செல்போன கண்டுபிடிச்சவன் நாசமாப்ப்ப்ப்போக...


ஒரு சின்ன ப்ளாஷ்பேக்.. (கொசுவத்தி சுத்துமே). சில வருஷத்துக்கு முன்னாடி எனக்கொரு ப்ரெண்ட் இருந்தான். அவன் என்ன விட ஜூனியர். நா ஒரு ஐ.டி கோர்ஸ் பண்ணிட்டு இருந்தேன். அதுல அவனுக்கு ஒரு ப்ராஜக்ட் பண்ணிக்குடுத்தேன். அதுமூலமா தான் நாங்க ப்ரெண்ட்ஸ் ஆனோம். அவன் ப்ளஸ் டூ முடிச்சிட்டு மெடிக்கல் காலேஜ்ல சீட் வாங்க முயற்சி பண்ணிகிட்டு இருந்த நேரம் அது.

அடிக்கடி எனக்கு ஃபார்வர்ட் மெசேஜ் அனுப்புவான். எப்பவாவது போன் பண்ணுவான்.. பெருசா எதுவும் பேசிக்க மாட்டோம். ஒரு நாள் போன் பண்ணி மெடிக்கல்ல சீட் கெடச்சிடுச்சுன்னும் வேற ஊர்ங்குறதுனால ஹாஸ்டல்ல தங்கி படிக்கப் போறதாவும் சொன்னான். நானும் அவன வாழ்த்தினேன். கௌம்புறப்ப போன் பண்ணி நல்லா படி, உடம்ப பாத்துக்க“னு வழக்கமான அட்வைஸ் எல்லாம் பண்ணினேன்.

ரெண்டு நாள் கழிச்சு போன் பண்ணி ஓஓஓஓ“னு அழுதான். என்னடானா ஓவரா ராக்கிங் பண்றாங்க.. பயமா இருக்குனு புலம்பினான். காலேஜ்னா அப்டி தான்டா இருக்கும். பத்து நாள் போனா எல்லாம் சரியாய்டும்னு சொன்னேன். சின்ன பையனாச்சே.. அப்பா அம்மாவ விட்டு தனியா வேற இருக்கானேனு அப்பப்ப போன் பண்ணி எப்டி இருக்கான்னு விசாரிச்சுக்குவேன். அவனும் டெய்லி காலேஜ்ல நடந்தத என்னோட பகிர்ந்துக்குவான்.

ஒரு நாள் போன் பண்ணி “எங்க காலேஜ்ல லாவண்யானு ஒரு பொண்ணு சேர்ந்துருக்கா.. ரொம்ப அழகா இருக்கா..“னு சொன்னான். நானும் “ஓவரா சைட் அடிக்காதடா.. படிக்கிறதுல கவனமா இரு“ன்னு சொன்னேன். மறுநாள் அவளோட டிரெஸ் இன்னைக்கு அழகா இருந்தது. அவ என்னப் பாத்து சிரிச்சா“னு சொன்னான். ஆஹா.. பயபுள்ள ஆரம்புச்சுட்டான்னு நெனச்சுகிட்டேன்.

இது அதோட நிக்கல. டெய்லி எனக்கு போன் பண்ணினான். அந்த லாவண்யா என்ன டிரஸ் போட்ருந்தா, அவ எப்டி பேசினா, சிரிச்சா.. அப்டி இப்டினு ஒப்பிக்க ஆரம்பிச்சுட்டான். ஒரு மணி நேரம் நாங்க பேசினா அதுல ஆரம்பத்துல ரெண்டு நிமிசம் தான் நா பேசுவேன். அதுக்கப்புறம் எல்லாமே அவனோட சுய புராணமா தான் இருக்கும்.

ஒரு நாள் காலங்காத்தால 5 மணிக்கு போன் செஞ்சு “லாவண்யாவ நா லவ் பண்றேன், அவகிட்ட இன்னைக்கு ப்ரபோஸ் பண்ண போறேன் இந்து“னு சொன்னான். எனக்கு செம டென்சனாய்டுச்சு. 19 வயசு தான் ஆகுது அதுக்குள்ள என்னடா லவ்வு?? ஏதோ சைட் அடிச்சியா, பேசாம படிச்சியானு இல்லாம ஏண்டா லவ்வெல்லாம்? அதுக்கு இது வயசில்ல, ஒழுங்கா படிக்கிற வழியப் பாருடா“னு திட்டினேன். (தூக்கத்த கெடுத்துட்டானே பாவி..). அவனோ நா சொல்றத காதுல வாங்குற மாதிரியே தெரில. அன்னைக்கு சாயந்திரம் போன் பண்ணி “லவ்வ சொல்லிட்டேன் அவளும் ஓகே சொல்லிட்டா“னான். என்னவோ பண்ணித்தொலைனு விட்டுட்டேன்.

