அறிமுகப் பதிவர்களுக்கு சில டிப்ஸ்..



உலகத்துலயே ரொம்ப சுலபமான விஷயம் அறிவுரை சொல்றது தான். வலையுலகத்துல புதுசா காலடி எடுத்து வைக்கிற பதிவர்களுக்கு இதோ சில டிப்ஸ்..

1. பதிவு நல்லாயிருக்கோ இல்லையோ.. அதோட தலைப்பு செம கலாய்ப்பா இருக்கணும். பதிவுக்கும் தலைப்புக்கும் சம்பந்தமே இல்லனா கூட பரவாயில்ல. டிஸ்கி“னு ஒண்ணு போட்டு சமாளிச்சுக்கலாம். ஆனா தலைப்பு ரொம்ப முக்கியம் நண்பர்களே.. உதாரணத்துக்கு யாரையாவது திட்ற மாதிரி, சண்டைக்கு கூப்ட்ற மாதிரி கூட வச்சுக்கலாம்.

2. பதிவுக்கு சம்பந்தமா இருக்கோ இல்லையோ.. பளிச்னு ஒரு போட்டோவ வச்சிடணும். அது சாதாரண ஸ்மைலில ஆரம்பிச்சு க்ளாமரான நடிகை வரைக்கும் போகலாம்.. இதுல கட்டுப்பாடே கிடையாது.

3. பதிவுல இடையிடையே கெட்ட வார்த்தை உபயோகிச்சுக்கணும்.. அதாவது நாங்களும் சீரியசா எழுதுறோம்னு அடிக்கடி ஞாபகப்படுத்திக்கணும். நம்ம பதிவுலகத்துல தான் இதுக்கெல்லாம் சென்சார் கிடையாதே.. அதுனால இப்பல்லாம் இப்டி வெளிப்படையா பேசுறது ஃபேசனாகிப் போய்டுச்சு.

4. அப்புறம் ரொம்ப முக்கியமான விசயம்... பதிவுலகத்தப் பத்தி ஒரு பதிவு போட்றணும். அதாவது சக பதிவர்கள் பற்றிய தாறுமாறான விமர்சனம், அவங்க எழுதுற பதிவுகளப் பத்தி மட்டம் தட்டி.. கட்டாயம் எழுதணும். இப்ப புதுசா பின்னூட்டம் பத்தி விமர்சிச்சு எழுதுறது பரவிகிட்டு இருக்கு. அதுனால அதையும் சேர்த்துக்கலாம்.

5. இன்னைக்கு சூழ்நிலைல நாம பதிவெழுதுறோமோ இல்லையோ.. அடுத்தவன் என்ன எழுதுறான்.. அதுல என்ன குறை கண்டுபிடிக்கலாம், எப்படி மட்டம் தட்டலாம்னு யோசிச்சு பதிவு போட்றது ரொம்பவே முக்கியம். இதுக்கு தனியா கோச்சிங் க்ளாஸ் கூட யாரோ நடத்துறாங்கனு கேள்விப்பட்டேன். அதுனால அத மொதல்ல கத்துக்கணும்.

6. பதிவுல மட்டுமில்ல, பின்னூட்டத்துலயும் சண்டை போடத் தெரிஞ்சிருக்கணும். முக்கியமான வேலை எதுவாயிருந்தாலும், அட எழவு சம்பவமாவே இருந்தாலும் அதையெல்லாம் தள்ளி வச்சுட்டு களத்துல இறங்கிடணும். பின்னூட்ட சண்டைனா சும்மாவா????

7. எதுவுமே தோணலனா, இந்த மாதிரி அட்வைஸ் பண்ணி டிப்ஸ் குடுத்து பதிவு போடலாம். (இப்ப எல்லாருக்கும் சந்தோசம் தானே??)

.

.

