படித்ததில் புரியாதது



“அதற்குத் தக“ புத்தகத்திலிருந்து தமிழ்மணவாளன் என்பவர் எழுதிய “தெளிவுறுதல்“ என்ற தலைப்பிலான கவிதை

***************************************

தெளிவுறுதல்

மீனொன்று காற்றில் பறந்துபோனது வியப்பாயிருக்கிறது.

காற்றுப் பரப்பில் சுவாசிக்கவியலாது மீனுக்கு.

அவ்வாறெனில்

காற்று எப்போது நீராய் மாறியது..

மீன் பறவையானதா? செதில்கள் சிறகுகளாய்.

மீனென்றால் அது காற்றாக இருக்க முடியாது.

காற்றென்றால் அது மீனாக இருக்க முடியாது.

காற்றாக மீனாக நீராக பறவையாக..

காற்று நீர் மீன் பறவை

மீன் பறவை காற்று நீர்

நீர் மீன் பறவை காற்று

வியப்பாயிருக்கிறது என்றாலும் கூட

மீனொன்று காற்றில் பறந்து போனது.

***************************************

.

(படிச்சுட்டீங்களா??? என்ன சொல்ல வர்றாருனு தெளிவ்வ்வ்வா புரியுது.. இல்ல?)

.

Comments

குட் பார்ம்ல இருக்கிங்க..
ரேவா said…
ஹ ஹ நல்லாவே புரியுதுதுதுதுதுதுதுது.....ஆனா...?...
சத்தியமா புரியல...
புரிஞ்சுடுச்சு... :))
vinu said…
naaanu naanu naanum presennttttuuuuu
////மீனென்றால் அது காற்றாக இருக்க முடியாது.

காற்றென்றால் அது மீனாக இருக்க முடியாது////

ரொம்பத் தெளிவா புரிஞ்சிருக்குங்க..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
உலகப் புகழ் பெற்ற தமிழர் கோயிலும் அழிவடையும் தமிழர் சின்னமும்..
Jeni said…
Vanthu padichathu oru kuthamaya....


Romba theliva kolapitaru.....


:-(
Speed Master said…
எனக்கு இது தேவையா

ஊருக்குள்ள பல பதிவர்கள் இருந்தும் இந்திரா மேடம் நல்லா எழுதவாங்கன்னு படிக்கவந்தா ம் முடியலா

எப்படியெல்லாம் எழுதாறாங்க
உங்களுக்கு என்ன புரியுதுன்னு நீங்க கடைசிவரை சொல்லவேயில்லையே
யாருயா அது.!! அய்ய்யய்யோ.!! ஒருவேளை பெண்ணை பற்றிய கவிதையா இருக்குமோ.??? ஒருவேல அப்படி இருக்குமோ.!!! இல்ல இப்படி இருக்குமோ.!! இல்ல அந்த மாதிரியா இல்ல இந்த மாதிரியா.??? என்னவாயிருந்தாலும் நான் எந்த மாதரின்னே புரியல இது எந்த மாதிரியா இருந்தாலும் இந்த மாதிரி பேசாம மத்தவங்க மாதிரி புலம்பிட்டு போகவேண்டியது தான்.!!
கவிதை அருமை.. அட்டகாசம்.. அப்படி இப்படினு சொல்லணும்னு தான் நினச்சன்.. என்ன பண்ண நாம ரெண்டு பேரும் ஒரே நிலமையில தான் இருக்கோம்..
Excuse Me...

நிசமா சொல்லுறேன்..
எனக்கு இது நல்லா புரியுது..!!
எல்லா மீனும் கடையில இருக்குதுனான்... ஆனால் இந்த மீன் மட்டும் இல்லனு சொல்லிட்டான்...

------------------------------------

குளத்தில் அல்லாது ஆகாயத்தில் பறந்த மீன் விண்மீனோ என்றால் இல்லை...

நீரில் அல்லாது நடுவானில் பறக்கும் மீன் என்றால் விமானமாக இருக்குமோ?

-----------------------------------

தொண்டையில் சிக்கிய மீன் முள்ளாய் நாங்கள்...
@இந்திரா

நான் இந்தத் தொகுப்பைப் படித்ததில்லை. என்ன பொருளில் சொல்லவருகிறார் என்று தொகுப்பைப் படித்தால் ஒருவேளை எனக்குப் புரிய வரலாம். இப்போதைக்குத் தோன்றுவதை சொல்கிறேன். தவறாகக் கூட இருக்கலாம்.

Fish out of waters என்ற சொற்றொடரைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்தானே. மீன் தண்ணீரில் இல்லையென்றால் உயிர் வாழாது (அப்புறம் என்று நீங்கள் அலுத்துக்கொள்வது தெரிகிறது!). இந்தக் கவிதையில் காற்றில் பறக்கிறது? எப்படி சாத்தியம்?

