நீதானே என் பொன்வசந்தம் – இளைத்த(!!) ராஜா..



1980களில் இசையில் மகத்தான ஆதிக்கம் செலுத்தியவர் இசைஞானி இளையராஜா. இவருடைய ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு சிறப்பைப் பெற்றிருக்கும். நம்முடைய பிடித்த பாடல்களின் பட்டியலில் பெரும்பாலான இடங்களை இவருடைய பாடல்கள் பிடித்திருக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
அதெல்லாம் சரிதான்.. ரொம்ப நாளைக்குப்பிறகு இவருடைய இசையில் வெளிவரும் பாடல்களாச்சேனு ரொம்ம்ம்ப எதிர்பார்ப்புடன் நேத்து கேட்டேன்.
ம்ஹூம்.. ஏமாத்திட்டீங்க ராஜா சார். “I AM BACK’னு காலரைத் தூக்கிவிட்டுக்குற மாதிரி ஒரு பாடல் கூட உங்களோட சாயல்ல இல்ல. ஓவரா எதிர்பார்த்துகிட்டு இருக்குறதுனாலயே சொதப்பிடுறாங்களோ என்னவோ!!
“சாய்ந்து சாய்ந்து“ பாட்டு முதல் தடவை கேட்கும்போது ஏதோ மாதிரியிருந்தாலும் அடுத்தடுத்து கேட்கும்போது பிடிச்சமாதிரியிருக்கு. “பெண்கள் என்றால் பொய்யா“ பாட்டு ரொம்ம்பவே சுமாராயிருக்கு. (பொண்ணுங்களை குறை சொல்றதுனால) பசங்களுக்குப் பிடிக்கலாம். ஏன் யுவன்சங்கர் எந்தவொரு பாட்டையும் (ஒரேமாதிரி) எந்த உணர்ச்சியுமில்லாம மண்ணு மாதிரி பாடுறாருனுதான் தெரியல.
“முதல்முறை பார்த்த ஞாபகம்“ பாட்டுபாடின பொண்ணுக்கு நல்லா வாய்ப்பாடு ஒப்பிக்கத் தெரியும் போல.. அருமையா ஒப்பிச்சிருக்கு. நடுவுல படத்தோட தலைப்பு வரும்போதுதான் நமக்கு வேதனையா இருக்கு. இன்னும் பெட்டரா பண்ணியிருக்கலாம். “புடிக்கல மாமு“ பாட்டு நண்பர்களோட பாடுறது போல.. “ராஜா ராஜாதிராஜனிந்த ராஜா“ பாட்டுக்கு கிட்டக்கூட வரமுடியாது. ரெண்டாவதா தொடர்ந்து வர்ற “வீதி பத்தாதே“ங்குற மெட்டு கொஞ்சம் நல்லாயிருக்கு.
“காற்றைக் கொஞ்சம்“ பாட்டுல வாத்தியங்களோட அட்டகாசம் தாங்க முடியல. என்ன வரினு கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு வாசிச்சுத் தள்ளியிருக்காங்க. S.A.ராஜ்குமாரோட “லாலாலா“ங்குற ஹம்மிங் தான் ஞாபகத்துக்கு வருது. அந்தளவுக்கு கடுப்பேத்தியிருக்காங்க மை லார்ட்.. கார்த்திக் பாடியிருக்காராம். அடக்கொடுமையே!!
“வானம் மெல்ல கீழிறங்கி“ பாட்டு இளையராஜாவும் பாடியிருக்காரு. பியானோவா வயலினானு தெரியல, பாடுறவங்க கூடயே அதுவும் கத்துறதுனால சில சமயம் எரிச்சலாயிருக்கு. வொய் திஸ் கொலவெறி ராஜா சார்? “சற்று முன்பு“ பாட்டு சுமாராயிருக்கு. சரணத்தோட பின்பாதில வேற பொண்ணு பாடுனமாதிரி குரல் மாற்றம் தெரியுது. சூப்பராயிருக்குனு சொல்லமுடியலனாலும் ஏதோ கேக்கலாம்.
“என்னோடு வா வா“ கார்த்திக் குரல்ல இந்தப் பாட்டு மட்டும் ஒரு சின்ன ஆறுதல். இதுல மட்டும் தான் வாத்தியங்களை அடக்கி வாசிச்கிருக்காங்க, வரிகளையும் கவனிக்க முடியுது.
எட்டு பாட்டு கேட்டேன். ரெண்டு மட்டும் தான் சுமார். மத்த எல்லாத்துலயுமே ட்ரம்ஸ், பியானோ, வயலின்னு (குறிப்பிட்டு எதுனு தெரியல) ஏகபோகத்துக்கு வாசிச்சுத் தள்ளியிருக்காரு. தல வலிதான் மிச்சம். வழக்கு எண் 18/9ல வர்ற மாதிரி வாத்தியமே இல்லாம பாடியிருந்தாகூட தேவலாம்போல இருக்கு. கௌதம் மேனன் படத்துல இந்தப் பாடல்களை வச்சு காட்சிகள் கற்பனைக்கே வரமாட்டீங்குது. ம்ம் படம் வெளியானதும் பார்க்கலாம்.
நாம ஓவரா எதிர்பார்த்துட்டோமா.. இல்ல அவர் தப்புபண்ணிட்டாரானு யூகிக்க முடியல. இளையராஜா இசைனாலே ஒரு ரம்யம் இருக்கும். இந்தப் பாடல்கள்ல அது சுத்தமா மிஸ்ஸிங். என்ன படம்னு தெரியாம பாடல்களைக் கேட்டா சத்தியமா இளையராஜானு உணரவே முடியாது.
அடப்போங்க ராஜா சார்..
.
.

