொல்லி வாய அடச்சிடுவாங்க.   வாஸ்தவம் தான்.. ஆனா இது எல்லா விஷயத்துக்கும் பொருந்தாது. உதாரணத்துக்கு, பத்தாவது மாடிலருந்து கீழ குதிச்சா என்ன ஆகும்னு சொல்றதுக்கு, அப்படி குதிச்சுப் பார்த்த அனுபவம் இருக்கணும்னு அவசியம் இல்லையே.. சரி தானே? நா எழுதுன “ சந்தோசமா சரக்கடிங்க “ பதிவுலயும் இந்தக் கேள்வி வந்துச்சு.. குடிப்பழக்கத்துல இருக்குற கெடுதல்கள்பத்தி சொல்றதுக்கு குடிச்சுப் பார்த்திருக்கணும்னும், குடும்பக் கட்டுப்பாட்டு அலுவலகத்துல வேலை பார்க்குறதுக்கு குழந்தை பெத்திருக்கணும்னும் அவசியம் இல்லையே.. அனுபவப்பூர்வமா அறிவுரை சொல்றதுல நிறைய உபயோகம் இருக்கலாம். அதே மாதிரி ஒட்டுமொத்தமா அனுபவம் இருந்தா மட்டும்தான் ஒரு விஷயம் பற்றி பேசணும்னும் சொல்லிட முடியாது. கேள்வி ஞானம் மட்டுமே வச்சு சொல்லப்படுற அபிப்ராயங்களுக்கும் மதிப்பு இருக்கத்தான் செய்யும். “நானும் ரவுடிதான்.. நானும் ரவுடிதான்“னு விளம்பரம் பண்ற மாதிரி ஒருசிலர் வெட்டியா, கடனேனு கருத்து சொல்வ...