கிராமத்தில் இருந்து நகரம் சென்ற ஒருவர் அங்கே போய் சக்கைபோடு போடுகிறார் என்று எடுத்துக்கொள்வோம். அதைக் கண்ணுறும் மற்றொரு நண்பர் கிராமத்திற்கு வந்த அவரைப் பற்றி எப்படியெல்லாம் பேசுவார்?

“மூக்கு ஒழுகினாக் கூடத் துடைக்கனும்னு தெரியாத பய, இந்தப் போடு போடறான் இப்போ. ஆள் அப்படியே மாறிவிட்டானே. டவுன் பஸ் புடிச்சுப் பக்கத்து ஊருக்குப் போயிட்டு வரத் தெரியாதவன் (குளத்து மீன்) இப்போ விமானத்தில் பறக்கிறானே (பறவை)”

இந்த ரீதியில் அந்தப் பேச்சு போய்க்கொண்டிருக்கும்.

அதைக் கேட்கும் இன்னொருவர், “அப்போ பட்டணமும நம்ம ஊரு மாதிரிதான்னு சொல்லு (நீர்= காற்று). அந்தப் பயலே சக்கை போடு போடும்போது (மீன்=பறவை) நாமளும் போனாப் பொழச்சுக்கிடலாம்னு சொல்லு”

ஐயோ முடியலைன்னு யாராவது பின்னூட்டம் போடுங்க இந்த விளக்கத்திற்கு;-)
@இந்திரா

“ஆமா அவனுக்குத் தமிழிலேயே நாலு வார்த்தை (நீந்த மட்டுமே உதவும் செதில்கள்) சேர்ந்தாற்போலப் பேச வராதே. இங்கிலீஷ் (சிறகுகள்) எப்படி சமாளிக்கிறான்?

கொஞ்சம் கஷ்டப்படறான் அந்த விஷயத்துல. ஆனாலும் சமாளிக்கிறான்.

பறந்தால்தான் உயிர் வாழமுடியும் என்றால் என்ன இருக்கிறதோ அதைக் கொண்டு பறக்கத்தான் வேண்டும் (வியப்பாய் இருக்கிறது என்றாலும் கூட என்ற கவிதை வரி).
காதலியின் கண்களைச் சொல்கிறாரோ என்னவோ..

அப்படியானால் அந்தக் கண்கள் மட்டுமே மீனாய் அவரை ஈர்த்திருக்கிறது - முகத்திலிருந்து தனியாய்...

இப்படித்தாங்க காதல் பைத்தியமாக்கிடும். ஆனாலும் அந்த பைத்தியங்களை ஒரு சில பைத்தியங்கள் புரிஞ்சிக்கிடும்..
இது நிஜமென்றால் அது நிஜமில்லை..

அது நிஜமென்றால் இது நிஜமில்லை..

என சூழலையே சந்தேகிக்க வைக்கின்ற மாயையாக் இருக்கிறாளாம் காதலி..

இது எப்படி?
இது நிஜமென்றால் அது நிஜமில்லை..

அது நிஜமென்றால் இது நிஜமில்லை..

என சூழலையே சந்தேகிக்க வைக்கின்ற மாயையாக் இருக்கிறாளாம் காதலி..

இது எப்படி?
புரியல... புரியல... புரியல...
Varshana said…
நான் சொல்றதாவது புரியுதா!?
Varshana said…
வானில் ஒரு மேகம்
அது மழையானது
மழைநீர் ஆவியானது
ஆவி காற்றானது
காற்று மேகமானது

ஆனாலும்
வானில் ஒரு மேகம்!

ஒன்றின் பிம்பத்தில்
மற்றொன்றை கண்டேன்
பிம்பம் ஒரே நேரத்தில்
அதுவாகவும் இதுவாகவும்
இருக்கிறது
ஆனாலும் பிம்பம்
ஒன்றை கண்டேன்!
IlayaDhasan said…
அதான் தெளிவுருதல்நு சொல்லிருகுள்ளே. :-)


http://unmaikaga.blogspot.com/
இதுல இருந்து எனக்கென்ன தெரியுதுன்னா கவிதை படிக்கறதை குறைச்சுக்கனும்.
கற்பனைக்கு எல்லை இல்லை என்பது இந்தக் கவிதையில் புரிகிறது . பகிர்வுக்கு நன்றி இந்திரா
R.Gopi said…
//(படிச்சுட்டீங்களா??? என்ன சொல்ல வர்றாருனு தெளிவ்வ்வ்வா புரியுது.. இல்ல?)//

**********

நிஜமாவே எனக்கு புரிஞ்சது, நீங்க சொன்ன இந்த ஒரு விஷயம் மட்டும்..
//# கவிதை வீதி # சௌந்தர் said...