ஒரு பத்து நாள் எனக்கு போனே பண்ணல. நானும் பெருசா கண்டுக்கல. பெரியமனுசன் லவ் பண்றான்ல.. கடலை போடவே நேரம் சரியாயிருக்கும்னு நமக்கு தான் தெரியுமே.. நானும் அப்பாடானு என் வேலையப் பாத்துகிட்டிருந்தேன். பதினோராவது நாள் போன் பண்ணி மறுபடியும் ஓஓஓஓஓனு அழுதான். லாவண்யா யார்கூடயோ போன்ல பேசுறாளாம், எப்பப் பாத்தாலும் வெய்ட்டிங்லயே வருதாம். சந்தேகமா இருக்காம். அதுனால அவங்களுக்குள்ள சண்டையாம். புலம்பித் தள்ளிட்டான். அதுல இருந்து போன் பண்ணினாலே ஒரே புலம்பல் தான். இவனுகளெல்லாம் லவ் பண்ணலேன்னு யாரு அழுதா? அப்டியே பண்ணித்தொலைஞ்சாலும் மத்தவங்கள ஏன் தான் டார்ச்சர் பண்றானுங்களோ?

ஒரு கட்டத்துக்கு மேல எனக்கு வெறுப்பாய்டுச்சு. அதுனால அவனுக்கு போன் பண்ணி தெளிவா பேசினேன். அட்வைஸ் பண்ணேன். அவன் கேக்குறதாவே இல்ல. இது வயசில்ல, லவ்வெல்லாம் வேணாம், படிடானு சொன்னேன். ம்ஹூம்.. ஒண்ணும் நடக்கல. பதிலுக்கு என் கூட சண்டை போட்டுட்டான். நா லவ் பண்றேனு உனக்குப் பொறாமைனு சொல்லிட்டான். (ம்கும் இதப் பாத்துப் பொறாமை வேற படனுமாக்கும்). இது சரிப்படாது.. நீ எக்கேடோ கெட்டுப் போ.. எனக்கு போன் பண்ணிப் புலம்பாத.. என்னால முடில“னு சொன்னேன். (எத்தன நாள் தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது? காதுலயிருந்து ரத்தம் தான் வருது) அவனும் சரினு சொன்னான். அதுல இருந்து போன் பண்ணவே இல்ல.

கொஞ்ச நாள் கழிச்சு என் போன் தொலைஞ்சு போச்சு. அவன் நம்பர மிஸ் பண்ணிட்டேன். ரெண்டரை வருஷமாய்டுச்சு. சுத்தமா பேசல. (கொசுவத்தி தீந்துபோய்டுச்சுங்க..)

ரெண்டு நாளைக்கு முன்னாடி ஆர்குட்ல அவனோட ப்ரொஃபைல் பாத்தேன். அட.. நம்ம பயலாச்சேன்னு சந்தோசம் வந்திடுச்சு. அதுல அவன் நம்பர் இருந்தது. உடனே அவனுக்கு போன் பண்ணிப். பேசினேன். சகஜமான விசாரிப்புகள் நடந்துச்சு. முணாவது வருஷம் படிக்கிறானாம். என்கூட பேசாம இருந்தது கஷ்டமாயிருந்தா சொன்னான். காலேஜ் எப்டி போகுதுடா, லாவண்யா எப்டி இருக்கா“னு கேட்டேன். இது தான் டாக்டர் நடந்தது.. விதி மறுபடியும் விளையாட ஆரம்பிச்சது.

“ஆறு மாசமா லாவண்யா கூட பேசுறதில்ல. அவளுக்கு வேற பாய்ஃப்ரெண்ட் கெடச்சுட்டான். என் லவ் தோத்துடுச்சு“னு சொன்னான். எனக்கே கேக்குறதுக்கு கஷ்டமாய்டுச்சு. சரி விடுடா.. ஃபீல் பண்ணாத. நல்லா படினு சொன்னேன். (அப்பாடா.. இனிமே போன் பண்ணி டார்ச்சர் பண்ண மாட்டான்னு நம்ம்ம்ம்ம்பி அட்வைஸ் பண்ணேன்).

“திவ்யானு ஒரு பொண்ணு.. என் கூட படிக்கிறா இந்து. எனக்கு அவள பிடிச்சிருக்கு. இப்பெல்லாம் அவள பாத்துகிட்டே இருக்கணும் போல இருக்கு. இது தான் உன் நம்பரா? நைட் போன் பண்றேன். உன்கிட்ட நெறைய பேசணும்னு சொல்லிட்டு கட் பண்ணிட்டான்.

அடக்கண்றாவியே.. மறுபடியும் மொதல்ல இருந்தா?????

தக்காளி.. எவன்டா இந்த செல்போன கண்டுபிடிச்சது???

நாசமாப்ப்ப்ப்ப்போக....

.

.

Comments

இன்னிக்கு வடை எனக்கு...
essuusme madam. enakkum azhanum pola irukku. unggka number kidaikkumaa?
//கொஞ்ச நாள் கழிச்சு என் போன் தொலைஞ்சு போச்சு. அவன் நம்பர மிஸ் பண்ணிட்டேன். ரெண்டரை வருஷமாய்டுச்சு. சுத்தமா பேசல. (கொசுவத்தி தீந்துபோய்டுச்சுங்க..)//

ரொம்ப நல்லாயிருக்கு...

