மரணவலி தரும் உன் மௌனம்..
என் ஆன்மாவை ஆணிவேரோடு பிடுங்கி அழகு பார்த்திடும் உன் ஆணவத்தில் என் அனைத்து ஆரம்பங்களும் அடங்கித்தான் போயின.. . தனிமையெனும் தீவில் துன்புறுத்தியும் தொல்லைபடுத்தியும் தற்காலிகமான தற்கொலைக்குத் தூண்டும் உன் நினைவுகள்.. . நாட்கள் நிறைந்த நொடிகளும் வருடம் நிறைந்த நிமிடங்களுமாய் நகராது நோகடிக்கிறது நாசூக்காய்.. . உன்னை நினைத்தே நுரைத்துக் கிடக்கிறது என் நுரையீரல்.. . நினைவுகளை தானமாகத் தந்துவிட்டு நிதானமாய்க் கொன்று கொண்டிருக்கிறாய்.. . என் கட்டுக்கடங்காத பிரியங்களைக் கலைத்தும் தொலைத்தும் விளையாடும் உனக்கு கண்கள் மட்டுமா கருணையும் இல்லை. . மண்புழுவாய்த் துடிக்கும் என் மனதினுள் மயானம் அமைத்து மறவாமல் அடிக்கிறாய் உன் மௌனச் சவுக்கால்.. . பட்டும் படாமலுமான உன் பார்வை நகத்தினால் படுகாயப்படுத்துகிறாய் பாழாய்ப்போன என் இதயத்தை. . நிர்வாணமாய்த் திரியும் என் நிம்மதிகளுக்கும் நார் நாராய்க் கிழிந்த என் காதலுக்கும் நீண்ட துணை உன்னாலான என் ரணங்கள் தான். . பத்திரமாய் பத்திரப்படுத்துகிறேன் நீ தந்த வலிகளை. ஆறாத
Comments
ஒரு சில தட்டச்சு பாடசாலைகள் நிரம்பி இருக்கிறது
மண்பானை தண்ணீர் (இது இப்போ மிகவும் அதிகம்)
பல்லாங்குழி கிராமங்களில் இருந்துகொண்டுதான் இருக்கிறது
அட டா நான் இத்தனை நாளா போஸ்ட் படிக்குறேன் சீ பாக்குறேன் ஆனா இந்த கருத்தை பார்த்து இருந்தா உங்க இஷ்டம் போல செய்ஞ்சு இருப்பேன் :)
ம்.
மாற்றம் ஓன்று தான் மாறாததோ.
* போஸ்ட்கார்ட்
* ப்ளாப்பி
அந்த லிஸ்ட்ல இன்னொன்னையும் சேர்த்துக்குங்க...
*கமெண்டுக்கு இந்திரா ரிப்ளே போடுறது.ஹி..ஹி..
நட்புடன்
கவிதை காதலன்
* போஸ்ட்கார்ட்
* ப்ளாப்பி
அந்த லிஸ்ட்ல இன்னொன்னையும் சேர்த்துக்குங்க...
*கமெண்டுக்கு இந்திரா ரிப்ளே போடுறது...///
Yes..!
Yes....!
Yes.......!
நியாயம் தான் முரளி சார். உங்கள் கோபம் புரிகிறது.. என் சமீபகால பதிவுகளைப் பார்த்தாலே உங்களுக்கே புரியும். எனக்கு கொஞ்சம் வேலைப் பளு அதிகம் என்று.. டச் விட்றக் கூடாதுங்குறதுக்காக அவ்வப்போது பதிவுகளை இடுகிறேன்.
மற்றபடி பதில் போடுவதில்லை என்ற குறை எனக்கு எப்போதும் உண்டு. விரைவில் மீண்டு(ம்) பழையபடி பதிவுகளும் பின்னூட்டங்களுக்காக பதில்களும் தொடரும்..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முரளி சார்..
(புரிந்துகொள்வீர்கள் என்ற நம்பிக்கையில்..)
நட்புடன்
---------- இந்திரா
கருத்துக்களைத் தெரிவித்த நண்பர்களுக்கு நன்றிகள்..
OK....!
I Know...!