Comments

Speed Master said…
நன்றி
இதோ உங்கள் ஆதரவுடன் உங்களைப்பற்றியே ஒரு பதிவபோட வேண்டியாதுதான்


------------------------
பாதுகாப்பா இருக்கறது எப்படி?
http://speedsays.blogspot.com/2011/05/blog-post_04.html
>>பதிவுக்கும் தலைப்புக்கும் சம்பந்தமே இல்லனா கூட பரவாயில்ல. டிஸ்கி“னு ஒண்ணு போட்டு சமாளிச்சுக்கலாம்.

hi hi ஹி ஹி இதுல எனி உள் குத்து?
>>>>பதிவுக்கு சம்பந்தமா இருக்கோ இல்லையோ.. பளிச்னு ஒரு போட்டோவ வச்சிடணும்.க்ளாமரான நடிகை வரைக்கும் போகலாம்.

ம் ம் கன்ஃபர்ம் ஆகிடுச்சு.. ஹா ஹா
>>எப்படி மட்டம் தட்டலாம்னு யோசிச்சு பதிவு போட்றது ரொம்பவே முக்கியம். இதுக்கு தனியா கோச்சிங் க்ளாஸ் கூட யாரோ நடத்துறாங்கனு கேள்விப்பட்டேன்.

அய்யய்யோ.. டியூஷனா?
ஹிஹிஹி பிரபலம் ஆகணும்னா ஏதாவது பிரச்சனை படனும் .)))
முயற்சிக்கிறனே :)
மிக்க சந்தோசம்:
மிகவும் சுவாரசியமாக பதிவு போடுரதுல இந்திரா க்கு இணை இந்திராதான் .
ஆனா பதிவு போடுரதுல இருக்க ஆர்வம் தங்களுக்கு வரும் பின்னூட்டத்துக்கு பதில் பின்னோட்டம் போடுரதுல இல்லைங்கிறது சமீப காலமா காண முடியுது , ஒரு வேலை, நேரம் இன்மை காரணமாக இருக்கலாம் . இருந்தாலும் வருத்தமே , நானே உங்களோட நிறைய பதிவுக்கு பின்னோட்டம் போட்டுட்டு நீங்க என்ன பதில் சொல்லி இருகிங்கன்னு , நிறைய முறை வந்து பார்த்து இருக்கேன் , ஆனால் மிஞ்சியது ஏமாற்றம் மட்டுமே . . .
இதில் உச்சகட்டம் என்னவென்றால் , தங்களை www.tamilrockzs.blogspot.com வலைபூ தளத்தில் அறிமுகபடுத்திவிட்டு அதை தங்களுக்கு பின்னோட்டம் மூலம் தெரிவித்தும் , இந்திரா அவர்கள் வராதது ஏமாற்றமே , tamilrockzs உறுபினர்கள் தங்களுடைய வலைப்பூவுக்கு வந்து தங்களோட பதிவு எல்லாம் படித்து விட்டு , நல்ல எழுதுறாங்கலே இந்திரா , ஏன் நமது வலைபூ தளத்திற்கு வர வில்லை என்று அட்மினிடம் கேட்ட போது ,
மௌனமே பதில் . . .

வருத்தத்துடன் ,
ராக்ஸ் . .
அரசன் said…
எங்கேயோ இடிக்குதே ...
இன்னைக்கு சூழ்நிலைல நாம பதிவெழுதுறோமோ இல்லையோ.. அடுத்தவன் என்ன எழுதுறான்.. அதுல என்ன குறை கண்டுபிடிக்கலாம், எப்படி மட்டம் தட்டலாம்னு யோசிச்சு பதிவு போட்றது ரொம்பவே முக்கியம். இதுக்கு தனியா கோச்சிங் க்ளாஸ் கூட யாரோ நடத்துறாங்கனு கேள்விப்பட்டேன். அதுனால அத மொதல்ல கத்துக்கணும்//
உறுதியா கன்ஃபார்ம் ஆகிடுச்சி ஹஹா
//♔ℜockzs ℜajesℌ♔™ said...