வாழ்த்துக்கள்.
காதலிக்கறவனுக்க நண்பனா இருந்தா இதை எல்லாம் அனுபவச்சுத்தான் ஆகனும்...
:)))

சீக்கிரமே இந்த செல்போனும் காணாம போக வாழ்த்துகள் :)
உங்க தலைப்பு செல்போன் கண்டுபிடிச்சவன் நாசமாக போக என்பது.
செல்போன் பேசுறவன் நாசமாக போக ன்னு இருந்தா சரியா இருக்கும்.
ஆர்குட்டை எவன்டா கண்டுபிடிச்சான்?னு உங்க தார்மீக கோபத்தை வெளிப்படுத்தி இன்னொரு பதிவும் போடலாமே! :)
////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
essuusme madam. enakkum azhanum pola irukku. unggka number kidaikkumaa?////


ஹி ஹி ஹி....

அம்ணி, ஜூப்பரு......
//சங்கவி said...

இன்னிக்கு வடை எனக்கு...//

வடை வாங்குறது இருக்கட்டும். போஸ்ட் முழுசா படிக்கணும் சொல்லிப்புட்டேன்
//இரவு வானம் said...

:-))))))))))//



:)))))))))))))))))

நாங்களும் ஸ்மைலி போடுவோம்ல..
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

vadai poche//


ஹாஹாஹா
அசிங்கப்பட்டாரு ஒருத்தரு..
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

essuusme madam. enakkum azhanum pola irukku. unggka number kidaikkumaa?//

எதுக்கு??
உங்க புலம்பல கேக்குறதுக்கா???
நா இந்த ஆட்டைக்கே வரலப்பா..
//வெட்டிப்பேச்சு said...

//கொஞ்ச நாள் கழிச்சு என் போன் தொலைஞ்சு போச்சு. அவன் நம்பர மிஸ் பண்ணிட்டேன். ரெண்டரை வருஷமாய்டுச்சு. சுத்தமா பேசல. (கொசுவத்தி தீந்துபோய்டுச்சுங்க..)//

ரொம்ப நல்லாயிருக்கு...

வாழ்த்துக்கள்.//


அட ஏங்க நீங்க வேற..
நானே நொந்து போயிருக்கேன்.
செல்போன் சத்தம் கேட்டாலே பயமா இருக்கு..
//☀நான் ஆதவன்☀ said...

:)))

சீக்கிரமே இந்த செல்போனும் காணாம போக வாழ்த்துகள் :)//

அட.. இது நல்லா இருக்கே..
பதிலுக்கு உங்க செல்போன் புடுங்கிடுவேன் ஆமா...
I must not have been missed your blog.But what else. its ok now.
I like the sarcasm in your writings.
keep it up.
Arun Prasath said…
அப்டியே பண்ணித்தொலைஞ்சாலும் மத்தவங்கள ஏன் தான் டார்ச்சர் பண்றானுங்களோ?//

நீங்க என்ன கிண்டல் பண்ணலையே
//தமிழ் உதயம் said...

உங்க தலைப்பு செல்போன் கண்டுபிடிச்சவன் நாசமாக போக என்பது.
செல்போன் பேசுறவன் நாசமாக போக ன்னு இருந்தா சரியா இருக்கும்//

அட.. இது கூட நல்லாயிருக்கே..
உங்களை நிம்மதியா தூங்க விட்டுடுவோமா??
திவ்யா இல்லைன்னா ஒரு த்ரிஷா..
அந்த ஜீவனோட மனக்குமுறல்களை சரியா புரிஞ்சுக்க முடியாத உங்களுக்கு கருடபுராணத்தின் படி கவாபிலிகூபம் தண்டனை கொடுக்கபப்டும்..
sakthi said…
கவிதை காதலன் said...

அந்த தண்டனை மிக கொடூரமா இருக்கும்.. ஒரு வாரம் ஃபுல்லா காவலன் படத்தை பார்க்கணும்.... என்ன ஓகேவா

கவிதை காதலா ஏன் இந்த கொலைவெறி
sakthi said…
செல்போன்ல இப்படி கூட பிரச்னை வருமா ::)))

பாவம்ங்க நீங்க :(
அந்த தண்டனை மிக கொடூரமா இருக்கும்.. ஒரு வாரம் ஃபுல்லா காவலன் படத்தை பார்க்கணும்.... என்ன ஓகேவா?
30 ஆவது வடை..
//தக்காளி.. எவன்டா இந்த செல்போன கண்டுபிடிச்சது???//

மார்ட்டின் ஃகூப்பர்(1971) இவர்தாங்க செல்போன கண்டுபிச்சது...

ஹிஹிஹி...

மிகவும் சுவாராசியமாக பதிவு செய்துள்ளீர்கள் அருமை

தொடருங்கள்......
sakthi said…
கவிதை காதலன் said...

அந்த ஜீவனோட மனக்குமுறல்களை சரியா புரிஞ்சுக்க முடியாத உங்களுக்கு கருடபுராணத்தின் படி கவாபிலிகூபம் தண்டனை கொடுக்கபப்டும்..

அய்யோ பதிவுலகத்தில் கூட அன்னியன் தொல்லையா:)
Balaji saravana said…
ரைட்டு அடுத்த ரவுண்டு ஆரம்பமா? :)
//கக்கு - மாணிக்கம் said...

