Posts

Showing posts from January, 2011

தேடிப்போய் வாங்குன பல்பு...

Image
ஏதோ வேண்டுதல்னு குலதெய்வம் கோயிலுக்கு அம்மா போகணும்னு சொல்லிகிட்டே இருந்தாங்க. லீவு கெடைக்காததால போகமுடியாம இருந்தது. என்னோட தங்கைக்கு மாப்பிள்ளை பாத்துகிட்டு இருக்குறதால, யாரோ ஜோசியர் அவளை அந்த கோவில்ல விளக்கேத்த சொல்லியிருந்தாராம். அதுனால இந்தவாரம் எல்லாரும் சேர்ந்து அந்த கோயிலுக்குப் போய்ட்டு வரலாம்னு முடிவெடுத்தாங்க. ஒரு வேன் பிடிச்சு, எங்க குடும்பம், என் சித்தப்பா குடும்பம்னு ஒரு 12 பேர் போயிருந்தோம். எங்க சித்தப்பாவோட பேத்தி எங்களோட வந்திருந்துச்சு. அதுக்கு அஞ்சு அல்லது ஆறு வயசு இருக்கும். பூஜைய முடிச்சிட்டு வெளில வரும்போது வாசல்ல நெறைய பிச்சைக்காரங்க இருந்தாங்க. அம்மா அவங்களுக்கு காசு போட்டாங்க. எங்க கூட வந்திருந்த அந்த குட்டிப்பொண்ணு, தான்தான் காசு போடுவேணு அடம்பிடிச்சு என்கிட்ட வந்து கேட்டுச்சு. நானோ “அதான் அவங்க போட்டுட்டாங்கல்ல.. போதும் வா“னு கையப் பிடிச்சு இழுத்தேன். (சில்லரை எல்லாம் இருந்துச்சுங்க). உடனே அந்தக் குட்டி, என்ன பாத்து “ஏன் இப்டி பண்ற??? காசு குடு, அப்பதான் நீ பிச்சையெடுக்கும்போது அவங்க போடுவாங்க“னு சொல்லுச்சு. (அவ்வ்வ்வ்..)

டீன்-ஏஜ் ஜாக்கிரதை..

Image
தொழில்நுட்பம்குறது நம்மளோட அறிவ வளத்துக்குறதுக்கும் தகவல்கள தெரிஞ்சுக்குறதுக்கும் உபயோகமா இருக்குற சாதனம் தான். ஆனா இன்னைக்குள்ள வாழ்க்கை முறைல இளைஞர்களோட வாழ்க்கைப் பாதையை வெகுவா மாத்துறது இந்த தொழில்நுட்பங்கள் தான்னு சொல்லலாம். முக்கியமான உதாரணமா இணையத்த சொல்லலாம். இளைஞர்கள்னு கூட சொல்ல முடியாது. சின்னப் புள்ளைய்ங்க கூட அசால்ட்டா இன்டர்நெட் யூஸ் பண்ணுதுங்க. கேம்ஸ் விளையாட்றதுல தொடங்கி பெரிய பெரிய விஷயங்களெல்லாம் தானா கத்துக்குதுக. அது நல்ல விசயமா இருந்தா பரவாயில்லை.. ஆனா தேவையில்லாத வேலையெல்லாம் இணையத்துல பண்றாய்ங்க. தப்பான பேர்ல ச்சாட் பண்றதுல ஆரம்பிச்சு கண்ட கண்ட இணையதளத்த மேயுறது வரைக்கும் எல்லா 420 வேலையும் செய்றானுங்க. என் பக்கத்து வீட்டுல குடியிருக்குறவங்களுக்கு பத்தாவது படிக்கிற ஒரு பையன் இருக்கான். அவங்களுக்குப் படிப்பறிவு கம்மி, ஆனாலும் நல்ல வசதியானவங்க. அவன் ஒரே பையன்குறதுனால அவன் கேட்டான்னு கம்ப்யூட்டர், செல்போனெல்லாம் வாங்கி குடுத்துருக்காங்க. அந்தப் பையன எனக்குச் சின்ன வயசுலருந்தே தெரியும்குறதுனால என்கிட்ட நல்லா பேசுவான். பாக்குறதுக்கு ரொம்ப அப்பாவி மாதிரி இரு

ஜோக்ஸ் மாதிரி.. (சிரிப்பு வரலைனா நா பொறுப்பில்ல..)

