Posts

Showing posts from May, 2011

எனக்கு நானே குடுத்துகிட்ட பல்பு...

Image
நா வேலைக்கு சேர்ந்த புதுசுல பஸ் பாஸ் எடுக்கலாம்னு, கூட வேலை பாக்குற ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் முடிவு பண்ணிருந்தோம். வேலை பாக்குற கம்பெனில இருந்து ஒரு சான்றிதழும் போட்டோ ரெண்டும் கொண்டு போகணும்னு , தெரிய வந்துச்சு. ஆபீஸ்ல அந்த சான்றிதழ, தனித்தனியா முந்தின நாளே வாங்கி வச்சுகிட்டோம். அன்னைக்கு சாயந்திரம் எல்லாரும் பேசிவச்சு, மறுநாள் காலேல பத்து மணிக்கு பாஸ் எடுக்குற எடத்துக்கு போய்டலாம்னு சொல்லி வச்சிருந்தோம். அதுல ரெண்டு பேர் வரமுடியாதுனு சாக்கு சொன்னாங்க. நான் தான் அவங்கள திட்டி, ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து போய்ட்டு வரலாம்னு அட்வைஸ் பண்ணி சம்மதிக்க வச்சேன். சரின்னு சொல்லிட்

விழித்தூண்டில்..

Image
உன் விழித்தூண்டிலில் மாட்டிக்கொண்டது என் இதயம் .. உனக்காக எனும்போது துடிக்க மட்டுமல்ல .. வெடிக்கவும் தயங்காமல் ..!

கிளையுதிர்காலம்..

Image
சேமித்து வைத்துக் கொண்டிருக்கிறேன் .. உன் பிரிவுக்கான எனது கண்ணீர்த் துளிகளை . சிரிப்பெனும் முகமூடி அணிந்து என்னை நானே தேற்றிக் கொண்டிருக்கிறேன் தெரிந்தே .. எந்தக் காதலும் திருமணத்தில் தான் முடியும் . ஆம் ! என் காதலும் .. உன் மணத்தில் . வசனங்களில் முலாம் பூசினாலும் வார்த்தைகளில் வலி உணர்கிறேன் . எனக்கான கிளையுதிர் காலம் எப்போதோ ? காட்டி கொடுத்து விடாதே என்று கண்ணாடியில் கூட நினைவுறுத்திக் கொள்கிறேன் கண்களை . பக்குவப்படாத உன் வார்த்தைகளில் தான் எத்தனை எத்தனை எதிர்பார்ப்புகள் ?? சிறு பிள்ளையாய் நீ உரையாடும் ஒவ்வொரு நிமிடங்களிலும் கரைந்து தான் போகிறேன் .. உன் கேள்விகளைத் தள்ளிப்போடும் எனக்கு உன் கனவுகளை களைக்கும் தைரியம் இல்லை . எத்தனையோ எதிர்காலக் கனவுகள் .. அமைதியாய் உறங்குகின்றன . நிறைவேறாத ஏக்கங்கள் என்ற பெயரில் . எதிர்பார்ப்புகள் எதுவுமே நிறைவேறாதெனில் எதிர்பார்ப்பதை நிறுத்தி விடலாமே .. வாழ்க்கை எனக்கு கற்றுக் கொடுத்த பாடம் இது தான் .. இது மட

சொர்க்கம்??? நரகம்???

Image
சொர்க்கம்... ஒருவருக்கொருவர் வெளிப்படுத்தாமல் ஒருதலையாய்க் காதலித்துக்கொண்டிருக்கும்போது இருவருக்கும், தற்செயலாய் பெற்றோரால் திருமணம் நிச்சயிக்கப்படும்போது.. ************************************************* நரகம்.. ஒருதலையாய்க் காதலிக்கப்பட்டவள், தன் காதலனை நினைத்து அழுவதை, அருகிருந்து மௌனமாய்ப் பார்க்கும் தருணம்.. . .