I must not have been missed your blog.But what else. its ok now.
I like the sarcasm in your writings.
keep it up.////

Comedy comedy
அக்கா போயின் தங்கை
////மார்ட்டின் ஃகூப்பர்(1971) இவர்தாங்க செல்போன கண்டுபிச்சது...////

அருமை... நன்றி மாணவன்...
சகோதரம்... அனபவித்து எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.

நனைவோமா ?
siva said…
எந்த ப்ளாக் எவன் கொண்டு பிடிச்சான்
அவன் நல்ல இருக்கணும்...

இருந்தாலும் உங்களுக்கு நல்ல மனசுங்க
அதனால வடை எனக்குதான்
அன்பின் இந்திரா - செல் போன என்ன செய்யும் - அந்தப் பயலத் திட்ட வேண்டியது தானே ! சூப்பர் இடுகை - நல்லாவே கொசு வத்தி சுத்தியாச்சு - வாழ்க ! நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
தோழி, என்னிடம் நேற்று இந்த நண்பரை பற்றித்தான் சொன்னீர்களா ...

உங்க தொடர்பு இலக்கம் கொடுக்க முடியுமா...

என் அலுவலகத்தில் இன்றைக்கு ஒரு பொண்ணு வேலைக்கு சேர்ந்து இருக்கிறாள்... நம்ம ஊர்கார பொண்ணு... மற்றவை செல்போனில்... நம்பரை கொடுங்க...
//கக்கு - மாணிக்கம் said...

I must not have been missed your blog.But what else. its ok now.
I like the sarcasm in your writings.
keep it up.//

நன்றிங்க.. (ஹி ஹி ஹி)
//Arun Prasath said...


நீங்க என்ன கிண்டல் பண்ணலையே//

சேச்சே.. அதெல்லாம் இல்லங்க..
அதுக்கு தனியா ஒரு பதிவு வரும் கவலைப்படாதீங்க..
ரொம்ப நல்லா இருந்தது..
//கவிதை காதலன் said...

அந்த ஜீவனோட மனக்குமுறல்களை சரியா புரிஞ்சுக்க முடியாத உங்களுக்கு கருடபுராணத்தின் படி கவாபிலிகூபம் தண்டனை கொடுக்கபப்டும்..
அந்த தண்டனை மிக கொடூரமா இருக்கும்.. ஒரு வாரம் ஃபுல்லா காவலன் படத்தை பார்க்கணும்.... என்ன ஓகேவா?//

காவலனுக்கு கவாபிலிகூபம்னு கூட சொல்லலாமா???
ஐயயோ.. இப்படியெல்லாம் தண்டனை சொல்லி பயமுறுத்தாதீங்க..
//Balaji saravana said...

ரைட்டு அடுத்த ரவுண்டு ஆரம்பமா? :)//


இங்க யாருங்க சரக்கடிக்கிறது????
//sakthi said...

செல்போன்ல இப்படி கூட பிரச்னை வருமா ::)))

பாவம்ங்க நீங்க :(//


உங்களுக்காவது புரியுதே..
//மாணவன் said...

மார்ட்டின் ஃகூப்பர்(1971) இவர்தாங்க செல்போன கண்டுபிச்சது...//

ம்கும் ரொம்ம்ம்ப முக்கியம்..
//ம.தி.சுதா said...

சகோதரம்... அனபவித்து எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்...//

ஆமாங்க ரொம்ப நொந்துபோயிட்டேன்
//LK said...

அக்கா போயின் தங்கை//

அவங்க அக்கா தங்கையா?? சொல்லவேயில்ல???
//siva said...

எந்த ப்ளாக் எவன் கொண்டு பிடிச்சான்
அவன் நல்ல இருக்கணும்...

இருந்தாலும் உங்களுக்கு நல்ல மனசுங்க
அதனால வடை எனக்குதான்//

உங்க வாழ்த்துக்கு நன்றிங்க..
அதெல்லாம் சரி.. எப்ப வந்தாலும் வடை கிடைக்கும்னு யாருங்க சொன்னது???
//தஞ்சை.வாசன் said...

தோழி, என்னிடம் நேற்று இந்த நண்பரை பற்றித்தான் சொன்னீர்களா ...

உங்க தொடர்பு இலக்கம் கொடுக்க முடியுமா...

என் அலுவலகத்தில் இன்றைக்கு ஒரு பொண்ணு வேலைக்கு சேர்ந்து இருக்கிறாள்... நம்ம ஊர்கார பொண்ணு... மற்றவை செல்போனில்... நம்பரை கொடுங்க...//

ஏனுங்க.. உங்க போதைக்கு நாங்க தான் ஊறுகாயா???
//cheena (சீனா) said...

அன்பின் இந்திரா - செல் போன என்ன செய்யும் - அந்தப் பயலத் திட்ட வேண்டியது தானே ! சூப்பர் இடுகை - நல்லாவே கொசு வத்தி சுத்தியாச்சு - வாழ்க ! நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//

நன்றி சார்..
கருத்துக்கும் வருகைக்கும்.
//சந்தோஷ் = Santhosh said...

