வெகுநேரம் பார்த்துக்கொண்டிருந்தேன் காதலில்லாத என் கைபேசியை.. . எழுத்துப் பலகைகள் தேயப்பெற்ற காலம்போய் எப்போதும் உறங்குகிறது.. நீ அழையாத என் பேசி. . எடுத்தெடுத்துப் பார்க்கிறேன் நம் பழைய குறுஞ்செய்திகளை.. . கவிதைகள் இல்லையெனினும் காதலின் அடையாளங்கள் அழகாய்.. . வினாடிகளையும் தோற்கடிக்கும் நம் அடுத்தடுத்த பதில் பறிமாற்றங்கள்.. ஒவ்வொரு நாளின் தொடக்கமும் முடிவும் முடிவில்லாமல்.. . நினைத்துப் பார்க்கிறேன்.. நேரமறியாத நள்ளிரவுகளில் காதுமடல் சுட்டதையும் கண்கள் உறக்கத்திற்கு சொருகியதையும் பொருட்படுத்தாது நீண்டுபோன நமக்கான உரையாடல்களை.. . சொல்ல மறந்துவிட்டேனென.. சொன்னது கேட்கவில்லையென.. இப்போதுதான் நடந்ததென.. யாரோ சொன்னதென.. எத்தனை எத்தனையோ சாக்குகள். நம் குரல் கேட்க ப்ரயோகித்தோம்.. . காத்திருப்பு ஒலியிருப்பின்.. ஒருவருக்கொருவர் செல்லமாய்க் கோபித்து சிரிக்காமல் சீண்டுவோம்.. சிணுங்கியபின் சிக்கிடுவோம்.. சமாதானம் எனும் சிறையில்.. . பேசிக்கொண்டே ஓர்முறை நானுறங்கிப்போக.. துண்டிக்க மனமில்லையென தொடர்ந்து கொஞ்சினாய் என் மௌனத்தை.. . உனக்குத் தெரியுமா.. உறங்கும் நடிப
Comments
அடுத்தவாட்டியாவது, ஆள நேர்ல பார்த்து சொல்லுங்க :))//
கண்டிப்பா உங்க ஆலோசனையை பின்பற்றுவேன்.. நன்றி
//கவிதைகாதலன்..
ஹேய்.. அட்டகாசமா இருக்கு..
நீங்க இத்தனை நாள் எழுதற கவிதைகள்'ல ஒரு கவிதைத்தனம் இருக்கும். ஆனா இதுல ஒரு ஃபீலிங் இருக்கு. படிச்ச உடனே "அட" போட வைக்குது இந்த உணர்வுகள். ரொம்ப நல்லா இருக்கு. இது போலவே தொடருங்கள்//
உங்கள் கருத்துக்கள் என்னை மேலும் எழுத தூண்டுகின்றன..
தொடர்ந்து உற்சாகபடுதுவதற்கு நன்றி நண்பரே..
போட்டோ ஒரு வேலை black and white ah் இருந்து இருக்குமோ?//
உங்களுக்கு மட்டும் எப்படி இப்படியெல்லாம் தோணுது?
அது வண்ணப்படம் தான் தலைவரே..