குட் பார்ம்ல இருக்கிங்க..//


வாங்க சௌந்தர்..

//புரியுது ஆனா..//


புரிஞ்சிடுச்சுங்க..
//ரேவா said...

ஹ ஹ நல்லாவே புரியுதுதுதுதுதுதுதுது.....ஆனா...?..//



ஹிஹிஹி புரிஞ்சிடுச்சு ரேவா
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

3rd vadai//


வடையெல்லாம் கரெக்டா வாங்குங்க.. பதிவ மட்டும் படிக்கிறதில்ல..
//vinu said...

naaanu naanu naanum presennttttuuuuu//


ஓகே.. வழக்கம்போல அட்டெண்டன்ஸ் உண்டு.. போய்ட்டு வாங்க.
//மாணவன் said...

புரிஞ்சுடுச்சு... :))//


நம்பிட்டேங்க..
//சங்கவி said...

சத்தியமா புரியல...//


அததாங்க நானும் சொல்றேன்
//Jeni said...

Vanthu padichathu oru kuthamaya....


Romba theliva kolapitaru.....


:-(//


ஹிஹிஹி..
குழம்பினதுக்கு நன்றி ஜெனி
//♔ம.தி.சுதா♔ said...

////மீனென்றால் அது காற்றாக இருக்க முடியாது.

காற்றென்றால் அது மீனாக இருக்க முடியாது////

ரொம்பத் தெளிவா புரிஞ்சிருக்குங்க..
//


நன்றிங்க சுதா
//ஜெய்லானி said...

உங்களுக்கு என்ன புரியுதுன்னு நீங்க கடைசிவரை சொல்லவேயில்லையே//


எதுவுமே புரியலைங்குறது மட்டும் தெளிவா புரிஞ்சுதுங்க.
//Speed Master said...

எனக்கு இது தேவையா

ஊருக்குள்ள பல பதிவர்கள் இருந்தும் இந்திரா மேடம் நல்லா எழுதவாங்கன்னு படிக்கவந்தா ம் முடியலா

எப்படியெல்லாம் எழுதாறாங்க//


ஏமாந்தீங்களா.. ஏமாந்தீங்களா..
//தம்பி கூர்மதியன் said...

யாருயா அது.!! அய்ய்யய்யோ.!! ஒருவேளை பெண்ணை பற்றிய கவிதையா இருக்குமோ.??? ஒருவேல அப்படி இருக்குமோ.!!! இல்ல இப்படி இருக்குமோ.!! இல்ல அந்த மாதிரியா இல்ல இந்த மாதிரியா.??? என்னவாயிருந்தாலும் நான் எந்த மாதரின்னே புரியல இது எந்த மாதிரியா இருந்தாலும் இந்த மாதிரி பேசாம மத்தவங்க மாதிரி புலம்பிட்டு போகவேண்டியது தான்.!!//


இப்டியே சொல்லி ஒரு பின்னூட்டம் தேத்திட்டீங்க.. ம்ம் போய்ட்டு வாங்க.
எப்டியோ, குழம்பினதுக்கு நன்றிங்க.
//வெங்கட் said...

Excuse Me...

நிசமா சொல்லுறேன்..
எனக்கு இது நல்லா புரியுது..!!//


அப்படியா????
வெங்கட் சொன்னா சரி தாங்க.
//தீபிகா said...

கவிதை அருமை.. அட்டகாசம்.. அப்படி இப்படினு சொல்லணும்னு தான் நினச்சன்.. என்ன பண்ண நாம ரெண்டு பேரும் ஒரே நிலமையில தான் இருக்கோம்..//


அவ்வ்வ்வ்வ்
நீங்களும் நொந்துபோயிட்டீங்களா??
//Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

எல்லா மீனும் கடையில இருக்குதுனான்... ஆனால் இந்த மீன் மட்டும் இல்லனு சொல்லிட்டான்...

------------------------------------

குளத்தில் அல்லாது ஆகாயத்தில் பறந்த மீன் விண்மீனோ என்றால் இல்லை...

நீரில் அல்லாது நடுவானில் பறக்கும் மீன் என்றால் விமானமாக இருக்குமோ?

-----------------------------------

தொண்டையில் சிக்கிய மீன் முள்ளாய் நாங்கள்...//


உங்களுக்கே அவரே பரவாயில்லை போல..
//Chitra said...

:-)//


நல்லா சிரிச்சு சமாளிக்கிறீங்க..
அபராதத்த மறந்துட்டீங்களா???
//Gopi Ramamoorthy said...//


தெளிவான விளக்கத்துக்கு நன்றிங்க.
ஹிஹிஹி
//சே.குமார் said...