ரொம்ப நல்லா இருந்தது..//


நன்றி சந்தோஷ்..
///ஏதோ சைட் அடிச்சியா, பேசாம படிச்சியானு இல்லாம ஏண்டா லவ்வெல்லாம்? ///

அட அட பின்றீங்க போங்க :)

/// தக்காளி.. எவன்டா இந்த செல்போன கண்டுபிடிச்சது???

நாசமாப்ப்ப்ப்ப்போக.... ///

ரொம்ப நொந்துட்டீங்களோ (யாருக்கு தெரியும் இங்க கொசுவத்திய இப்டி சுத்திட்டு அங்க என்ன நடக்குதோ :) )
ஜில்தண்ணி - யோகேஷ் said...


ரொம்ப நொந்துட்டீங்களோ (யாருக்கு தெரியும் இங்க கொசுவத்திய இப்டி சுத்திட்டு அங்க என்ன நடக்குதோ :) )//


இதுல ஏதோ உள்ளர்த்தம் இருக்குற மாதிரி தெரியுதே...
......ன்னு ஒரு பொண்ணு என்கூட படிக்கிறா, இப்பல்லாம்...சரி சரி மிச்சத்த போன்ல சொல்றேன்.
//// இதுல ஏதோ உள்ளர்த்தம் இருக்குற மாதிரி தெரியுதே... ///


ஆமாங்க சும்மா எதையாவது கொளுத்தி போடலாமேன்னு தான் :)
karthikkumar said…
ஒரு மணி நேரம் நாங்க பேசினா அதுல ஆரம்பத்துல ரெண்டு நிமிசம் தான் நா பேசுவேன். அதுக்கப்புறம் எல்லாமே அவனோட சுய புராணமா தான் இருக்கும்///
எனன் பண்றதுங்க ரொம்ப கஷ்டம்தான். சரி சரி அழுவாதீங்க.
எலி மாதிரி நீங்களா தேடிப்போய் வலைல மாட்டிட்டு... செல் போனை திட்டுறீங்களா....


உங்க பிரெண்ட் உங்களை இன்னும் நல்லா மொக்கை போடனும்னு பிரார்திக்கிறேன்
karthikkumar said…
ஸ்மைலி மட்டும் போட்றவங்களுக்கு 1000 ரூபாய் அபராதம்.. சொல்லிப்புட்டேன்.///

இந்த மாதிரி மெரட்டுனா என்ன பண்றது :))
karthikkumar said…
தக்காளி.. எவன்டா இந்த செல்போன கண்டுபிடிச்சது???

நாசமாப்ப்ப்ப்ப்போக...//

நீங்க ஏங்க டென்சன் ஆகுறீங்க உங்க வீட்ல மிக்சி இருக்கா இருந்துதுன்னா செல்போன அதுல போட்டு மிக்சிய ஆன் பண்ணிடுங்க. தொல்லை ஒழிஞ்சுது. (குறிப்பு உங்க வீட்ல மிக்சி இல்லைனாலும் பக்கத்துக்கு வீட்ல கேளுங்க)
ஹ ஹ...செம க்ளாஸ் இந்திரா...அந்த பைனல் டச் தான் செம செம....நல்ல இருக்கு narration !(நம்ம ஊருல அதான் ரொம்ப கலக்கல்..) :)))
logu.. said…
ha..ha... enna oru kolaveri?

Polachukuveenga..
logu.. said…
ada paavame... vada poche.. tooo lattttta?.

mmm.. inniku sangavi veetuku poi aattaiya potravendiyathuthan..
//19 வயசு தான் ஆகுது அதுக்குள்ள என்னடா லவ்வு?? ஏதோ சைட் அடிச்சியா, பேசாம படிச்சியானு இல்லாம ஏண்டா லவ்வெல்லாம்?//

ஓ....வாட் எ கேரிங் பிரண்ட். 19 வயசு பையனுக்கு இப்டி புத்தி சொல்ற மாதிரி ஒரு நல்ல கேர்ள் பிரண்ட் கெடச்சா......வெளங்கிரும்....
//அதுல அவனுக்கு ஒரு ப்ராஜக்ட் பண்ணிக்குடுத்தேன்.//

இது ரொம்ப முக்கியம்................. இடம் கெடச்சா உடனே "பப்ளிகுட்டி" பண்ணவேண்டியது
//அதுல அவன் நம்பர் இருந்தது. உடனே அவனுக்கு போன் பண்ணிப். பேசினேன்.//

சபாஷ் இந்திரா..... சொந்த செலவில் சூன்யம் வைத்துக்கொள்வதில் உன்னை மிஞ்ச யாருமில்லை என மறுபடியும் நிருபித்து விட்டாய்....
// நா லவ் பண்றேனு உனக்குப் பொறாமைனு சொல்லிட்டான்.//

:)))))))))) க.க.க.போ.... :))))))))))))))))))))
tamil blogs said…
தமிழ் வலைப்பூக்கள் உங்களுக்கான புதிய‌த் தளம் உங்கள் படைப்புக்களை இங்கே பகிர்ந்துக்கொள்ளுங்கள்.எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://tamilblogs.corank.com/
செம காமெடி :) ஆனா தலைப்பு ஒரு மாதிரி உறுத்தாலாயிருந்தது இந்திரா..:)
மறுபடியும் ஆரம்பத்திலேருந்தா... !!!!!!!!!!!!!!!
vinu said…
iyaaaaaaaaaaaaaaaaaaaa me the 75thuuuuuuuu
vinu said…
அடக்கண்றாவியே.. மறுபடியும் மொதல்ல இருந்தா?????