மிகவும் சுவாரசியமாக பதிவு போடுரதுல இந்திரா க்கு இணை இந்திராதான் .
ஆனா பதிவு போடுரதுல இருக்க ஆர்வம் தங்களுக்கு வரும் பின்னூட்டத்துக்கு பதில் பின்னோட்டம் போடுரதுல இல்லைங்கிறது சமீப காலமா காண முடியுது , ஒரு வேலை, நேரம் இன்மை காரணமாக இருக்கலாம் . இருந்தாலும் வருத்தமே , நானே உங்களோட நிறைய பதிவுக்கு பின்னோட்டம் போட்டுட்டு நீங்க என்ன பதில் சொல்லி இருகிங்கன்னு , நிறைய முறை வந்து பார்த்து இருக்கேன் , ஆனால் மிஞ்சியது ஏமாற்றம் மட்டுமே . . .
இதில் உச்சகட்டம் என்னவென்றால் , தங்களை www.tamilrockzs.blogspot.com வலைபூ தளத்தில் அறிமுகபடுத்திவிட்டு அதை தங்களுக்கு பின்னோட்டம் மூலம் தெரிவித்தும் , இந்திரா அவர்கள் வராதது ஏமாற்றமே , tamilrockzs உறுபினர்கள் தங்களுடைய வலைப்பூவுக்கு வந்து தங்களோட பதிவு எல்லாம் படித்து விட்டு , நல்ல எழுதுறாங்கலே இந்திரா , ஏன் நமது வலைபூ தளத்திற்கு வர வில்லை என்று அட்மினிடம் கேட்ட போது ,
மௌனமே பதில் . . .

வருத்தத்துடன் ,
ராக்ஸ் . .//




தவறினை சுட்டிக்காட்டியதற்கு மிகவும் நன்றி நண்பரே..
உண்மையில் நேரமின்மையே இதற்குக் காரணமேயன்றி வேறொன்றுமில்லை.
ஆனாலும் இது என்னுடைய தவறுதான். இனி இது நிகழாவண்ணம் பார்த்துக்கொள்கிறேன்.
தங்களையோ அல்லது மற்ற நண்பர்களையோ வருத்தப்பட வைத்திருந்தால் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.
தன்மேல் தவறிருக்கும் பட்சத்தில் அதனை ஒத்துக்கொண்டு மன்னிப்பு கேட்பதில் தவறில்லை.

கருத்துக்கும் சுட்டிக்காட்டியமைக்கும் நன்றி நண்பரே..
தொடர்ந்து உங்கள் வருகையும் கருத்தளிப்பும் நிகழ வரவேற்கிறேன்.
நன்றி.
karthikkumar said…
யக்கா நீங்களுமா ...:(
karthikkumar said…
இனிமேல் அட்வைஸ் பண்ணுவீங்க ....:))
karthikkumar said…
Choose an identity
karthikkumar (Google Account) – Sign Out

Email follow-up comments to pulsarkarthiktpr@gmail.com
OpenID
karthikkumar said…
Leave your comment

ஸ்மைலி மட்டும் போட்றவங்களுக்கு 1000 ரூபாய் அபராதம்.. சொல்லிப்புட்டேன்..
// karthikkumar said...
Choose an identity
karthikkumar (Google Account) – Sign Out

Email follow-up comments to pulsarkarthiktpr@gmail.com
OpenID//

கார்த்திக் மச்சி இது என்னா எதோ இங்கிலிபீசுல திட்டியிருக்க.... :)
Mahan.Thamesh said…
இன்னைக்கு சூழ்நிலைல நாம பதிவெழுதுறோமோ இல்லையோ.. அடுத்தவன் என்ன எழுதுறான்.. அதுல என்ன குறை கண்டுபிடிக்கலாம், எப்படி மட்டம் தட்டலாம்னு யோசிச்சு பதிவு போட்றது ரொம்பவே முக்கியம். இதுக்கு தனியா கோச்சிங் க்ளாஸ் கூட யாரோ நடத்துறாங்கனு கேள்விப்பட்டேன்.