Comments

என்னங்க... இப்படி சொல்லிட்டீங்க...

சில பாட்டு(ம்) கேட்டவுடனே பிடிக்காது... கேட்க கேட்க பிடிக்கும்...
Unknown said…
This comment has been removed by the author.
Unknown said…
இதே உணர்வு தான் எனக்கும் அனைத்து பாடல்களையும் கேட்கும் போது ஏற்பட்டது..தினம் தினம் புது இசையமைப்பாளர்கள் உருவாகி கொண்டிருக்கிறார்கள், பலர் நல்ல இசையையும் கொடுக்கிறார்கள்..ராஜா சார் இப்படி சொதப்புவார் என எதிர்பார்க்கவே இல்லை...
ராஜா சாரின் சிறப்பு அவரின் பழைய பாடல்கள் இப்போதும் அதே சுகத்தைக் கொடுப்பது தான்...ஆனால் இந்தப் படத்தின் பாடல்கள் எவ்வளவு நாட்களுக்கு வாழப்போகிறது என தெரியவில்லை...
ஒரே ஒரு கருத்து...ஹாரிஸ் ஜெயராஜ், இசையமைத்திருந்தால், மற்ற கவுதம் சாரின் படங்களைப் போல் பெரிய வெற்றியடைந்திருக்கும் என தோன்றுகிறது...!!!
Unknown said…
அம்புட்டு மோசமாவா இருக்கு!..
CS. Mohan Kumar said…
Romba mosam illai. Padathil paartha pin kooda pidikka vaaippu irukku
அவ்ளோ மோசமாவா இருக்குது...!

சரி...சரி...

இன்னைக்கு ஆசிரியர் தினம் அப்படீன்னு நினைக்றேன்....

உங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்த... அட்லீஸ்ட் ஒரு வாத்தியாரைக்கூடவா பிடிக்காம போச்சு....
இன்னும் கேட்கல..

கௌதம் மேனன் படத்துல இந்தப் பாடல்களை வச்சு காட்சிகள் கற்பனைக்கே வரமாட்டீங்குது. ம்ம் படம் வெளியானதும் பார்க்கலாம்.

பார்ப்போம் !
Arunsiva said…
நிச்சயமா ரொம்ப ரொம்ப ரொம்ம்பவே எமாற்றம் . . .
Sorry Raja Sir,
we can't believe it.
Better Luck Next Time...
பாடல்கள் கேட்கவில்லை! கேட்டபிறகே என் கருத்து! நன்றி!

இன்று என் தளத்தில்
பழஞ்சோறு! அழகான கிழவி!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_5.html
Prem S said…
சாய்ந்து சாய்ந்து பாடல் மட்டும் தான் எனக்கு பிடித்தது ..
renga said…
ராஜாவின் சகாப்தம் முடிந்துவிட்டது.
ezilmaran said…
ராஜா என்றென்றும் இசை ராஜா ... அவரை போல ஆத்மாவை தொடும் இசையை யாரும் கொடுக்க முடியாது .. அவர் வாழும் காலத்தில் நாம் பிறந்ததற்கு பெருமை படுவோம் ..அவரின் திறமையை முழுமையாக நீங்கள் பயன் படுத்தி கொள்ளுங்கள் ...பாடல்களை,இசையை காட்சி படுத்துவதிலும் கவனம் செலுத்துங்கள் ..ஏனெனில் இளையராஜா அவர்கள் கொடுத்த சாகா வரம் பெற்ற எத்தனையோ பாடல்களின் படங்கள் சரியான திரைகதை,காட்சி அமைப்பு மற்றும் நடிகர்கள் ...இவைகளினால் தோல்வி அடைந்து உள்ளதை நீங்கள் கவனத்தில் கொள்ளுங்கள் ...இதற்கு உதாரணம் "நினைவெல்லாம் நித்யா" திரைப்படம். இசையும் கதையும் இரு கண்கள்
ezilmaran said…
இந்த ஆல்பம் முழுக்க முழுக்க Late 80-களின் பின்னணியில் , அந்தக்காலத்திய இசைப்பாங்கில் அமைக்கப்பட்டவை.இங்கு ஒலிப்பவை அனைத்தும் Mostly Jazz மற்றும் அளவான Rock மட்டுமே.வேறு எதுவும் கொடுக்கப்படவேயில்லை நமக்கு. இந்த ஆல்பம் கேட்குமுன்னர் இன்றைய HipHop/Techno வகையறாக்களை ஒதுக்கிவிட்டுக் கொஞ்சம் Bryan Adams –ன் Waking up the Neighbors , 18 Till I die மற்றும் MLTR- ன் Played on Pepper , Paint My Love போன்ற ஆல்பங்களை/பாடல்களைக் கொஞ்சம் கேட்டு உங்கள் Mood ஐ பின்னோக்கி இழுத்துச்சென்று வைத்துக் கொள்ளுங்கள்.( Linkin Park பக்கம் போயிடாதீங்க :-) ஏனெனில் ராஜாவே இப்படி ஒரு Mild Rock With Jazz இது வரை பண்ணதேயில்லை.

