என் ஆன்மாவை ஆணிவேரோடு பிடுங்கி அழகு பார்த்திடும் உன் ஆணவத்தில் என் அனைத்து ஆரம்பங்களும் அடங்கித்தான் போயின.. . தனிமையெனும் தீவில் துன்புறுத்தியும் தொல்லைபடுத்தியும் தற்காலிகமான தற்கொலைக்குத் தூண்டும் உன் நினைவுகள்.. . நாட்கள் நிறைந்த நொடிகளும் வருடம் நிறைந்த நிமிடங்களுமாய் நகராது நோகடிக்கிறது நாசூக்காய்.. . உன்னை நினைத்தே நுரைத்துக் கிடக்கிறது என் நுரையீரல்.. . நினைவுகளை தானமாகத் தந்துவிட்டு நிதானமாய்க் கொன்று கொண்டிருக்கிறாய்.. . என் கட்டுக்கடங்காத பிரியங்களைக் கலைத்தும் தொலைத்தும் விளையாடும் உனக்கு கண்கள் மட்டுமா கருணையும் இல்லை. . மண்புழுவாய்த் துடிக்கும் என் மனதினுள் மயானம் அமைத்து மறவாமல் அடிக்கிறாய் உன் மௌனச் சவுக்கால்.. . பட்டும் படாமலுமான உன் பார்வை நகத்தினால் படுகாயப்படுத்துகிறாய் பாழாய்ப்போன என் இதயத்தை. . நிர்வாணமாய்த் திரியும் என் நிம்மதிகளுக்கும் நார் நாராய்க் கிழிந்த என் காதலுக்கும் நீண்ட துணை உன்னாலான என் ரணங்கள் தான். . பத்திரமாய் பத்திரப்படுத்துகிறேன் நீ தந்த வலிகளை. ஆறாத
Comments
அடுத்தவாட்டியாவது, ஆள நேர்ல பார்த்து சொல்லுங்க :))//
கண்டிப்பா உங்க ஆலோசனையை பின்பற்றுவேன்.. நன்றி
//கவிதைகாதலன்..
ஹேய்.. அட்டகாசமா இருக்கு..
நீங்க இத்தனை நாள் எழுதற கவிதைகள்'ல ஒரு கவிதைத்தனம் இருக்கும். ஆனா இதுல ஒரு ஃபீலிங் இருக்கு. படிச்ச உடனே "அட" போட வைக்குது இந்த உணர்வுகள். ரொம்ப நல்லா இருக்கு. இது போலவே தொடருங்கள்//
உங்கள் கருத்துக்கள் என்னை மேலும் எழுத தூண்டுகின்றன..
தொடர்ந்து உற்சாகபடுதுவதற்கு நன்றி நண்பரே..
போட்டோ ஒரு வேலை black and white ah் இருந்து இருக்குமோ?//
உங்களுக்கு மட்டும் எப்படி இப்படியெல்லாம் தோணுது?
அது வண்ணப்படம் தான் தலைவரே..