ripittttttttttttttu
vinu said…
அடக்கண்றாவியே.. மறுபடியும் மொதல்ல இருந்தா?????



ripittttttttttttttu
vinu said…
அடக்கண்றாவியே.. மறுபடியும் மொதல்ல இருந்தா?????



ripittttttttttttttu
vinu said…
அடக்கண்றாவியே.. மறுபடியும் மொதல்ல இருந்தா?????



ripittttttttttttttu
அரசன் said…
ஹ ஹ ஹ ஹ ஹ ஹ....

நல்லா இருக்குங்க ...
வாழ்க வாழ்க செல்போன் சேவை. இல்லேனா எப்படி இந்த மாதிரி பதிவு எழுதி சிரிக்க வைக்கிறதாம் ?
saththiyamaa nan kandu pidikkalai.
மேடம்ஜி மேடம்ஜி....எனக்கும் ரெண்டு வாரமா லவ் பெயிலியர்..... கொஞ்சம் உங்க நம்பர் கொடுத்து உதவுறீங்களா?
Chitra said…
காதில் செல் போன் படம் - மிரட்டல்!
உங்கள் பதிவை வாசித்து விட்டு சிரித்து கொண்டு இருக்கிறேன். கண்டு பிடிச்சவன் காதில், செல் போன் மாட்டி விட்டுருவேன் என்று நல்லா மிரட்டுறீங்களே!
தமிழ் திரட்டி உங்களுக்கான புதிய‌த் தளம் உங்கள் படைப்புக்களை இங்கே பகிர்ந்துக்கொள்ளுங்கள்.எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://tamilthirati.corank.com/
அந்த பையனுக்கு ஒருவித மனநோய் இருக்கிறது... மேலும் அவன் உங்களுடைய அன்புக்காக ஏங்குகிறான்... பதிவு போட்டு காமெடி செய்யும் விஷயமல்ல... கொஞ்சம் சீரியசாக சிந்திக்கவும்... முடிந்தால் அவன்டுய பெற்றோருக்கு தெரியப்படுத்தவும்...
1000 அபராதம் கட்டனுமா?ஹா ஹா ஹா நாங்க செல் பில்லே கட்டாதவங்க
வைகை said…
ஒங்க நம்பர்ல இருந்தே அவனுக்கு போன் பன்னி நம்பர மாத்திட்டேன்னு சொல்லிருங்க!
வைகை said…
பன்னிக்குட்டி ராம்சாமி said...
மேடம்ஜி மேடம்ஜி....எனக்கும் ரெண்டு வாரமா லவ் பெயிலியர்..... கொஞ்சம் உங்க நம்பர் கொடுத்து உதவுறீங்களா?////////


Me too!! my 25th love oothikichu!!
enakkum kodunga medamji!
//சைவகொத்துப்பரோட்டா said...

......ன்னு ஒரு பொண்ணு என்கூட படிக்கிறா, இப்பல்லாம்...சரி சரி மிச்சத்த போன்ல சொல்றேன்.//

அண்ணாத்தை... யூ டூ????
//அருண் பிரசாத் said...

எலி மாதிரி நீங்களா தேடிப்போய் வலைல மாட்டிட்டு... செல் போனை திட்டுறீங்களா....
உங்க பிரெண்ட் உங்களை இன்னும் நல்லா மொக்கை போடனும்னு பிரார்திக்கிறேன்//


என்னா ஒரு வில்லத்தனம்????
//ஜில்தண்ணி - யோகேஷ் said...


ஆமாங்க சும்மா எதையாவது கொளுத்தி போடலாமேன்னு தான் :)//


உங்க நல்ல்ல்ல்ல எண்ணம் புரியுதுங்க..
//karthikkumar said...

ஸ்மைலி மட்டும் போட்றவங்களுக்கு 1000 ரூபாய் அபராதம்.. சொல்லிப்புட்டேன்.///

இந்த மாதிரி மெரட்டுனா என்ன பண்றது :))//


வேற என்ன பண்றது?? என்னோட அக்கவுண்ட் நம்பர் தரேன்.. சீக்கிரம் அனுப்பிடுங்க..
//karthikkumar said...

நீங்க ஏங்க டென்சன் ஆகுறீங்க உங்க வீட்ல மிக்சி இருக்கா இருந்துதுன்னா செல்போன அதுல போட்டு மிக்சிய ஆன் பண்ணிடுங்க. தொல்லை ஒழிஞ்சுது. (குறிப்பு உங்க வீட்ல மிக்சி இல்லைனாலும் பக்கத்துக்கு வீட்ல கேளுங்க)//

பக்கத்து வீட்ல கேட்டேங்க.. உங்க செல்போன கொண்டுவர சொன்னாங்க..
//ஆனந்தி.. said...

