புறக்கணிப்பின் வெறுமை..



இவ்விடம் அதிகம் பரிச்சயமில்லையெனினும்

இங்கிருந்து கிளம்புவதென்பது

வீண் துக்கத்தினை உண்டாக்குகிறது.

நீ என்னைத்

தீவினையின் எல்லையில் விட்டு,

முன்னகர்ந்து செல்வதை அனுசரித்து

தடை செய்ய மனமின்றி

விலகிச் செல்கிறேன்.

இடங்களும் மனிதர்களும் உருவாக்கும்

இந்த உறவும் பிரிவும்

படர்வதற்குள் கிளம்புகிறேன்

என் ஆதிகாலக்

குகை வாழ்விற்கு.

எல்லோருக்கும் போலவே

இங்கிருந்து எடுத்துச் செல்ல

ஞாபகங்கள் உண்டு.

விட்டுச் செல்லத்தான் ஏதுமில்லை.

விட்டுச் செல்கிறேன்

புறக்கணிப்பின் வெறுமையை,

நிராகரிக்கும் வலிமை

என்னிடம் எப்போதுமிருந்ததில்லை

என்கிற சிறு குறிப்பை.

.

.----------- சல்மா (ஒரு மாலையும் இன்னொரு மாலையும் புத்தகத்திலிருந்து)

Comments

R.Gopi said…
கவிதை நல்லா இருக்கு இந்திரா...

//என் ஆதிகாலக்

குகை வாழ்விற்கு.

எல்லோருக்கும் போலவே

இங்கிருந்து எடுத்துச் செல்ல

ஞாபகங்கள் உண்டு//

அதிலும் குறிப்பாக இந்த வரிகளை மிகவும் ரசித்தேன்...
//எல்லோருக்கும் போலவே

இங்கிருந்து எடுத்துச் செல்ல

ஞாபகங்கள் உண்டு.

விட்டுச் செல்லத்தான் ஏதுமில்லை.


விட்டுச் செல்கிறேன்

புறக்கணிப்பின் வெறுமையை,

நிராகரிக்கும் வலிமை

என்னிடம் எப்போதுமிருந்ததில்லை

என்கிற சிறு குறிப்பை.

.//

நல்ல வரிகள்..!! நன்றாக இருக்கிறது கவிதை..! :)
கவிதை நல்லாருக்குங்க........(ஆனா புரியத்தான் மாட்டேங்குது....ஹி...ஹி)
வார்த்தைகளின் வலி உணர்ந்ததால் மேலும் வலிக்க உணர்கிறேன்..
படித்தேன்..
ஓவ்வொரு வார்த்தைகளாக..
ஒவ்வொரு வரிகளாக
ஆனால்
.
.
.
.
.
.

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
எவ்வளவு முயன்றும் என்னவென்று புரியவில்லை...
sakthi said…
விட்டுச் செல்கிறேன்

புறக்கணிப்பின் வெறுமையை,

நிராகரிக்கும் வலிமை

என்னிடம் எப்போதுமிருந்ததில்லை

என்கிற சிறு குறிப்பை.

நிராகரிக்கும் வலிமை எப்போதும் இளகிய மனம் உடையவர்களுக்கு ஏனோ இருப்பதில்லை தான் தாம்...
எதார்த்தம் நிறைந்த வலிகள் மிகுந்த கவிதை...
ரொம்ப நல்லாயிருக்கு.
siva said…
:)அருமை.
Vaitheki said…
நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்!
//எல்லோருக்கும் போலவே
இங்கிருந்து எடுத்துச் செல்ல
ஞாபகங்கள் உண்டு.
விட்டுச் செல்லத்தான் ஏதுமில்லை.//

ரசித்த வரிகள்.
logu.. said…
kekke bikkee...


kavithai nallrukkunrathathan apdi sollirukom..
logu.. said…
†¡..†¡.. ¦Ã¡õÀ «Õ¨Á¡ þÕìÌí¸.
¦º¡øÄ Å¡÷ò¨¾¸§Ç þø¨Äí¸.
மிககடினமாக படித்து புரிந்துகொண்ட கவிதை இந்த கவிதையில் மனிதனை மட்டுமல்லாமல் சில அஃறிணைகளையும் வைத்துப்பார்க்கிறேன் பொருந்தியே போகிறது .
உங்களை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தி உள்ளேன். வருகை தரவும்...

http://blogintamil.blogspot.com/2010/12/blog-post_28.html
தீவினையின் எல்லையில் விட்டு,

முன்னகர்ந்து செல்வதை அனுசரித்து

தடை செய்ய மனமின்றி

விலகிச் செல்கிறேன்.///

nice
விட்டுச் செல்லத்தான் ஏதுமில்லை.

விட்டுச் செல்கிறேன்

புறக்கணிப்பின் வெறுமையை,

நிராகரிக்கும் வலிமை

என்னிடம் எப்போதுமிருந்ததில்லை
என்கிற சிறு குறிப்பை.////

நல்ல இருக்குங்க
***புறக்கணிப்பின் வெறுமையை,
நிராகரிக்கும் வலிமை,
என்னிடம் எப்போதுமிருந்ததில்லை
என்கிற சிறு குறிப்பை.***

அவ்வளவு சுலபமாக எவராலும் புறக்கணிப்பின் வெறுமையை ஏற்றுக்கொள்ள முடியாதுதான் சகோ ஒரு வேலை அரசியல் வாதியாக இருந்தால் ஏற்றுக்கொள்ள முடியுமோ என்னவோ
ஹேமா said…
ஒவ்வொரு சொற்கள் முடியும்போதும் மனதின் இயலாமை !
///விட்டுச் செல்லத்தான் ஏதுமில்லை.
விட்டுச் செல்கிறேன்
புறக்கணிப்பின் வெறுமையை,
நிராகரிக்கும் வலிமை
என்னிடம் எப்போதுமிருந்ததில்லை
என்கிற சிறு குறிப்பை///அப்படீன்னு எழுதியிருக்கிறீங்க...!


வாயால் பேசும் மொழியினை மற்றவர்கள் புரிந்துகொள்ளலாம்...!

மனசு பேசும் மொழியினை... யாருக்காக எழுதப்பட்டதோ... அவர்கள் மட்டுமே அறிவர்...! அவர்களுக்கு மட்டுமே புரியும்...!
இது அவர்களுக்குள்ளே உள்ள தனி "பரிபாஷை"...! மொழி...!

அர்த்தங்கள் புரியவில்லை...!
வரிகள்... வார்த்தைகள்... அழகு...! அருமை...! நண்பி...!
///////என் ஆதிகாலக்

குகை வாழ்விற்கு.


எல்லோருக்கும் போலவே

இங்கிருந்து எடுத்துச் செல்ல

ஞாபகங்கள் உண்டு.////////

அருமையான வரிகள்...

வாழ்த்துக்கள்..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
பத்து ஆண்டினுள் பாதித்த பாடல்கள்.

Popular posts from this blog

மரணவலி தரும் உன் மௌனம்..

நீ அழையாத என் கைபேசி..

பெண்களைக் கவர சில டிப்ஸ்