யாருங்க அது ? சொல்லவே இல்ல இதுக்கெல்லாம ...........
மேல இருக்குற படம் எதுக்கு?
ஒன்னும் வெளங்கலயே?? :)
hello...mudhal thadavaya vanthen intha blogkku!!! wow....nalla ezhudharinga!!!!!oru chinna suggestion...medium speed internet conn irukkarathaala unga blog load aaga time edukkuthu.....mela potrukkara picture size ah korachu podungalen
akulan said…
"அப்புறம் ரொம்ப முக்கியமான விசயம்... பதிவுலகத்தப் பத்தி ஒரு பதிவு போட்றணும். அதாவது சக பதிவர்கள் பற்றிய தாறுமாறான விமர்சனம், அவங்க எழுதுற பதிவுகளப் பத்தி மட்டம் தட்டி.. கட்டாயம் எழுதணும். இப்ப புதுசா பின்னூட்டம் பத்தி விமர்சிச்சு எழுதுறது பரவிகிட்டு இருக்கு. அதுனால அதையும் சேர்த்துக்கலாம்."

boss i what to write a blog which is about you...............
மிக நையாண்டியாக, பாலீசாக உங்களது ஆதங்கத்தை சொல்லிவிட்டீர்கள்..
அற்புதம்..
நல்லா இருக்கு
logu.. said…
\\எதுவுமே தோணலனா, இந்த மாதிரி அட்வைஸ் பண்ணி டிப்ஸ் குடுத்து பதிவு போடலாம். (இப்ப எல்லாருக்கும் சந்தோசம் தானே??)\\

இல்ல.. கொல வெறியா இருக்கு.
ஹே ஹே... ரொம்ப உதவியா இருந்துச்சி... :)
உண்மையாகவே பதிவர்களுக்கான டிப்ஸ் எனது வலைத்தளத்தில்...thagavalmalar.blogspot.com
My days(Gops) said…
sareenga.. neenga sonna maadhiri'ey inimel follow pannuren:)
//Speed Master said...

நன்றி
இதோ உங்கள் ஆதரவுடன் உங்களைப்பற்றியே ஒரு பதிவபோட வேண்டியாதுதான்//


ம்ம்ம் எழுதுங்க எழுதுங்க..
கண்டிப்பா என்னோட ஆதரவு உண்டு.
//கந்தசாமி. said...

ஹிஹிஹி பிரபலம் ஆகணும்னா ஏதாவது பிரச்சனை படனும் .)))//


வாங்க கந்தசாமி சார்...
கருத்துக்கு நன்றி.
//சி.பி.செந்தில்குமார் said...

hi hi ஹி ஹி இதுல எனி உள் குத்து?

ம் ம் கன்ஃபர்ம் ஆகிடுச்சு.. ஹா ஹா

அய்யய்யோ.. டியூஷனா?//


புரிஞ்சுகிட்டீங்க போலயே...
ம்ம்ம் கருத்துக்கு நன்றிங்க..
//siva said...

:)//


எடுங்க 1000 ரூபாயை..
//டி.சாய் said...

முயற்சிக்கிறனே :)
மிக்க சந்தோசம்://


கண்டிப்பா முயற்சி பண்ணுங்க...
வந்ததுக்கு நன்றிங்க.
//அரசன் said...

எங்கேயோ இடிக்குதே ...//


ஹிஹிஹி...
//ஆர்.கே.சதீஷ்குமார் said...

இன்னைக்கு சூழ்நிலைல நாம பதிவெழுதுறோமோ இல்லையோ.. அடுத்தவன் என்ன எழுதுறான்.. அதுல என்ன குறை கண்டுபிடிக்கலாம், எப்படி மட்டம் தட்டலாம்னு யோசிச்சு பதிவு போட்றது ரொம்பவே முக்கியம். இதுக்கு தனியா கோச்சிங் க்ளாஸ் கூட யாரோ நடத்துறாங்கனு கேள்விப்பட்டேன். அதுனால அத மொதல்ல கத்துக்கணும்//
உறுதியா கன்ஃபார்ம் ஆகிடுச்சி ஹஹா//


உங்களுக்கும் புரிஞ்சிடுச்சா???
ம்ம்ம் அப்படியே இருக்கட்டும்..
//மாணவன் said...

:)) :)) :)) :))//


வாங்க மாணவன்.. நலமா???