ஹ ஹ...செம க்ளாஸ் இந்திரா...அந்த பைனல் டச் தான் செம செம....நல்ல இருக்கு narration !(நம்ம ஊருல அதான் ரொம்ப கலக்கல்..) :)))//

நன்றி ஆனந்தி.. அடிக்கடி வாங்க..
//"உழவன்" "Uzhavan" said...

:-)))//


1000 ரூபாய் அபராதம்னு சொல்லியும் என்ன தைரியம் உங்களுக்கு????
//தமிழ் தாசன் said...

:)//


1000 ரூபாய்..
//logu.. said...

ada paavame... vada poche.. tooo lattttta?.

mmm.. inniku sangavi veetuku poi aattaiya potravendiyathuthan..//

சங்கவி உங்க வடைக்கு ஆபத்து..


//ha..ha... enna oru kolaveri?

Polachukuveenga..//


டாங்க்ஸ்ங்க..
//tamil blogs said...

தமிழ் வலைப்பூக்கள் உங்களுக்கான புதிய‌த் தளம் உங்கள் படைப்புக்களை இங்கே பகிர்ந்துக்கொள்ளுங்கள்.எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://tamilblogs.corank.com///

தகவலுக்கு நன்றி
ஃஃவார்த்தை said...

//இது ரொம்ப முக்கியம்................. இடம் கெடச்சா உடனே "பப்ளிகுட்டி" பண்ணவேண்டியது//

ஹிஹிஹி எல்லாம் ஒரு விளம்பரம் தான்..

//ஓ....வாட் எ கேரிங் பிரண்ட். 19 வயசு பையனுக்கு இப்டி புத்தி சொல்ற மாதிரி ஒரு நல்ல கேர்ள் பிரண்ட் கெடச்சா......வெளங்கிரும்....//

ரொம்ப புகழாதீங்க..

//நா லவ் பண்றேனு உனக்குப் பொறாமைனு சொல்லிட்டான்.

:)))))))))) க.க.க.போ.... :))))))))))))))))))))//

இத கேட்டு தாங்க கடுப்பாய்ட்டேன்..

//பாஷ் இந்திரா..... சொந்த செலவில் சூன்யம் வைத்துக்கொள்வதில் உன்னை மிஞ்ச யாருமில்லை என மறுபடியும் நிருபித்து விட்டாய்....//

நன்றி நன்றி நன்றி
//வெறும்பய said...

மறுபடியும் ஆரம்பத்திலேருந்தா... !!!!!!!!!!!!!!!//


அந்தக் கொடுமைய கேக்காதீங்க..
//ராதை/Radhai said...

செம காமெடி :) ஆனா தலைப்பு ஒரு மாதிரி உறுத்தாலாயிருந்தது இந்திரா..:)//


ஏனுங்க?? அந்த செல்போன் கண்டுபிடிச்சவர் நீங்க தானோ???
//அரசன் said...

ஹ ஹ ஹ ஹ ஹ ஹ....

நல்லா இருக்குங்க ...//


டாங்க்ஸ்ங்க..
//vinu said...

iyaaaaaaaaaaaaaaaaaaaa me the 75thuuuuuuuu//

அட ஆமாங்க..
ட்ரீட் குடுங்க வினு
//Ravi kumar Karunanithi said...

saththiyamaa nan kandu pidikkalai.//

அதெல்லாம் நம்பமாட்டோம்..
உளவுத்துறை டீம் வந்துகிட்டேயிருக்கு..
//சிவகுமாரன் said...

வாழ்க வாழ்க செல்போன் சேவை. இல்லேனா எப்படி இந்த மாதிரி பதிவு எழுதி சிரிக்க வைக்கிறதாம் ?//

அதுனால மன்னிச்சு விட்டுடலாம்னு சொல்றீங்களா???
நெவர்...
//Chitra said...

காதில் செல் போன் படம் - மிரட்டல்!
உங்கள் பதிவை வாசித்து விட்டு சிரித்து கொண்டு இருக்கிறேன். கண்டு பிடிச்சவன் காதில், செல் போன் மாட்டி விட்டுருவேன் என்று நல்லா மிரட்டுறீங்களே!//

எப்புடிஇஇஇஇஇ...
நாங்கள்லாம் டெரரா மெரட்டுவோம்ல..
//பன்னிக்குட்டி ராம்சாமி said...

மேடம்ஜி மேடம்ஜி....எனக்கும் ரெண்டு வாரமா லவ் பெயிலியர்..... கொஞ்சம் உங்க நம்பர் கொடுத்து உதவுறீங்களா?//


வேணாம்... அழுதுடுவேன்..
//philosophy prabhakaran said...

அந்த பையனுக்கு ஒருவித மனநோய் இருக்கிறது... மேலும் அவன் உங்களுடைய அன்புக்காக ஏங்குகிறான்... பதிவு போட்டு காமெடி செய்யும் விஷயமல்ல... கொஞ்சம் சீரியசாக சிந்திக்கவும்... முடிந்தால் அவன்டுய பெற்றோருக்கு தெரியப்படுத்தவும்...//

முயற்சி பண்றேங்க..
ஆனா நீங்க டென்சன் ஆவாதீங்க..
//தமிழ் திரட்டி said...

