அத்துணையும் அர்த்தமற்றதாய்..
 
       என் பெயர்..    எப்போதும் நினைவிருப்பதில்லை  ‘ பிச்சைக்காரன் ’ என்பதைத் தவிர..!   எதிர்காலம் பற்றிய ப்ரஞ்கையில்லாது  பிற எச்சிலின் மிச்சத்திற்காகவே    காத்துக்கொண்டிருக்கிறேன்.. !   கள்வனாயும் கையேந்தியவனாயும்  காலப்போக்கை கடத்திச்செல்கிறேன்..!   புறக்கணிப்பும் பரிகாசமும்  புதைகுழியாய் இழுத்துக்கொண்டிருக்க  புறம்பாய் வெளித்தள்ளுகிறேன்  எனக்கான இருத்தல்களை..!   சமூகமெனும் சாக்கடையோரம்  நீந்திக்கொண்டிருக்கும் கழிவுப்புழுவாய்  சரித்திரம் படைத்துக்கொண்டிருக்கிறேன். .!   கடந்துசெல்கையில் சுழிக்கும் முகங்களுக்கு  கடுகளவும் கவலையில்லை..  காணாமல் போன என் கனவுகள் பற்றி..!   எனக்கான மறுவாழ்வென்பது    மறவாமல் நிரப்பப்படுகிறது  சூன்யம் எனும் மொழிபெயர்ப்பு கொண்டு..!   அத்துணையும் அர்த்தமற்றதாய் ,  கண்ணெட்டும் தூரத்திலோர் குழந்தையின்    பிஸ்கெட் துண்டுகள் கீழே விழக்கோறியபடி    பிரார்த்தனை செய்துகொண்டிருக்கிறேன்  பொறுக்குவதற்கு ஆயத்தமாய்..!!  .