சரி சரி எடுங்க அபராதத்தை..
//karthikkumar said...

யக்கா நீங்களுமா ...:(//

//Leave your comment

ஸ்மைலி மட்டும் போட்றவங்களுக்கு 1000 ரூபாய் அபராதம்.. சொல்லிப்புட்டேன்..//

//Choose an identity
karthikkumar (Google Account) – Sign Out

Email follow-up comments to pulsarkarthiktpr@gmail.com
OpenID//

//இனிமேல் அட்வைஸ் பண்ணுவீங்க ....:))//


காப்பி பேஸ்ட் பண்றவங்களுக்கு இனிமே 2000 ரூபாய் அபராதம் போடணும் போலயே...
//Mahan.Thamesh said...

இன்னைக்கு சூழ்நிலைல நாம பதிவெழுதுறோமோ இல்லையோ.. அடுத்தவன் என்ன எழுதுறான்.. அதுல என்ன குறை கண்டுபிடிக்கலாம், எப்படி மட்டம் தட்டலாம்னு யோசிச்சு பதிவு போட்றது ரொம்பவே முக்கியம். இதுக்கு தனியா கோச்சிங் க்ளாஸ் கூட யாரோ நடத்துறாங்கனு கேள்விப்பட்டேன்.

யாருங்க அது ? சொல்லவே இல்ல இதுக்கெல்லாம //


அட... கேள்விப்பட்டேங்க..
தெளிவா விசாரிச்சிட்டு சொல்றேன். நீங்களும் சேந்துடுங்க.
//உங்கள் தோழி கிருத்திகா said...

hello...mudhal thadavaya vanthen intha blogkku!!! wow....nalla ezhudharinga!!!!!oru chinna suggestion...medium speed internet conn irukkarathaala unga blog load aaga time edukkuthu.....mela potrukkara picture size ah korachu podungalen//


ஆலோசனைக்கு நன்றி தோழி..
கண்டிப்பாக செய்கிறேன்.
//மாணவன் said...

மேல இருக்குற படம் எதுக்கு?
ஒன்னும் வெளங்கலயே?? :)//


அதுக்கு தான் டிப்ஸ்லயே விளக்கம் குடுத்துட்டோம்ல..
//akulan said...


boss i what to write a blog which is about you...............//


ஆஹா.... எல்லாரும் இப்படி ஆரம்பிச்சுட்டீங்களா..
ம்ம்ம் எழுதுங்க எழுதுங்க..
//யாதவன் said...

நல்லா இருக்கு//


நன்றிங்க..
//பாரத்... பாரதி... said...

மிக நையாண்டியாக, பாலீசாக உங்களது ஆதங்கத்தை சொல்லிவிட்டீர்கள்..
அற்புதம்..//


கருத்துக்கும் வருகைக்கும் நன்றி பாரதி.
//ராஜகுரு said...

ஹே ஹே... ரொம்ப உதவியா இருந்துச்சி... :)//


அப்படியா???
சந்தோசமுங்க..
//logu.. said...

\\எதுவுமே தோணலனா, இந்த மாதிரி அட்வைஸ் பண்ணி டிப்ஸ் குடுத்து பதிவு போடலாம். (இப்ப எல்லாருக்கும் சந்தோசம் தானே??)\\

இல்ல.. கொல வெறியா இருக்கு.//


அது தாங்க எனக்கு வேணும்..
நன்றிங்க..
//middleclassmadhavi said...

பலே! :-))//


டாங்ஸ்ங்க...
//My days(Gops) said...

sareenga.. neenga sonna maadhiri'ey inimel follow pannuren:)//


ம்ம்ம் பண்ணுங்க..
அப்புறம் எங்கயோஓஓஓஓ போய்டுவீங்க பாருங்க..
//குடந்தை அன்புமணி said...