தமிழ் திரட்டி உங்களுக்கான புதிய‌த் தளம் உங்கள் படைப்புக்களை இங்கே பகிர்ந்துக்கொள்ளுங்கள்.எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://tamilthirati.corank.com///


தகவலுக்கு நன்றி
//சி.பி.செந்தில்குமார் said...

1000 அபராதம் கட்டனுமா?ஹா ஹா ஹா நாங்க செல் பில்லே கட்டாதவங்க//

மிஸ்டு காலுக்கெல்லாம் பில்லு வராதுங்க செந்தில்..
//வைகை said...//

//ஒங்க நம்பர்ல இருந்தே அவனுக்கு போன் பன்னி நம்பர மாத்திட்டேன்னு சொல்லிருங்க!//

மறுபடியும் சொந்த காசுலயே சூன்யம் வச்சுக்க சொல்றீங்களா???



//Me too!! my 25th love oothikichu!!
enakkum kodunga medamji!//


ஏன் இந்த கொலைவேறி உங்களுக்கு?
ஏதோ சைட் அடிச்சியா,////

இது குட ..... ரொம்ப நன்றிங்கோ

பேசாம படிச்சியானு இல்லாம/////

இது வெரி வெரி பேட்............... உங்க பேச்சு கா
///ரெண்டு நாளைக்கு முன்னாடி ஆர்குட்ல அவனோட ப்ரொஃபைல் பாத்தேன். அட.. நம்ம பயலாச்சேன்னு சந்தோசம் வந்திடுச்சு. அதுல அவன் நம்பர் இருந்தது. உடனே அவனுக்கு போன் பண்ணிப். பேசினேன்./////

ஏங்க...!
வேதாளம்தான் முருங்கமரம் ஏறுடிச்சே...!
அத அப்படியே விட்டுடாம....
ஏன்... மெனக்கெட்டு தேடி...
உங்க தோள்ல போட்டுகிட்டீங்க...!

உங்களுக்கு இதுவும் வேணும்... இன்னமும் வேணும்...!

ஹா... ஹா... ஹா...

:)))))))))))))))))))))))))))))))))))))
(எத்தன நாள் தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது?//
அதுதானே. காதல் தானே தொலைதொடர்பு துறையையே வாழ வைக்கிறது.
SURESH said…
அடக்கண்றாவியே.. மறுபடியும் மொதல்ல இருந்தா?????

தக்காளி.. எவன்டா இந்த செல்போன கண்டுபிடிச்சது???

நாசமாப்ப்ப்ப்ப்போக.. ஒங்க நம்பர்ல இருந்தே அவனுக்கு போன் பன்னி நம்பர மாத்திட்டேன்னு சொல்லிருங்க!
சோழன் said…
இதுவரை பெண்ணின் ஆழம் நீளம் என்பதெல்லாம் இந்த செல் வந்தவுடன்
வரும் வீடியோ,SMS,எல்லாம் பார்க்கும் போது பெண்கள் மீது நம்பிக்கை போச்சு.
சோழன் said…
இதுவரை பெண்ணின் மனம் ஆழம் நீளம் என்பதெல்லாம் இந்த செல் வந்தவுடன்
வரும் வீடியோ,SMS,எல்லாம் பார்க்கும் போது பெண்கள் மீது நம்பிக்கை போச்சு.
My days(Gops) said…
LAVANYA , DIVYA' kaaaga elaaam mobile phone naasama poganumah?

enna kodumai sir idhu. ( indhu illa :P )

btw, madam'ku kalyanam aaagiducha? innum illa na, engagment aaandhuku appuram unga kitta indha post ah pathi ketukuren... apppoh paarpom ( super star rajinin style la padinga)...

varta..
ஹேமா said…
எல்லாரும் இவ்ளோ சொன்ன அப்புறம் என்ன சொல்ல இருக்கு இந்திரா !
Jaleela Kamal said…
haa haa ஹா ஹா படிச்சிட்டு செம்ம சிரிப்பு அட கன்றாவி மறுபடியும் முதலே இருந்தா?
நகைச்சுவையா இருந்தாலும் மனம் மாறும் திடமில்லா காதலும் அவங்க தரும் இம்சையும் நாசமா போகன்னு தான் சொல்லச் சொல்லுது இந்திரா..
HariShankar said…
நீங்க ஏதோ அக்கரைலே சொல்ல பொய் தானே மாடிகிடீங்க.. பதிவு நகைசுவைய இருக்கு .. இந்த கதை உண்மையா இருக்கும் பட்சத்தில் பிரபாகர் சொல்றே மாதிரி அவுங்க வீட்லே சொலீடுங்க .. பவம் க அந்த பய்யன்.. :(
HariShankar said…
நீங்க ஏதோ அக்கரைலே சொல்ல போய் தானே மாடிகிடீங்க.. பதிவு நகைசுவைய இருக்கு .. இந்த கதை உண்மையா இருக்கும் பட்சத்தில் பிரபாகர் சொல்றே மாதிரி அவுங்க வீட்லே சொலீடுங்க .. பவம் க அந்த பய்யன்.. :(

Popular posts from this blog

மரணவலி தரும் உன் மௌனம்..

நீ அழையாத என் கைபேசி..

பெண்களைக் கவர சில டிப்ஸ்