தீர்மானம் செய்து கொண்டு நம்மை 30 ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச்செல்லும் முயற்சியில் இம்முறை ராஜாவிற்கு எப்போதும் போல வெற்றிதான். முதலில் அத்தனை பாடல்களும் நம் பிடிக்குள் வரவில்லையாயினும் , கேட்கக்கேட்க இந்த வசந்தம் மனதினுள் புகுந்து இம்சை செய்தே தீரும் என்பது உறுதி, J பாடல்களிலிருந்து பாடகர்களின் குரலை நீக்கிவிட்டு வெறும் இசையாகக்கேட்டாலும் போதுமென்றே தோணுகிறது எனக்கு

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=21004:2012-09-04-02-44-10&catid=11:cinema-review&Itemid=129
எனக்கு சில பாடல்கள் பிடித்திருக்கின்றன.. தொடர்ந்து கேட்டுப் பாருங்கள்.. ஒரு வாரத்தில் ஓரிரு பாடல்கள் பிடிக்கலாம்!

***

ஆனாலும் பழைய ராஜா 'டச்' இல்லை என்றுதான் நினைக்கிறேன்!!

balakrishnan said…
nep paadalgal puduragam pola irukku.....
isai endru indru kerkum kandravikku idhu pudu anubavam..
nalla audio system moolam indha iasayin sirappai anubavikka mudiyum..
nep padalgal namma sinimavukkum ini pon vasanthamaga amaiyum...........
babu said…
Kandippaga neengal yellorum solvadu pol mosam ellai, innum sila murai kelungal, kandippaga pidikkum
நான் இன்னும் பாடல்களைக் கேட்கவில்லை
நானும் இளைய ராஜா அவர்களைப்
பொருத்தவரையில் தங்கள் மன நிலையில்
இருப்பவன்தான்.ஒருவேளை பாடல்கள்
ஏமாற்றமளித்தால் கொஞ்சம்
வருத்தப்படத்தான் செய்வேன்
இறுதிவரியில் உரிமையோடு அலுத்துக் கொண்டது
மிகவும் பிடித்திருந்தது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
அய்யய்யோ என்னங்க -- இப்படி சொல்லிட்டீங்க.
என் பையன் என்னைப் போட்டுத் தாளிச்சுருவானே
Jayadev Das said…
ரஹ்மான் வந்ததுக்கப்புறம், ஒரு பக்கம் மக்கள் ரசனை மாறிப்போச்சு, ராஜா அவுட் ஆஃப் பாஷன் ஆயிட்டாரு, இன்னொரு பக்கம் ராசாவே மனதளவில் பாதிக்கப் பட்டு முன்னர் போல இசையமைக்க முடியவில்லையோ என்னவோ. அவர் ராஜாவாக ஆக்கிரமித்திருந்த கால கட்டங்களில் பத்திரிகையாளர்கள் பேட்டிக்குக் கூட நெருங்க முடியாது, தொலைக்காட்சிக்கு நோ சான்ஸ். இப்போ இந்த படத்துக்கு கவுதம் மேனனோட மணிக்கணக்கா டி.வி யில பேசிகிட்டு இருக்காரு. நிலைமை எவ்வளவு மோசம்னு நாமே கற்பனை செய்து பார்த்துக் கொல்லலாம், மொத்தத்தில் கருவாடு மீனாகாது.........!!

\\“பெண்கள் என்றால் பொய்யா“ பாட்டு ரொம்ம்பவே சுமாராயிருக்கு. (பொண்ணுங்களை குறை சொல்றதுனால) பசங்களுக்குப் பிடிக்கலாம். \\ இதுக்கு கொஞ்சம் நம்ம கடைப் பக்கம் வந்திட்டு போங்க மேடம்!!

http://jayadevdas.blogspot.in/2012/09/18.html

Popular posts from this blog

மரணவலி தரும் உன் மௌனம்..

நீ அழையாத என் கைபேசி..

பெண்களைக் கவர சில டிப்ஸ்