ஆங்கோர் காதல்..!




வெகுநேரப் பேச்சிற்குப்பின்
கிளம்பிச்செல்ல எத்தனிக்கிறேன்..
விரல்கள் கோர்த்தபடி
விட்டகல மறுக்கிறாய்..!
விருட்சமாய் வளர்ந்திருப்பினும்
வேரூன்றித் துளிர் விடுகிறது
ஆங்கோர் காதல்..!!
.
 




விரல்கள் பிணைத்துக்கொள்வதைப் போல
அவ்வளவு எளிதாக இருப்பதில்லை...
பிணைத்த விரல்களிலிருந்து விடுவித்துச் செல்வது..!!
.

Comments

அருமை! அருமை! மெல்லிய காதலை அருமையாய் சொல்லியது கவிதை!
மனதை விடுவித்துச் செல்வது சிரமம் தான்...
அருமை அருமை
சமயங்களில் சிக்கிக் கொண்டதுபோல்
திணற அடிக்கவும் செய்கிறது
மனம் கவர்ந்த கவிதை
தொடர வாழ்த்துக்கள்

Popular posts from this blog

மரணவலி தரும் உன் மௌனம்..

நீ அழையாத என் கைபேசி..

பெண்களைக் கவர சில டிப்ஸ்