Posts

Showing posts with the label வலி

முகமறியாதவன்..!!

Image
அது நீங்களாக இருக்கலாம்.. சில சமயம் நானாகக் கூட..! ஒரு முறை சாலையில்.. சில முறை பயணத்தில்.. வேறொரு முறை மருத்துவமனையில்.. பிரிதொரு முறை எங்கோவென அவனைக் கடந்து சென்றிருக்கலாம்..!! வற்றிப்போன கண்களும் வரண்டுபோன இதயமுமாய் வெறுமையான நினைவலைகளுடன் எதையோ தேடிக்கொண்டிருப்பவனாய் நம் அருகிலேயே அமர்ந்திருக்கலாம்..! அழுகைகளும் அவமானங்களும் உள்ளுக்குள் அரித்துக்கொண்டிருக்க, வெளிக்காட்டாதவனாய் எதிர் வந்துகொண்டிருக்கலாம்..! நேசிப்பின் இழப்பை சந்தித்தவனாய்.. நட்பின் துரோகத்தில் மூழ்கியவனாய்.. உறவின் பிரிவை ஏற்றுக்கொண்டவனாய்.. வாழ்வின் கடைசி நாட்களை எண்ணிக்கொண்டிருப்பவனாய்.. எல்லாம் மறைத்து நம்முடன் பேசிக்கொண்டிருக்கலாம்..!! “எனக்கு மட்டும் ஏன் இப்படி“ என்று சலித்துக்கொள்ளும் நம்மைப் பார்த்து உள்ளுக்குள் புன்முறுவல் புரிந்தவனாய்.. முகமறியாதவனாய்.. முகவரி தொலைத்தவனாய்.. நம்முடனே இருக்கக்கூடும்.. நமக்குத் தெரியாமலேயே!! . .

எனக்குப் பிடித்தமான உன் பிரிவு..

Image
  சின்னச் சின்ன சம்பவங்களில் கூட சிதறாது வந்துவிடுகிறாய்..! நிறங்களில் , பாடல்களில் , எழுத்துக்களில் என என் எல்லாவற்றையும் ஆட்கொள்கிறாய்..! சிரித்தாலும் சிந்தித்தாலும் அழுதாலும் அமைதியானாலும் அத்தனையிலும் நீயே தெரிகிறாய்..! விடுபட்டாலும் விலகாதிருக்கிறாய்.. நீயாய் இல்லையெனினும் நினைவுகளாய்..!! உன் நினைவுகளைத் தின்று பசியாற்றிக் கொள்கிறது என் கவிதைகள.. உன் இல்லாமையைத் தின்று இயங்கிக்கொண்டிருக்கிறது என் வலிகள்..   தனிமை.. சிலநேரம் பிடித்தமானதாய் இருக்கலாம்! பலநேரம் பிடித்தவர்களுக்காய் இருக்கலாம்!! மிகச்சிலநேரம் பிடிப்பில்லாததால் இருக்கலாம்!!! கழிவறைக்குச் சென்று சோம்பல் முறிக்கும் தொழிற்சாலைப் பணிப்பெண் போல ஏதோ ஒரு அசௌகரியம் எல்லோருக்குள்ளும் இருக்கலாம்..! பிடித்தவர்களின் பிரிவுகள் கூட சில நேரம் பிடித்துப்போகலாம்.. பிடித்தடைத்த பறவையின் விடுதலை போல..!! என்றாவது நீ உணரலாம் உதாசீனத்தின் உக்கிரத்தை..! யாராவது உனக்குணர்த்தலாம் அலட்சியப்படுத்துவதன் அர்த்தத்தை..! அப்போதுனைப...