உண்மையாகவே பதிவர்களுக்கான டிப்ஸ் எனது வலைத்தளத்தில்...thagavalmalar.blogspot.com//


வருகைக்கும் கருத்துக்கும் (!!!) நன்றிங்க..
Lakshmi said…
ஆஹா, இப்படில்லாம் கூட பதிவு போடலாமா சே, இத்தனை நாளா தெரியாமப்போச்சே.
//இன்னைக்கு சூழ்நிலைல நாம பதிவெழுதுறோமோ இல்லையோ.. அடுத்தவன் என்ன எழுதுறான்.. அதுல என்ன குறை கண்டுபிடிக்கலாம், எப்படி மட்டம் தட்டலாம்னு யோசிச்சு பதிவு போட்றது ரொம்பவே முக்கியம். இதுக்கு தனியா கோச்சிங் க்ளாஸ் கூட யாரோ நடத்துறாங்கனு கேள்விப்பட்டேன். அதுனால அத மொதல்ல கத்துக்கணும்.//


கோச்சிங் கிளாஸ் அட்ரஸ் கிடைக்குமா!?
//Lakshmi said...

ஆஹா, இப்படில்லாம் கூட பதிவு போடலாமா சே, இத்தனை நாளா தெரியாமப்போச்சே.//


இப்ப தெரிஞ்சுகிட்டீங்களா??
ம்ம்ம் எழுத ஆரம்பிங்க..
//வால்பையன் said...

//இன்னைக்கு சூழ்நிலைல நாம பதிவெழுதுறோமோ இல்லையோ.. அடுத்தவன் என்ன எழுதுறான்.. அதுல என்ன குறை கண்டுபிடிக்கலாம், எப்படி மட்டம் தட்டலாம்னு யோசிச்சு பதிவு போட்றது ரொம்பவே முக்கியம். இதுக்கு தனியா கோச்சிங் க்ளாஸ் கூட யாரோ நடத்துறாங்கனு கேள்விப்பட்டேன். அதுனால அத மொதல்ல கத்துக்கணும்.//


கோச்சிங் கிளாஸ் அட்ரஸ் கிடைக்குமா!?//


அதை நடத்துபவரின் பெயர் “வா“விலோ “அ“விலோ ஆரம்பிக்கும் என்று நினைக்கிறேன்.. எதற்கும் சரியாகத் தெரிந்துகொண்டு சொல்கிறேன் நண்பரே..
என்னை பார்த்தால் குறை கண்டுபிடித்தே பெயர் வாங்கும் புலவன் போலவா தெரிகிறது!
//குடந்தை அன்புமணி said...

http://thagavalmalar.blogspot.com/2011/05/blog-post.html வாருங்கள்...இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.//


வருகைக்கு நன்றி நண்பரே..
கட்டாயம் வருகிறேன்.
//வால்பையன் said...

என்னை பார்த்தால் குறை கண்டுபிடித்தே பெயர் வாங்கும் புலவன் போலவா தெரிகிறது!//


உங்களை அப்படி யார் சொன்னது????
தவளை பற்றிய பழமொழி தான் ஞாபகத்திற்கு வருகிறது...
ஹய்யோ ஹய்ய்யோ...

அப்புறம் உங்களுக்கு அம்னீஷியா என்று கேள்விப்பட்டேனே... நலம்தானே??? எப்படியோ.. நலமாக இருந்தால் மகிழ்ச்சி தான்.

சமீபகாலமாக உங்கள் தளத்தில் புதிய பதிவுகளைப் பார்க்க முடிவதில்லையே...
தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே..


தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
ஹேமா said…
இந்திரா...நல்லாவே இருக்கு புத்திமதிகள்.திட்டு வாங்கினா உங்களைத்தான் காட்டிக்கொடுப்போம் சரியா...!
இந்திரா said…
//ஹேமா said...

இந்திரா...நல்லாவே இருக்கு புத்திமதிகள்.திட்டு வாங்கினா உங்களைத்தான் காட்டிக்கொடுப்போம் சரியா...!//


அய்யய்யோ.. ஆளை விடுங்க..

Popular posts from this blog

மரணவலி தரும் உன் மௌனம்..

நீ அழையாத என் கைபேசி..

பெண்களைக் கவர சில டிப்ஸ்