புரியல... புரியல... புரியல...//


ஓகே.. ஓகே.. ஓகே..
//வெட்டிப்பேச்சு said...

காதலியின் கண்களைச் சொல்கிறாரோ என்னவோ..

அப்படியானால் அந்தக் கண்கள் மட்டுமே மீனாய் அவரை ஈர்த்திருக்கிறது - முகத்திலிருந்து தனியாய்...

இப்படித்தாங்க காதல் பைத்தியமாக்கிடும். ஆனாலும் அந்த பைத்தியங்களை ஒரு சில பைத்தியங்கள் புரிஞ்சிக்கிடும்..//


ஏதோ சொல்றீங்கனு மட்டும் தெரியுது..


//இது நிஜமென்றால் அது நிஜமில்லை..

அது நிஜமென்றால் இது நிஜமில்லை..

என சூழலையே சந்தேகிக்க வைக்கின்ற மாயையாக் இருக்கிறாளாம் காதலி..

இது எப்படி?//


இதுக்கு அந்தக் கவிதையே தேவல போலயே.. அவ்வ்வ்
//Varshana said...

வானில் ஒரு மேகம்
அது மழையானது
மழைநீர் ஆவியானது
ஆவி காற்றானது
காற்று மேகமானது

ஆனாலும்
வானில் ஒரு மேகம்!

ஒன்றின் பிம்பத்தில்
மற்றொன்றை கண்டேன்
பிம்பம் ஒரே நேரத்தில்
அதுவாகவும் இதுவாகவும்
இருக்கிறது
ஆனாலும் பிம்பம்
ஒன்றை கண்டேன்!//


இப்ப என்னாங்குறீங்க????
புரியலைனு சொன்னது ஒரு குத்தமாய்யா????
இப்படியெல்லாம் லெக்ச்சர் எடுத்து பயமுறுத்தக் கூடாது சொல்லிப்புட்டேன்.
//Varshana said...

நான் சொல்றதாவது புரியுதா!?//

புரிஞ்சிடுச்சு.. புரிஞ்சிடுச்சு..
திரும்ப எதுவும் விளக்கம் குடுத்துறாதீங்க..
//IlayaDhasan said...

அதான் தெளிவுருதல்நு சொல்லிருகுள்ளே. :-)//


அதுனால தெளிவ்வ்வ்வா புரிஞ்சிடுச்சாக்கும்..???
//Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...

:-))//


ஓகேங்க..
//!♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

கற்பனைக்கு எல்லை இல்லை என்பது இந்தக் கவிதையில் புரிகிறது . பகிர்வுக்கு நன்றி இந்திரா//


வருகைக்கு நன்றி சங்கர்..
கருத்துக்கும் தான்.
//சி.பி.செந்தில்குமார் said...

இதுல இருந்து எனக்கென்ன தெரியுதுன்னா கவிதை படிக்கறதை குறைச்சுக்கனும்.//


நீங்களா??? நானா???
//R.Gopi said...

//(படிச்சுட்டீங்களா??? என்ன சொல்ல வர்றாருனு தெளிவ்வ்வ்வா புரியுது.. இல்ல?)//

**********

நிஜமாவே எனக்கு புரிஞ்சது, நீங்க சொன்ன இந்த ஒரு விஷயம் மட்டும்..//


இதாவது புரிஞ்சதே.. அது வரைக்கும் சந்தோசமுங்க.
ஹேமா said…
ம்...நானும் சொல்லிப் பாக்கிறேனே இந்திரா !

அதாவது தலையங்கத்திலேயே சொல்லிவிட்டார் “தெளிவுறுதல்”ன்னு.அப்புறமென்ன.கவிதையில் வரும் மீன்,காற்று,நீர்,பறவை குழம்பித் தெளிதலுக்கான உவமானங்களே தவிர... நல்லதொரு கவிதையென்றே நான் சொல்வேன் !
தெளிவுறுதல் மிகச்சிறந்த மகிழ்வுறுதல்
ஹா ஹா ஹா...

எனக்கு ஒன்னு மட்டும் தெளிவா புரிஞ்சிருச்சு... :-)))))

(பி. கு: என்னன்னு மட்டும் கேக்கப் பிடாது...)
அன்னு said…
என்னோட கவிதையெல்லாம் படிச்சிட்டு எழுத முயற்சி செஞ்சிருப்பாரோ??

ஹெ ஹெ ஹெ :)
Praveen said…
Ivaru innoru Kamalahaasan...

Ithu thaan yenakku nalla purinchithu :P

Popular posts from this blog

மரணவலி தரும் உன் மௌனம்..

நீ அழையாத என் கைபேசி..

பெண்களைக் கவர சில டிப்ஸ்