Image
இது ஒரு உப்புமா பதிவு.. பதிவெழுத நேரமில்லாதனால (வெட்டியா இருந்தாலும் நாங்க ரொம்ப பிசினு சீன் போடுவோம்ல) எங்கயோ கேள்விப்பட்ட ஜோக்ஸ பகிர்ந்துக்குறேன். (எங்க பக்கத்து வீட்டு பாட்டி மேல சத்தியமா இத யாரு எழுதுனதுனு தெரியாதுங்க. இங்க கிறுக்குனது நாங்குறதுனால கிறுக்கியது : இந்திரா“னு வரும். அப்புறம் யாரும் சண்டைக்கு வந்துடாதீங்க.. சொல்லிபுட்டேன்.) ******************************** பக்கத்து வீட்டுக்காரன் ஓசிப் பேப்பர் கேட்கறான்னு பேப்பரை நிறுத்துனது தப்பாப் போச்சு.. ஏன்? இப்ப நியூஸ் கேட்டுட்டுத் தரேன்னு டிவிஐ ஓசி கேக்குறான். ******************************** உங்க வீட்ல சமையல்காரனா வேலை செய்ய நா ஒத்துக்குறேன். ஆனா ஒரு கண்டிசன். என்ன கண்டிசன்? தயங்காம சொல்லு. என்னையும் இங்கயே சாப்பிடுனு வற்புறுத்தக் கூடாது. ******************************** நண்பர் : உங்க மனைவி, யாருக்கு ஓட்டுப் போடுவாங்க? கணவன் : நா யாருக்கு ஓட்டுப் போடுவேனோ.. அவருக்குத்தான். நண்பர் : நீங்க யாருக்கு ஓட்டுப் போடுவீங்க? கணவன் : அதை இன்னும் என் மனைவி முடிவு செய்யலையே.. **********************

உலகின் மிகச் சிறந்த தம்பதிகளுக்கு ஒரு வாழ்த்து...

Image
என்னப் பொறுத்தவரைக்கும் இந்த உலகத்துலயே மிகச் சிறந்த தம்பதிகள்னா அது என்னோட அப்பா, அம்மா தான். “மேட் ஃபார் ஈச் அதர்“ங்குற வாக்கியமே இவங்களுக்காகத் தான் படச்சிருக்காங்களோனு நா பலமுறை நெனச்சிருக்கேன். ஒருத்தருக்கொருத்தர் புரிஞ்சு நடந்துக்குறதும், கேலியா கிண்டல் பண்ணிக்கிறதும், ஆறுதலா பேசிக்கிறதும், எண்ணங்களப் பகிர்ந்துக்குறதும்.. ஈகோ பாக்காம விட்டுக்குடுக்குறதும்னு..... கணவன் மனைவின்னா இப்படித்தான் இருக்கணும்னு பல தடவை நானே அவங்களப் பாத்து கண்ணு வச்சிருக்கேன். இந்த அளவுக்கு ஒருத்தர ஒருத்தர் உயிரா காதலிக்க முடியுமானு ஆச்சர்யப்பட வைக்கிற காதலர்கள். அவங்களுக்குள்ள இருக்குற காதல், வார்த்தைகளால வர்ணிக்க முடியாதது. தலைமுறை இடைவெளினு தள்ளிவச்சுப் பாக்காம நண்பர்கள் மாதிரி எங்களோட அரட்டை அடிக்கும்போதெல்லாம் சந்தோசத்துக்கு அளவே இருக்காது. ஒருத்தர ஒருத்தர் கலாய்ச்சுக்கும்போதும், எங்களோட சரிக்கு சரியா ஆட்டம் போடும்போதும் இத விட சிறந்த நட்பு இருக்க முடியாதுனு தோணும். தங்களோட மூணு பொண்ணுங்கதான் இவங்களோட உலகமே... 24 மணி நேரமும் எங்களுக்காகவே வாழ்ற இவங்களுக்கு நாளைக்கு (22.01.2011) திருமண நாள்.